CATEGORIES
Kategorier
ராமேசுவரத்தில் அதிவேக விமானங்கள் அணிவகுத்து பறந்து சாகசம்
பாகிஸ்தானுடன் நடந்த போரில் வெற்றிபெற்ற பொன்விழா ஆண்டையொட்டி ராமேசுவரத்தில் அதிவேக விமானங்கள் அணிவகுத்து பறந்து சாகசம் செய்தன. அதனை ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர்.
புதிய கண்டுபிடிப்பு பிரிவில் மத்திய அரசின் பால்ஸ்ரீ விருது பெற்ற மாணவிக்கு ஆட்சியர் வாழ்த்து
தேசிய அளவில் மத்திய அரசின் பால ஸ்ரீ விருது பெற்ற மாணவி மதுரிதா விருதினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் அமைச்சர் விஜயபாஸ்கர்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகையுடன் தாலிக்குத் தங்கத்தினை வழங்கினார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
சுதந்திரத்துக்கு பின் முதல் முறையாக தூக்கிலிடப்படும் பெண் குற்றவாளி
நாடு சுதந்திரம் பெற்ற பின், பெண் குற்றவாளி ஒருவர், முதல் முறையாக தூக்கிலிடப்பட உள்ளார். உத்தர பிரதேசத்தில், இந்த சம்பவம் நடக்கவுள்ளது.
214 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வருவாய்த்துறை சார்பில் ஒருங்கிணைந்த சிறப்பு வரன் முறைத் திட்டத்தின் கீழ் 214 பயனாளிகளுக்கு ரூ.47.78 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, 251 பயனாளிகளுக்கு ரூ.30.12 லட்சம் மதிப்பிலான மாதம் ரூ.1000 பெறுவதற்கான அனுமதி ஆணை மற்றும் சமூக நலத் துறை சார்பில் 791 பயனாளிகளுக்கு ரூ.5.88 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் தங்க நாணயம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
கொரோளா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? புதுச்சேரி மதுக்கடைகளில் கலால்துறை அதிகாரிகள் ஆய்வு
கொரோனா ஊரடங்கு தளர்வினை தொடர்ந்து புதுவையில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் சிறப்பு கலால் வரி விதிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள விலைக்கு நிகராக விற்கப்படுகிறது.
புதுச்சேரி கவர்னராக இருந்த கிரண்பேடியை மாற்றியது கண்துடைப்பு நாடகம்: மு.க.ஸ்டாலின்
சட்டசபை தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருக்கின்ற நேரத்தில் புதுச்சேரி கவர்னராக இருந்த கிரண் பேடியை மாற்றியிருப்பது கண் துடைப்பு நாடகம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தி.மு.க.,வுக்கு ஓவியா பிரசாரம்!
பிரதமர் மோடிக்கு எதிராக, 'டுவிட்டரில் குரல் கொடுத்த, நடிகை ஓவியாவை, பிர சாரத்துக்கு வளைத் துள்ளது தி.மு.க., 'களவாணி படம் வாயிலாக, நடிகை ஆனவர், ஓவியா.
கிரண்பேடி நீக்கம்: புதுச்சேரி மக்களுக்கு மிகப்பெரிய வெற்றி: முதல்வர் நாராயணசாமி
ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்று முதல்வர் நாராணசாமி கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா
திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளூர் ஊராட்சி ஒன்றியம், சத்தியவாடி கிராம ஊராட்சி, வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், மருதாடு கிராம ஊராட்சி, கீழ்குவளைவேடு கிராம ஊராட்சி ஆகிய 3 கிராம ஊராட்சிகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மூலமாக முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பார்வையிட்டு, கர்ப்பினி தாய்மார்களுக்கு அம்மா மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார்.
திருமணம் முடிந்த 2 மாதங்களில் ரவுடி தலை துண்டித்து கொடூர கொலை தப்ப முயன்ற கொலையாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை
கடலூரில் ரவுடியை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடிய கும்பலில் ஒருவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
கவர்னர் கிரண்பேடி திடீர் நீக்கம்
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி திடீரென நீக்கம் செய்யப்பட்டார். தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூ டு த ல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷின் தந்தை
தமிழில் என்ன மாயம் படத்தில் அறிமுகமாகி விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருதும் பெற்றார். தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார்.
கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னசென்ட் திவ்யா தலைமையில், 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிப்பது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கடவுள் எந்த சாதியையும் அங்கீகரிப்பதில்லை; வழிபட வரும் மனிதனைத்தான் அங்கீகரிக்கிறார்: நீதிபதிகள் கருத்து
கடவுள் எந்த சாதியையும் அங்கீகரிப்பதில்லை; வழிபட வரும் மனிதனை த்தான் கடவுள் அங்கீகரிக்கிறார் என்றும் வேறுபாடு களுக்கு டையே இறைவன் இருப்பதில்லை என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு?
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்ததால் அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு இருப்பதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு
லால்குடி தாலுக்கா, நெய்க்குப்பை வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அங்கமுத்து என்பவரின் மனைவி மணக்காயி வயது 70 கணவர் இறந்துவிட்டார் குழந்தைகளும் இல்லை.
தமிழகத்தில் விரைவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார்.
கணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா
பாம்பன் பனந்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா கணபதி கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரிப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போனவர்களில் இதுவரை 58 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
2009 மக்களவைத் தேர்தலில் ப. சிதம்பரம் வெற்றி செல்லும் உயர் நீதிமன்றம்
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமும் 2000 வெளிநாட்டு விமான பயணிகள் வரலாம்: இஸ்ரேல் அமைச்சரவை அனுமதி
இஸ்ரேல் நாட்டின் அமைச்சரவை ஒவ்வொரு நாளும் 2,000 வெளிநாட்டு விமான பயணிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதி அளித்துள்ளது.
73 வகையான சீர்வரிசை பொருட்களுடன் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் : முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் நடத்தி வைத்தனர்
கோவையில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமண விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்திவைத்தனர்.
மராட்டியத்தில் டிரக் கவிழ்ந்து 16 தொழிலாளர்கள் பலி
மராட்டியத்தில் டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
திருநள்ளாறு தொகுதியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ், காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தொகுதியில், ரூ.1.31 கோடி செலவில் நடைபெற்ற, குடிநீர் குழாய் அமைப்பு பணிக்கான பூமி பூஜையில், புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் கலந்துகொண்டார்.
லோடு வேனில் கடத்திய 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி அருகே லோடு வேனில் தர்பூசணி பழங்களுக்கு கீழ் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 1 டன் எடை கொண்ட 26 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாய்மர படகு போட்டி
ஆரோக்கிபுரத்திலிருந்து கூத்தங்குழி வரையிலான பாய்மரப்படகு போட்டி நேற்று நடந்தது.