CATEGORIES
Kategorier
புதுச்சேரியில் நிதி நிறுவனம், பைனான்சியர் வீடுகள் உள்பட 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
புதுச்சேரியில் தனியார் நிதி நிறுவனங்கள், பைனான்சியர் வீடுகள் உள்பட 7 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
நேர்மையான அரசியலை 5 ஆண்டுகளில் நிரூபிப்பேன்: கமல்
"எங்களுக்கு ஆதரவு கொடுத்தால், ஐந்து ஆண்டுகளில் நேர்மையான அரசியலை நிரூபிப்பேன்,'' என, ம.நீ.ம., தலைவர் கமல் பேசினார்.
திருமங்கலம்-விருதுநகர் இரட்டை அகலப்பாதையில் அதிவேகத்தில் ரெயிலை இயக்கி பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு
திருமங்கலம் விருதுநகர் இடையே அமைக்கப்பட்ட இரட்டை அகலப்பாதையில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.கே.ராய் அதிவேகத்தில் ரெயிலை இயக்கி ஆய்வு நடத்தினார்.
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
உறையூர் வெக்காளியம்மன் 13ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவில் அறம் மக்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மக்கள் சேவகர் ரமேஷ்குமார் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார்.
தமிமுன் அன்சாரி எம்எல்ஏவுக்கு பாராட்டு
அகில உலக அதிரை சமூக ஆர்வலர்கள் சார்பில் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்ட மன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி எம்எல்ஏக்கு பாராட்டு விழா அப்துல் கபூர் (மரைக்கான் USA) தலைமையில் நடைபெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பார்ட்னராக மைந்த்ரா
சென்னை சூப்பர் கிங்ஸ் பார்ட்னராக மைந்த்ரா
அரியமான் கடற்கரையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மணல் சிற்பம்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே உள்ள அரியமான் கடற்கரையில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 100 சதவித வாக்குப்பதிவை வலியுறுத்தி அமைக்கப்பட்டிருந்த வாக்காளர் விழிப்புணர்வு மணல் சிறபத்தை பார்வையிட்டார்.
குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சாரம்
சேலம் குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரச்சாரம் மகாத்மா காந்தி ஸ்டேடியம் எதிரில் உள்ள சிவில் இன்ஜினியரிங் அசோசியேசன் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர், ஏழை இரண்டு மடங்காக உயர்வு: பியூ ரிசர்ச் ஆய்வில் தகவல்
2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் (தினசரி வருமான ரூ.725 முதல் ரூ1,450). மூன்றில் ஒரு பங்காக சுருங்கிவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அரிசி உற்பத்தியாளர்கள், தொழிலாளிகளிடம் அதிமுக வேட்பாளர் சேவூர் ராமச்சந்திரன் வாக்கு சேகரிப்பு
ஆரணி நெல் அரிசி உற்பத்தியாளர் கள், தொழிலாளிகள் ஆகியோரிடம் அதிமுக வேட்பாளரும் அமைச்சரு மான சேவூர் ராமச்சந்திரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அமமுக வேட்பாளரை ஆதரித்து டிடிவி தினகரன் வாக்கு சேகரிப்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி ,காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி ஆகிய பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து குக்கர் சின்னத்தில் வாக்கு கேட்டு சிதம்பரம் அருகே உள்ள புவனகிரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் கலந்து கொண்டு பேசுகையில், திமுக தனது கட்சியினரை நம்பவில்லை. பீகாரில் இருந்து வந்த ஐபெக் நிறுவனத்தை நம்பிக் கொண்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு உபகரணங்களை ஆட்சியர் ஆய்வு
தஞ்சாவூர் மாநகராட்சி அண்ணா நூற்றாண்டு அரங்கில் சட்டமன்ற தேர்தல் பயன்பாட்டிற்கான கொரோனா தடுப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் மாட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளும் முறை குறித்து பயிற்சிஆட்சியர் ஆய்வு
நீலகிரி மாவட்டம், உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெக்ஸ் மேல்நிலைப் பள்ளியில், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளும் முறைகள் குறித்து நடைபெற்ற பயிற்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டார்.
பிரபல தனியார் ஓட்டலில் பதுக்கி வைத்த ரூ.4 லட்சம் மதுபாட்டில் பறிமுதல்
நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக, காரைக்கால் திருநள்ளாறு சாலையில் உள்ள, பிரபல தனியார் ஓட்டல் ஒன்றில், அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த, ரூ.4 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரம் லிட்டர் மதுபாட்டில்களை, மாவட்ட கலால்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் கண்காணிப்பு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021ஐ முன்னிட்டு, வாக்குப்பதிவு மையம் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் மேற்கொள்ளும் தேர்தல் கண்காணிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்தம் மூலப்பொருட்கள் விலையேற்றம், லாரி வாடகை உயர்விற்கு எதிர்ப்பு
தீப் பெட்டி மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து தமிழகத்தில் இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளது.
காலாப்பட்டு தொகுதி சுயேட்சை வேட்பாளருக்கு கருவடிக்குப்பம் பகுதி மக்கள் ஆதரவு
புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ரமேஷ் என்கின்ற செந்திலுக்கு கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திக் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து ஆதரவு தெரிவித்தனர்.
சிதம்பரம் அதிமுக வேட்பாளர் பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பு
சிதம்பரம் தொகுதி அ.தி.முக தலைமையிலான வெற்றிக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் கே.ஏ.பாண்டியன் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியத்தில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமாகா தலைவர் வாசன் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் யுவராஜாவை ஆதரித்து நேற்று த.மா.கா. தலைவர் வாசன் பிரச்சாரம் செய்தார். முன்னதாக ஈரோட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
'விருத்தாசலத்தை தனி மாவட்டமாக்குவேன் பிரச்சாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி கட்சி சார்பில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
வாக்கு எண்ணும் மையத்தினை ஆட்சியர் நேரில் ஆய்வு
தஞ்சாவூர், மார்ச் 19 கும்பகோணம் சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு தஞ்சாவூர் மாவட்டம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வாக்குயங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கல்குவாரியை விவசாயிகள் முற்றுகை
கயத்தாறு, மார்ச் 17 கயத்தாறு பேரூராட்சி பகுதியில் ஆறாவது வார்டு அரசன்குளம் கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
நூறு சதவிகித வாக்கை வலியுறுத்தி நூதன விழிப்புணர்வு பிரச்சாரம்
திருப்பத்தூர், மார்ச் 17 திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் உள்ள ஆசிரியர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற வித்தியாசமான தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவனருள், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குடுகுடுப்பை இனத்தவர் மூலம் பூம்பூம்மாடு வைத்து நூதன முறையில் 100 சதவிகித வாக்கை வலியுறுத்தி 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரசாதம் வழங்கிய நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள்
சிதம்பரம், மார்ச் 19: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சிதம்பரம், புவனகிரி ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார்.
மஞ்சுவிரட்டில் காயமடைந்த வீரருக்கு நிவாரணம் வழங்கிய ஊர்மக்கள்
புதுக்கோட்டை, மார்ச் 18 புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் நாட்டில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காயம் அடைந்த வீரரைறு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில் நேரில் சென்று நலம் விசாரித்து அவருக்கு உதவி தொகையாக ரூபாய் 12000 வழங்கப்பட்டது.
பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்: ஆட்சியர் அறிவுரை
நீலகிரி, மார்ச் 17 நீலகிரி மாவட்டம் உதகை எச்பி .எப் மற்றும் தலைக்குந்தா ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இருசக்கர, நான்கு சக்கர வாகனம் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் நபர்கள் அனைவரும் முக்கவசம் அணிந்து செல்கிறார்களா மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம்
மேல்மலையனூர் , மார்ச் 19 மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
பட்டு சேலை வியாபாரியிடம் ரூ.20 லட்சம் பறிமுதல்
ஆரணி, மார்ச் 19 ஆரணி அருகே உரிய ஆவணங்களின்றி ரூ.20 லட்சத்தை எடுத்து சென்ற பட்டு சேலை வியாபாரி ஸ்ரீதரிடமிருந்து தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பட்டா வழங்காததை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு
திருப்பத்தூர், மார்ச் 17 திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் வாழும் பொதுமக்கள் நீண்ட காலமாக பட்டா வேண்டும் என்று வலியுறுத்தியும் தற்போது வரை பட்டா கிடைக்காத காரணத்தால் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து சுமார் 70 வீடுகளில் கருப்புக் கொடியை ஏற்றி உள்ளனர்.
நெல்லையில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை ஐ.ஜி முருகன் ஆய்வு
நெல்லை, மார்ச் 17 நெல்லையில் தேர்தல் பாதுகாப்பு பணிகளை போலீஸ் ஐ.ஜி. முருகன் ஆய்வு செய்தார்.