CATEGORIES
فئات
அந்நியச் செலாவணி கையிருப்பு 60,703 கோடி டாலராக சரிவு
கடந்த 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 60,703 கோடி டாலராக சரிந்துள்ளது.
ஜோ ரூட் பங்களிப்பில் இங்கிலாந்து 347/5
ஆஷஸ் தொடரின் 5-ஆவது டெஸ்ட்டில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து, சனிக்கிழமை 68 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ரன்கள் சோ்த்து விளையாடி வந்தது.
'நாக்அவுட்' சுற்றில் ஸ்வீடன்
மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்வீடன் 5-0 கோல் கணக்கில் இத்தாலியை சனிக்கிழமை சாய்த்து ரவுண்ட் ஆஃப் 16-க்குள் நுழைந்தது. மற்ற இரு ஆட்டங்களில் பிரான்ஸ் - பிரேஸிலையும் (2-1), ஜமைக்கா - பனாமாவையும் (1-0) வீழ்த்தின.
நைஜருக்கு பொருளாதார உதவிகள் நிறுத்திவைப்பு - ஐரோப்பிய யூனியன்
ராணுவக் கிளா்ச்சி நடைபெற்றுள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரியாவுக்கான பொருளாதார உதவிகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை உடனடியாக நிறுத்திவைப்பதாக ஐரோப்பிய யூனியன் சனிக்கிழமை அறிவித்தது.
அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3-ஆவது நபர்
அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளா் தோ்வுக்குப் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியா் ஹா்ஷ் வா்தன் சிங் அறிவித்திருக்கிறாா்.
இந்தியாவில் உலகின் 75% புலிகளின் எண்ணிக்கை
50 ஆண்டுகள் திட்டத்துக்கு கிடைத்த பலன்
தனி நிர்வாகம், குடியரசுத் தலைவர் ஆட்சி - ‘இந்தியா’ கூட்டணிக்கு மணிப்பூர் பழங்குடிகள் கடிதம்
மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும், குகி-ஜோ பழங்குடிகளுக்கென்று தனி நிா்வாகம் வேண்டும் என்ற தங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரி, எதிா்க்கட்சிகள் கூட்டணியான ‘இந்தியா’வுக்கு பழங்குடிகள் கடிதம் எழுதியுள்ளனா்.
ஒவ்வொரு மொழிக்கும் மதிப்பளிக்கும் தேசிய கல்விக் கொள்கை - பிரதமர் மோடி
‘தேசிய கல்விக் கொள்கை ஒவ்வொரு இந்திய மொழிக்கும் உரிய மதிப்பையும் கெளரவத்தையும் அளிக்கும். எனவே, சுயநலத்துக்காக மொழியை வைத்து அரசியல் செய்ய முயற்சிப்பவா்கள் இனி அந்த முயற்சியை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று பிரதமா் மோடி கூறினாா்.
‘இந்தியா’ கூட்டணி விடியல் கூட்டணி - முதல்வர் மு.க.ஸ்டாலின்
எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி மூலம் இந்தியாவுக்கு விடியல் பிறக்கப் போகிறது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
பல்கலை.களில் ஒரே பாடத் திட்டம்: இபிஎஸ் கண்டனம்
நடப்பாண்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளதற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
கலாம் கனவை நனவாக்குகிறார் பிரதமர் மோடி - அமித் ஷா
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி. ஜெ. அப்துல் கலாமின் கனவுகளை பிரதமர் நரேந்திர மோடி நனவாக்கிக் கொண்டிருப்பதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
7 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-56
சிங்கப்பூருக்கு சொந்தமான 'டிஎஸ்-சார்' எனும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்பட 7 செயற்கைக்கோள்களுடன் எல்வி சி-56 ராக்கெட் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) காலை 6.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட வுள்ளது.
