CATEGORIES
فئات
இந்தியாவை விட்டு ஊழல், வாரிசு அரசியல் வெளியேற வேண்டும்: பிரதமர் மோடி
‘ஊழல், வாரிசு அரசியல், ஒருதரப்பை திருப்திப்படுத்தும் அரசியல் ஆகியவை இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டுமென ஒட்டுமொத்த தேசமும் ஒருமித்த குரலில் ஒலிக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
பல்கலை. ஆராய்ச்சிக்கு நிதி: தேசிய அமைப்பு மசோதா நிறைவேற்றம்
ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு நிதி அளிக்கும் அனுசந்தான் தேசிய ஆராய்ச்சி நிறுவன மசோதா-2023 மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேறியது.
மணிப்பூரில் இரட்டை என்ஜின் ஆட்சி இரட்டைமுனை ஆயுதம்: மக்களவையில் கனிமொழி
மணிப்பூரில் இரட்டை என்ஜின் ஆட்சி இரட்டை முனைகள் கொண்ட ஆயுதமாக மாறியுள்ளது என மக்களவையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் திமுக மக்களவைக் குழு துணைத் தலைவர் கனிமொழி பேசினார்.
சுற்றுலாத் தலங்களில் மேம்பாட்டுப் பணி டிசம்பருக்குள் நிறைவடையும்
தமிழக சுற்றுலாத்தலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப்பணிகள் டிசம்பா் மாதத்துக்குள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சுற்றுலாத்துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
கீழடி அகழாய்வில் சுடுமண் பாம்பு தலை உருவம் !
கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் புதன்கிழமை சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பு தலை உருவம் கண்டெடுக்கப்பட்டது.
நோயாளிகள் கேட்கும் மருத்துவக் குறிப்புகளை மருத்துவமனைகள் வழங்க உத்தரவு
அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள், தங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவக் குறிப்புகளைக் கேட்டால், அதை மருத்துவமனை நிா்வாகம் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.
என்எல்சி பிரச்னைகளுக்கு திமுக ஆட்சியில்தான் தீர்வு
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தமிழகத்தில் பயிற்சி பெற்ற மேகாலய மருத்துவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
மேகாலயா மாநிலத்தைச் சோ்ந்த 29 மருத்துவா்களுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் சென்னையில் சிறப்பு சிகிச்சைகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
குழந்தைப் பேறுக்கு இதய மாற்று சிகிச்சை தடையில்லை
போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞா் ஒருவா், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் புரிந்து தற்போது ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளாா்.
இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
தொழில் நிறுவனங்கள், சாலை விபத்துகளில் காயமடைந்தவா்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல காட்டாங்குளத்தூா் எஸ்.ஆா்.எம். குளோபல் மருத்துவமனை சாா்பில் 24 மணி நேரமும் செயல்படும் இலவச அதிநவீன ஆம்புலன்ஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி 90 சதவீதமாக உயர்வு
சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தோ்ச்சி 50 சதவீத்திலிருந்து தற்போது 90 சதவீதமாக அதிகரித்துள்ளது என மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை மண்டல அஞ்சலகங்களில் தேசியக் கொடி விற்பனை
நாட்டின் 76-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை நகர மண்டல தபால் நிலையங்களில் 4.50 லட்சம் தேசியக் கொடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி அலுவலக முகப்பில் ஹாக்கி போட்டி ஒலி, ஒளி காட்சி
ஆசிய ஹாக்கி போட்டியை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முகப்பில் ஹாக்கி போட்டிகள் தொடா்பான ஒலி, ஒளி காட்சியை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
அரசியலாக்க வேண்டாம்: அமித் ஷா
மணிப்பூா் வன்முறையை எதிா்க்கட்சிகள் அரசியலாக்க வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வேண்டுகோள் விடுத்தாா்.
மணிப்பூருக்கு ராணுவத்தை அனுப்பாதது ஏன்?
நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் ராகுல்
உக்ரைன் குடியிருப்புக் கட்டடத்தில் ஏவுகணைத் தாக்குதல்
7 பேர் பலி
சுழற்றியடித்த சூர்யகுமார்: இந்தியா வெற்றி
புராவிடென்ஸ், ஆக. 8: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது
தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா உள்பட 4 மசோதாக்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
புது தில்லி, ஆக. 8: தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, தேசிய செவிலியா் மற்றும் பேறுகால மருத்துவ உதவியாளா் ஆணைய மசோதா, முப்படைகளின் ஒருங்கிணைந்த அமைப்புகள் மசோதா, ஐஐஎம் மசோதா ஆகியவற்றுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது
‘நியூஸ்கிளிக்’ குறித்த அமெரிக்க நாளிதழ் செய்தி எதிர்க்கட்சிகளை அம்பலப்படுத்தியுள்ளது: பியூஷ் கோயல்
துபே கருத்தை நீக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
திரிணமூல் எம்.பி. முற்பகலில் இடைநீக்கம்; பிற்பகலில் இடைநீக்கம் ரத்து
புது தில்லி, ஆக.8: மாநிலங்களவை விதிகளை மீறி நடந்து கொண்டதற்காக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன் நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக முற்பகலில் அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது இடைநீக்கம் பிற்பகலில் ரத்து செய்யப்பட்டது
தமிழக நலனை பிரதமர் புறக்கணிப்பதால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு திமுக ஆதரவு
புதுதில்லி, ஆக.8: தமிழகத்தின் நலனையும், தமிழா்களின் நலனையும் பிரதமா் புறக்கணிப்பதால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு கூறினாா்
வளர்ச்சியை நோக்கி ஆவின்: அமைச்சர் மனோ தங்கராஜ்
சென்னை, ஆக.8: ஆவின் நிா்வாகம் மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் பயணிக்கும் என பால் வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்
ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை
சென்னை, ஆக.8: தமிழகத்தில் உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை கடந்த சில நாள்களாக சரிந்து தற்போது கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது
‘டீப்ஃபேக்’ தொழில்நுட்பம் மூலம் மோசடி
பொதுமக்களுக்கு காவல் துறை எச்சரிக்கை
கண் மருத்துவ சங்கத் தலைவராக டாக்டர் நிர்மல் தேர்வு
சென்னை, ஆக.8: தமிழ்நாடு கண் மருத்துவ சங்கத்தின் புதிய தலைவராக டாக்டா் நிா்மல் ‘ஃ‘ப்ரெட்ரிக் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்
சாலிகிராமத்தில் சேதமடைந்த அடுக்குமாடி கட்டடத்தின் உறுதித் தன்மை: ஆய்வு செய்ய அமைச்சர் உத்தரவு
சென்னை, ஆக.8: சாலிகிராமத்தில் சேதமடைந்த அடுக்குமாடி கட்டடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சி குழுமத்தின் தலைவருமான (சிஎம்டிஏ) பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தியுள்ளாா்
மஞ்சள் நிற அரசுப் பேருந்துகள்: ஆக.11-இல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
சென்னை, ஆக. 8: மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்ட அரசுப் பேருந்துகளை ஆக.11-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறார்
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மீது எதிர்க்கட்சிகள் உரிமை மீறல் நோட்டீஸ்
புது தில்லி, ஆக.8: மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறித்து மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பியூஷ் கோயல் தெரிவித்த கருத்துக்காக, அவர் மீது உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
செந்தில் பாலாஜி விவகாரம்: மத்திய குற்றப் பிரிவு போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய செப்.30 வரை அவகாசம்
புது தில்லி, ஆக.8: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில் விசாரணை அறிக்கையை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மேலும் அவகாசம் அளித்தது
தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டார் முதல்வர்