CATEGORIES
Kategorier
நாமக்கல் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேர்தல் மையங்களில் ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிர் கல்லூரியில் சட்டமன்ற தேர்தலையொட்டி அமைக்கப் பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேர்தல் அலுவலர்களுக்கு 14ம் தேதி முதற்கட்ட பயிற்சி
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஆணைய அறிவிப்பின் அடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிக்கு 22 ஆயிரம் அரசு பள்ளி ஆசிரியர்கள், மத்திய, மாநில அரசு அலுவலர்கள், ஊழியர்கள் ஈடுபடுத்த உள்ளனர்.
தடையை மீறி திருவண்ணாமலையில் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம்
புதிய வகை கொரோனா பரவுவதால் திருவண்ணாமலையில் மார்ச் மாத பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
தஞ்சாவூரில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கனடா பல்கலைக்கழகத்துடன் சோனா கல்விக் குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சேலம் சோனா கல்விக் குழுமம் மற்றும் வீடெக்னாலஜிஸ் நிறுவனமும் இணைந்து கனடா நாட்டில் டொரெண்டாவிலுள்ள மருத்துவ பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆதார் சேவை மையம் நிரந்தரமாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா உட்பட்ட பச்சூர் கிராமத்தில் நீண்ட நாட்களாக ஆதார் சேவை இல்லாத காரணங் களால் அப்பகுதி மக்கள் அருகாமையில் உள்ள நாட்றம்பள்ளி தாலுகாவில் அமைந் துள்ள ஆதார் சேவை மையத்திற்கு தங்களு டைய ஆதார் கார்டில் உள்ள பிழைகளை சரி செய்ய நீண்ட நாட்களாக சென்று கொண்டிருக்கும் சூழல் உருவாகி உள்ளன.
5 லட்சம் ருத்ராட்சங்களால் ஆன 11 அடி உயர சிவலிங்கம்
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள கபாலீசுவரர் திடலில் சிவராத்திரி விழாவிற்கு சிவாம்சம் என்ற அமைப்பு சார்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் 11 அடி உயர சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
பொதுபாதை ஆக்கிரமிப்பால் அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயி
ஒரத்தநாடு அருகே உள்ள கிராமம் பொட்டலங்குடிக்காடு. இந்த பகுதியில் ஓய்வுபெற்ற மின்சார ஊழியர் திருவேங்கடம் என்பவர் தனக்கு ஓய்வின்போது கிடைத்த பணத்தில் ஆறு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி
தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு அறையில் இருந்து மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினியில் சுழற்சி முறையில் அனுப்பி வைக்கும் பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கார்த்திகா தலைமையில் நடைபெற்றது.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தாயமங்கலம் முத்துமாரியம்மன் திருக்கோவில் பங்குனித்திருவிழா சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி வழக்கத்தைவிட ஒருவாரகாலம் முன்னதாக நடத்துவது குறித்து கோயில் பரம்பரை அறங்காவலர் தலைமையிலான ஊர் முக்கியப்பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
தோனி, விராட் கோலி சாதனையை முறியடித்த பிரித்வி ஷா
விஜய் ஹசாரே டிராபியில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை சவுராஷ்டிரா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணி சமர்த் வியாஸ் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் அடிக்க 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் சேர்த்தது.
சிலிண்டரில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஆட்சியர் திவ்யா துவக்கி வைத்தார்
நீலகிரி மாவட்டம், குன்னூர் ர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோத்தகிரி பேருந்து நிலையத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் திட்ட பணியாளர்கள் கலந்து கொண்ட இருசக்கர பேரணியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்தியா-வங்காளதேசம் இடையே புதிய பாலத்தை மோடி திறந்தார்
இந்தியா வங்காளதேசம் இடையே கட்டப்பட்ட புதிய பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி
ஈரோடு மாநகராட்சி, ரயில்வே காலனி அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் கதிரவன், 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
ஆரணி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மீண்டும் அமைச்சர் ராமச்சந்திரன் தேர்வு
நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தேர்தல் விழிப்புணர்வு குறித்து கும்மி பாட்டு
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த ரங்கோலி கோலம், கும்மி பாட்டு மற்றும் வாக்காளர் உறுதிமொழி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
போலீஸ், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பொதுமக்களிடையே அச்சத்தை போக்கும் விதமாகக்கூடலில் போலீசார், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.
தேர்தல் விழிப்புணர்வு குறித்து மினி மாரத்தான் போட்டி
சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற ஆண்கள், பெண்களுக்கான மினிமாரத்தான் போட்டிகள் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தேமுதிக பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதால் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராசு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிகவினர் பட்டாசு வெடித்து தீபாவளி போன்று கொண்டாடினர்.
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா துவங்கியது
சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 40ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நேற்று துவங்கியது. முதல் நாள் விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை பங்கேற்று நாட்டிய அறங்கேற்றம் செய்த ஆடல் கலைஞர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முதலமைச்சர் பழனிசாமி
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
சிலம்பாட்டம், கரகாட்டம் கலை நிகழ்ச்சியுடன் 100 சதவீத வாக்குப்பதிவு நிறைவேற்றுவோம் என மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி புவனகிரியில் நடைபெற்றது.
100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம்
தர்மபுரி இலக்கியம்பட் டி ஊராட்சியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி வாக்காளர்களுக்கு தேர்தல் திருவிழா அழைப்பிதழை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான கார்த்திகா வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் பகல், இரவு முழுவதும் நடை திறப்பு
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் 11 ந்தேதி (வியாழக்கிழமை) சிவராத்திரியன்று பகல், இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தபால் வாக்கு அளிப்பதற்கு 1450 நபர்கள் விருப்பம் ஆட்சியர் தகவல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தபால் வாக்கு அளிப்பதற்கு 1450 நபர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.
திருப்பூரில் அரசு பஸ் டிரைவர்-கண்டக்டர் சாலையில் அமர்ந்து 'திடீர்' தர்ணா
அதிகாரி அபராதம் விதித்ததால் திருப்பூரில் நடுரோட்டில் அமர்ந்து அரசு பஸ் டிரைவர்கண்டக்டர் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசு அறிவித்த வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது
சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
சொட்டுநீர் பாசனம் மூலம் தக்காளி சாகுபடி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட மயிலாடும்பாறை பகுதியில் சொட்டு நீர் பாசனம் மூலம் தக்காளி சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்டத்தில் 'திடீர்' மழை பேச்சிப்பாறையில் 19.4 மி.மீ. பதிவு
தோவாளை, ஆரல்வாய் மொழி, கன்னியாகுமரி, கொட்டாரம், சுசீந்திரம், திருவட்டார், தக்கலை பகுதிகளிலும் மழை பெய்தது.