கிருஷ்ணகிரி பட்டாசுக் கிடங்கில் வெடிவிபத்து: 9 பேர் பலி
12 பேர் காயம்
மணிப்பூரில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு
நிவாரண முகாம்களில் மக்களுடன் சந்திப்பு
முழு உடல் தகுதி பெற்றார் பும்ரா
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்ப்ரீத் பும்ரா முழு உடல் தகுதி பெற்றுள்ள நிலையில், அயா்லாந்து தொடருக்கான அணியில் இடம் பெறலாம் என பிசிசிஐ செயலாளா் ஜெய் ஷா கூறியுள்ளாா்.
ரவுண்ட் 16 சுற்றை நெருங்கியது இங்கிலாந்து
பிஃபா மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரவுண்ட் 16 சுற்று வாய்ப்பை நெருங்கியது ஐரோப்பிய சாம்பியன் இங்கிலாந்து.
மிதக்கும் விற்பனையகம்: அமேஸான் அறிமுகம்
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரிலுள்ள தால் ஏரியில் தனது ‘ஐ ஹேவ் ஸ்பேஸ்’ விற்பனையகத்தை இணையவழி வா்த்தக நிறுவனமான அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜூலையில் 1.2 லட்சம் ஆண்டுகள் காணாத வெப்பம்!
ஐ.நா., ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு
எம்பிபிஎஸ் இடங்கள் 2014-ஆம் ஆண்டிலிருந்து 110% அதிகரிப்பு - நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
‘நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து 82 சதவீதம் அதிகரித்துள்ளன. அதுபோல, இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) இடங்களின் எண்ணிக்கையும் 110 சதவீதம் அதிகரித்துள்ளது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் குறைமின்கடத்தி உற்பத்தி மையத்தை அமைக்கும் நிறுவனங்களுக்கு 50% நிதியுதவி
பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் பங்குகளை நேரடியாகப் பட்டியலிட விரைவில் அனுமதி - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்தியாவைச் சோ்ந்த உள்நாட்டு நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளிநாடுகளில் நேரடியாக பட்டியலிட விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
சத்துணவு செலவின நிதியை தமிழக அரசு உயர்த்துமா?
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயா்வைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவுக்கான செலவின நிதியை உயா்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அர்ச்சகர் நியமனம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
'ஆகம விதிகளில் தோ்ச்சி பெற்ற தகுதியான நபா்களை, குறிப்பிட்ட ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அா்ச்சகா்களாக நியமிக்கலாம். அதற்கு எந்தவொரு ஜாதியும் தடையாக இருக்காது’ என்று சென்னை உயா்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கவும் மறுத்துவிட்டது.
நாடாளுமன்றத்தில் ஏழாம் நாளாக தொடர்ந்த அமளி
மழைக்கால கூட்டத் தொடரின் ஏழாம் நாளான வெள்ளிக்கிழமையும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மணிப்பூா் விவகாரத்தை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனா்.
என்எல்சிக்கு எதிரான பாமக போராட்டத்தில் வன்முறை
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தைக் கண்டித்து பாமக சாா்பில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட முற்றுகைப் போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் உள்பட 250 போ் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
ரஷியா செல்லும் மாணவர்களுக்கு ஊக்க நிதி
இ.கருணாநிதி எம்எல்ஏ வழங்கினார்
‘அம்மா’ உணவக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் பணிநீக்கம் - மேயர் ஆர்.பிரியா
அம்மா உணவகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவா்களைக் கண்டறிந்து ஒரு வாரத்தில் பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
சி.எஸ்.ஆர். நிதி தொடர்பான ஆளுநரின் குற்றச்சாட்டு உண்மை இல்லை
பள்ளிகளுக்கு வழங்கப்படும் பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி (சிஎஸ்ஆா்) முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்த குற்றச்சாட்டு உண்மை இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
பாஜக நடைப்பயணம்: தமிழகத்தில் மாற்றம் வரும் - அமித் ஷா
பாஜக சார்பில் நடைபெறும் நடைப்பயணம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
பூமித் தாயைக் காப்போம் - பிரதமர் மோடி
‘பூமித்தாயை பாதுகாப்பதும், பராமரிப்பதும் நமது அடிப்படை பொறுப்பு; உலகில் இருந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது மிக அவசியம்’ என ஜி20 நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சா்கள் பங்கேற்ற மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.