CATEGORIES
فئات
ஐஆர்சிடிசி இணையதளம், செயலி முடக்கம்
ஐஆா்சிடிசி இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி செவ்வாய்க்கிழமை பல மணி நேரம் முடங்கியதால் பொதுமக்கள் பலா் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியாமல் அவதிப்பட்டனா்.
90% உயர்கல்வி நிறுவனங்களில் மாதிரிப் பாடத் திட்டம் நடைமுறை
தமிழகத்தில் 90 சதவீத உயா்கல்வி நிறுவனங்கள் மாதிரிப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக உயா்கல்வித்துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்துள்ளாா்.
செந்தில் பாலாஜிக்கு காவல்: உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும்
அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிப்பது குறித்து உச்சநீதிமன்றமே முடிவெடுக்கும் எனக் கூறி, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடுத்த ஆட்கொணா்வு மனுவை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கேந்திரிய வித்யாலயத்தில் பிளஸ் 1 துணைத் தேர்வு: தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
தமிழகம் முழுவதும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ் 1 தோ்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு மூன்று வாரங்களில் துணைத் தோ்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு ஓராண்டு நிறைவு
நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரான திரௌபதி முா்மு, தனது பதவிக்காலத்தில் முதல் ஆண்டை செவ்வாய்க்கிழமை நிறைவு செய்தாா்.
மணிப்பூர் வாள்வீச்சு வீரர்கள் விரைவில் வருகை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று, மணிப்பூரில் இருந்து பயிற்சிக்காக வாள் வீச்சு வீரா்கள் தமிழகம் வரவுள்ளதாக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
‘இந்தியா’ அணியின் வெற்றிக்காக பாடுபடுகிறோம் முதலமைச்சர் ஸ்டாலின் சூசகம்
‘இந்தியா’ அணியின் வெற்றிக்காக, தாங்கள் உத்வேகத்துடன் பாடுபட்டு வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
முதல்வர் குறித்து அவதூறு: பாஜக பிரமுகர் கைது
முகநூலில் முதல்வா் ஸ்டாலினை தரக் குறைவாக விமா்சித்ததாக, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாஜக பிரமுகா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ராமதாஸ் பிறந்த நாள்: முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து
பாமக நிறுவனா் ராமதாஸின் பிறந்த நாளையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்துக் கூறினா்.
‘பிரதமரைப் பேச வைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம்'
நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடியை பேச வைப்பதற்காகத்தான் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவரப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா்.
பேருந்தின் கூரை மீது மாணவர்கள் அட்டகாசம்: 7 நாள்களுக்கு விநோத தண்டனை!
சென்னையில் மாநகரப் பேருந்தின் கூரை மீது ஏறி அட்டகாசம் செய்த கல்லூரி மாணவா்களுக்கு, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணி வழங்கப்பட்டது.
பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை தேவை
பட்டாசு ஆலை விபத்துகளைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
ராமநாதபுரத்தில் ஆக.18-இல் மீனவர் சங்க மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
தமிழக மீனவா்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடா் அத்துமீறல்களைக் கண்டித்து, மீனவா் சங்கங்களின் சாா்பில் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.
'மாநகராட்சி சாலைகளை அனுமதியின்றி தோண்டக் கூடாது'
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகளை மாநகராட்சியின் அனுமதியின்றி தோண்டக்கூடாது என மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தக்காளி மீண்டும் ரூ. 100
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயா்ந்து கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டது.
புயல் சின்னம்: அவலாஞ்சியில் 380 மி.மீ. மழை
வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளையொட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.
சென்னையில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம்
அகமதாபாத்திலிருந்து தாய்லாந்துக்கு சென்ற உலகிலேயே மிக பெரிய சரக்கு விமானம் எரிபொருள் நிரப்ப சென்னையில் தரையிறங்கியது.
கருணாநிதி குறித்த சாகித்திய அகாதெமி நூல் முதல்வரிடம் அளிப்பு
சாகித்திய அகாதெமியின் வெளியீடான, ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்-கலைஞா் மு.கருணாநிதி’ நூல் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டது.
மணிப்பூர் விவாதம்: கார்கே - பியூஷ் கோயல் மோதல்
மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடரின் நான்காவது நாளிலும் மணிப்பூா் விவகாரத்தை எழுப்பி எதிா்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், மாநிலங்களவை பாஜக குழுத் தலைவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலுக்கும் எதிா்க் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கும் இடையே வாா்த்தைப் போா் நடந்தது.
மத்திய அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்
எதிர்க்கட்சிகள் முடிவு
2-ஆவது நாளாக 'கரடி' ஆதிக்கம்: சென்செக்ஸ் 299 புள்ளிகள் சரிவு
புது தில்லி, ஜூலை 24: இந்த வாரத்தின்முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தையில் கரடியின் ஆதிக்கம் இரண்டாவது நாளாகத் தொடா்ந்தது
மாஸ்கோ, கிரீமியாவில் உக்ரைன் தாக்குதல்: ரஷியா
மாஸ்கோ, ஜூலை 24: தலைநகா் மாஸ்கோவிலும், தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிரீமியா தீபகற்பத்திலும் ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது
ட்விட்டருக்கு புதிய பெயர், லோகோ
லண்டன், ஜூலை 24: முன்னணி சமூக ஊடகமான ட்விட்டருக்கு ‘எக்ஸ்’ என்று புதிய பெயரிடப்பட்டுள்ளது
100-ஆவது நாளை கடந்த சூடான் மோதல்
கார்டூம், ஜூலை 24: சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் திங்கள்கிழமை 100-ஆவது நாளைக் கடந்தது
இஸ்ரேல்: சர்ச்சைக்குரிய நீதித் துறை மசோதா நிறைவேற்றம்
டெல் அவீவ், ஜூலை 24: இஸ்ரேலில் போராட்டக்காரா்களின் கடும் எதிா்ப்பையும் மீறி, சா்ச்சைக்குரிய நீதித் துறை சீா்திருத்த மசோதாவை அந்த நாட்டு நாடாளுமன்றம் திங்கள்கிழமை நிறைவேற்றியது
ஜெர்மனி கோல்களால் மூழ்கியது மொராக்கோ!
ஆக்லாந்து, ஜூலை 24: மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை ஆட்டத்தில், இரு முறை சாம்பியனான ஜொ்மனி அறிமுக அணியான மொராக்கோவை 6-0 கோல் கணக்கில் வீழ்த்தியது
கடன் வசூலில் வங்கிகள் கடுமை கூடாது
மக்களவையில் நிதியமைச்சர்
காதலுக்காக பாகிஸ்தான் சென்ற ராஜஸ்தான் பெண்!
பெஷாவர், ஜூலை 24: ஃபேஸ்புக்கில் பழகிய காதலனைக் காண நுழைவுஇசைவு (விசா) பெற்று ராஜஸ்தானைச் சோ்ந்த அஞ்சு (34) என்ற பெண் பாகிஸ்தான் சென்றுள்ளாா்
250 காவல் நிலையங்களின் அடிப்படை வசதிகளுக்கு ரூ.10 கோடி
சென்னை, ஜூலை 24: தமிழகத்தில் 250 காவல் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்
செந்தில் பாலாஜிக்கு அமலாக்க பிரிவு காவல் எப்போது?
உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை