CATEGORIES
Kategorier
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கோவா அணி அரைஇறுதிக்கு தகுதி
11 அணிகள் இடையிலான 7வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி புதுச்சேரி செவிலியர் நிவேதா தடுப்பூசி செலுத்தினார்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நடந்து வருகிறது.
காளை விடும் திருவிழா
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் தாலுகா திருமணி கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான காளை விடும் திருவிழா நடைபெற்றது.
ஏப்.1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம்
முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
எரிவாயு விலை உயர்ந்துவிட்டது; வீட்டில் உள்ள அடுப்புகளுக்கு தீ வைத்துவிடுங்கள்: ராகுல் காந்தி கடும் தாக்கு
சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரி க்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி வருகிறது.
அண்டை மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு - பொதுமக்கள் அலட்சியமாக இருக்க கூடாது சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
சென்னை, பிப். 26அண்டை மாநிலங்களில் 2ம் அலை கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ழகத்தில் பொதுமக்கள் அலட்சியமாக இருக்க கூடாது என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ண ன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் போலீஸ் நிலையங்களுக்கு நவீன கேமராக்கள்: துணை கமிஷனர் வழங்கினார்
நெல்லை மாநகர பகுதியில் உள்ள 8 போலீஸ் நிலையங்களுக்கு 33 நவீன கேமராக்களை துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் வழங்கினார்.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளானது "மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின மாபெரும் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தளவாய் சுந்தரம் துவக்கி வைத்தார்
ஆரல்வாய்மொழி பேரூராட்சிக் குட்பட்ட தாணுமாலையன்புதூர் பகுதியில் ரூ.50 லட்சம் செலவிலும், அழகிய நகர் பகுதியில் ரூ.50 லட்சம் செலவிலும், சுப்பிரமணியபுரம் பகுதியில் ரூ.35 லட்சம் செலவிலும் ஆகிய பகுதிகளில் அலங்கார வண்ண கற்கள் அமைக்கவும், மேலும், ஆரல்வாய்மொழி முதல் செண்பகராமன்புதூர் வரையிலான சாலையில் ரூ.19.5 லட்சம் மதிப்பில் சுடுகாடு சுற்றுசுவர் மற்றும் தரைதளம் அமைப்பதற்கான பணி என மொத்தம் ரூ.1.55 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் துவக்கி வைத்து, பணிகளை விரைந்து முடிக்க துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ் என்று முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
சேலத்தில் 45வது மாநில பொதுக்குழு கூட்டம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பு
சேலம், தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம், கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவை, கைவினைஞர்கள் முன்னேற்ற கழகம் இணைந்து 45வது மாநில பொதுக்குழு கூட்டம் ஸ்ரீ நாராயண கல்யான மஹாலில் திருச்சியில் நடைபெற்றது. இந்தப் பொதுக் குழு கூட்டத்திற்கு மா நில தலைவர் சண்முக நாதன் தலைமை தாங்கினார்.
கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகளை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஆய்வு
கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெறும் இடத்திற்கு வந்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பணிகளை ஆய்வு செய்தார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ. அறிவுரையின் பேரில் சிதம்பரம் நகர அ.தி.மு.க. சார்பில், வண்டி கேட்டில் உள்ள ஜெயலலிதாவின் திரு உருவ சிலைக்கு, சிதம்பரம் நகர செயலாளர் செந்தில் குமார் தலைமையில், மாவட்ட அவைத்தலைவர் குமார் , கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பு.தா.
கிருஷ்ணாபுரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆலோசனை கூட்டம்
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
விழுப்புரம் நாகப்பட்டினம் இடையில் ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் 4 வழிப்பாதை, காரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிடப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
நெல்லை கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது
நெல்லை கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது.
மாநில அளவிலான வர்த்தக தொடர்பு பணிமனை நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் தமிழ்நாடு நீர் பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டம் நிலை 1-2 மாநில அளவிலான வர்த்தக தொடர்பு பணிமனை நிகழ்ச்சி 2 நாள் சாரதாராம் தர்பார் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலூர் வேளாண்மை துணை இயக்குனர் பிரேம் சாந்தி வரவேற்புரையாற்றினார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்க கோரியும், வீட்டுமனை பட்டாக்கள் வழங்க கோரியும், அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீத ஒதுக்கீடு வழங்க கோரியும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரே மாதத்தில் 2வது முறையாக தாலுகா அலுவலக வளாகத்தில் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல்கொள்முதல் நிலையங்களில் உணவு கழக இயக்குனர் ஆய்வு
இந்திய உணவு கழக இயக்குனர் டாக்டர்.எஸ்.பி. சரவணன் கடலூர் மாவட்டம் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஏரி ஓடையில் கழிவுநீர் கலப்பு சீரமைக்க மக்கள் கோரிக்கை
சேலம் வாய்க்கால் பட்டறை வீராணம் மெயின் ரோடு 10வது கோட்டத்தில் சீலாவரி ஏரி இருக்கிறது. இந்த ஏரி ஓடையில் பல ஆண்டுகளாக தண்ணீர் தேங்கி நின்று கொண்டிருக்கிறது.
பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகை பாதுகாப்பு பணியில் துணை ராணுவம்
பா.ஜ.க தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை புதுச்சேரி வருகிறார். பல்வேறு அரசு பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.
பனை விதை நடும் நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ளது வடகிருஷ்ணாபுரம் ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட முத்து கிருஷ்ணாபுரம் கிராம இளைஞர்கள் இணைந்து கிராமத்தின் பல பகுதிகளிலும், சாலையோரங்கள், வாய்க்கால்கள், காலியான திடல்கள் என அனைத்திலும் மண்ணுக்கு வளம் சேர்க்கும், நீராதாரத்தை பாதுகாக்கும் பனை விதை நடும் நிகழ்ச்சியை துவக்கினார்.
ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் விழா
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி சேலம், அண்ணா பூங்காவில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா மணிமண்டபத்தில் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா அரசின் சார்பில் இன்று (24.02.2021) சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா 73 வது பிறந்த நாளையொட்டி தியாகராயநகர் இல்லத்தில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார்.
73வது பிறந்த நாள் விழா ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள் விழாயொட்டி ஜெயலலிதா சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலு வலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து சிதம்பரம் இந்தியன் வங்கி கிளை முன்பு நேற்று மாலை வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு
தேனி மாவட்ட புதிய ஆட்சித் தலைவராக கிருஷ்ணனுண்ணி பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் 2012ல் இந்திய ஆட்சிப்பணியில் தேர்வு செய்யப்பட்டவர்.