CATEGORIES
Kategorier
மோடி, பழனிசாமி, ஸ்டாலினை விமர்சிக்கும் கமலின் பிரசார பாடல்
மக்கள் நீதி மையத்திற்காக கமல் வெளியிட்டுள்ள தேர்தல் பிரசார பாடலில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மாநில அந்தஸ்து, புதுச்சேரிக்கு நிதி போதவில்லை பிரதமர் முன்னிலையில் ரங்கசாமி வலியுறுத்தல்
மாநில அந்தஸ்து, புதுவைக்கு நிதி போதவில்லை என்று பொதுக் கூட்ட மேடையில் பிரதமர் மோடி முன்பாக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வலியுறுத்தினார்.
பாஜகவும், பாமகவும் இரட்டை குழந்தைகள்: திருமாவளவன் பேச்சு
கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி பேசுகையில், 2021 நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தல் சவால்கள் நெருக்கடியில் உள்ள தேர்தலாகும். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 இடங்களில் போட்டியிடுகிறது. தமிழகத்தில் பாஜகவுக்கு இடமில்லை.
திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக தி.மு.க. எம்.பி. ஆ. ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
ஜல்லிக்கட்டு நாயகன் மோடி என ஓபிஎஸ் கூறியது உலகமகா நடிப்பு
மு.க.ஸ்டாலின் பேச்சு
சாலை விபத்தில் சிக்கிய இளைஞருக்கு முதலுதவி அளித்த புதுச்சேரி ஆளுநர்
சாலை விபத்தில் சிக்கி, ரத்த காயத்துடன் இருந்த இளைஞருக்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி அளித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
கமல்ஹாசனின் பிரசாரம் திடீர் ரத்து
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் நிறுவன தலைவர் கமல்ஹாசனின் இன்றைய பிரசாரம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர தினவிழா கண்காட்சி
தஞ்சாவூர், மார்ச் 23 இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு விழா வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியன்று தொடங்கி 15-8-2022 வரை நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி, மார்ச் 24 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் ஆய்வு செய்து தெரிவித்ததாவது:
கடமலைக்குண்டு அருகே தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்
தேனி, மார்ச் 24 தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடமலைக் அருகே மூலக்கடையை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 2013ம் ஆண்டு அதே கிராமத்தில் மொட்டை மலையடிவாரத்தில் காளியம்மன் கோவில் கட்டும் பணிகளை தொடங்கினர்.
வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை : அதிமுக வேட்பாளர் சேவூர் ராமச்சந்திரன் பேச்சு
ஆரணி தொகுதியிலுள்ள கிராமப்புறங்களில் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ள வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தரப்படும். என்று அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ராமச்சந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்க வேண்டுமென கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில், அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையங்களை, மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் முன்னிலையில், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் ஆறு சட்டமன்ற தொகுதி பொதுத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
வாக்களிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி: ஆட்சியர் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வாக்குசாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படுத்த சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் வழங்கினார்.
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடும் வேலைக்காரப்பெண்
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடும் வீட்டு வேலைக்காரப் பெண், பலரது கவனத்தைக் கவர்ந்துள்ளார். கலிதா மாஜி என்ற அந்த பெண்மணிக்கு வயது 32.
நாமக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவு ஆட்சியர்
நாமக்கல் மாவட்டம், சட்டமன்ற தேர்தல் 2021யையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு வரும் பணி போர்கால அடிப்படையில் விரைந்து நடைபெற்றுவருவதை ஆட்சியர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மண்புழு உரம் மற்றும் அசோலா வளர்ப்பு: மாணவிகள் செயல் விளக்கம்
விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு மண்புழு உரம், அசோலா வளர்ப்பு குறித்த செயல்விளக்கத்தை வேளாண் கல்லூரி மாணவிகள் அளித்தனர்.
நகைச்சுவை நடிகர் செந்தில் குமரி மாவட்டத்தில் பிரச்சாரம்
பிரபல நடிகர் குமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பொன்.
தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது
முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்
தஞ்சாவூரில் தேர்தல் பொது பார்வையாளர்களுடன் ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா போன்ற நடவடிக்கைகளைக் கண்காணித்திட தொகுதி வாரியாக 72 பறக்கும் படை மற்றும் 72 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்ட அனைத்து தொகுதிகளிலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
சாத்தூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நாள் தோறும் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
பொதுமுடக்கம் இல்லை, கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்: சுகாதாரத் துறை முதன்மைச் செயலர்
தமிழகத்தில் பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை அதேவேளையில் தேவைப்பட்டால் சில கட்டுப்பாட்டுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுச்சேரி தாவரவியல் பூங்கா தூய்மைப்படுத்தும் பணி: ஆளுநர் தமிழிசை தொடக்கி வைத்தார்
புதுச்சேரி தாவரவியல் பூங்காவைத் தூய்மைப்படுத்தும் பணியை துணைநிலை ஆளுநர் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தொடக்கிவைத்தார்.
தேர்தலில் போட்டியிட்டாலும் நடிப்பை கைவிட மாட்டேன்: நடிகர் சுரேஷ் கோபி
பாரதிய ஜனதா வேட்பா ளராக தேர்தலில் போட்டி யிட்டாலும் நடிப்பை கைவிட மாட்டேன் என நடிகர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
வேகமெடுக்கும் கொரோனா பண்டிகைகளுக்கு தடை, திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு என அடுத்தடுத்து மாநிலங்கள் அதிரடி
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து, சில மாநிலங்களில் ஊரடங்கு விதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களின் நகலை எரித்து டெல்லியில் விவசாயிகள் ஹோலி கொண்டாட்டம்
மத்திய வேளாண் சட்டங்களின் நகலை எரித்து டெல்லியில் விவசாயிகள் ஹோலி கொண்டாடினர்.
திருச்சி மத்திய சிறையில் ஓட்டு போட விரும்பாத கைதிகள்
திருச்சி மத்திய சிறையில் சுமார் 210 கைதிகள் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 கைதிகள் தபாலில் ஓட்டுபோட தகுதி பெற்று இருந்தனர்.
பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் நகரமாக சென்னை உள்ளது
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி மலர வேண்டும் என்பது மக்களின் விருப்பம்
ரெங்கசாமி பிரசாரம்
இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் கொரோனாவால் பாதிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும் தமிழகத்தை சேர்ந்த வருமான 40 வயதான பத்ரிநாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
'நாய் சேகர்' மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க தயாராகும் வடிவேலு
நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடைவிதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. தற்போது அவர் ரீஎன்ட்ரிக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.