CATEGORIES
Kategorier
மனைவி பிரிந்த சோகத்தால் 18 பெண்களை கொலை செய்த கொடூர கொலையாளி கைது
மனைவி பிரிந்த சோகத்தால் 18 பெண்களை கொலை செய்த கொடூர சீரிய கொலைகாரனை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
வேதா நிலையத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும்: தமிழக அரசு முறையீடு
ஜெயலலிதா நினைவு இல்லத்தில் பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாகும் லாஸ்லியா
மலையாளத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளாராம்.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி.க்களுக்கு முக்கிய பதவி
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.க்களான பிரமிளா ஜெயபால் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் இரு முக்கிய நாடாளுமன்ற குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லையில் புதிய பாலம் சாலை விரிவாக்கப்பணி கடைகள் இடித்து அகற்றம்
நெல்லையில் புதிய பாலத்தை திறப்பதற்கும் சாலை விரிவாக்க பணிகளுக்கு இடையூறாக இருக்கும் நகர் புற வேளான் விரிவாக்க நிலையம் உள்ளிட்ட 32 வணிக நிறுவனங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றும் பணி நடந்தது.
நினைவு இல்லமானது வேதா நிலையம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச்சிலையை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
சேவூர் அருகே மொண்டிபாளையம் பெருமாள் கோவில் தேரோட்டம்
சேவூர் அருகே மொண்டிபாளையம் பெருமாள் கோவில் தேரோட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி செயலராக அறவாழி நியமிக்கப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி செயலராக நா.அறவாழி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஊராட்சி செயலராக பணியாற்றிவந்த பொ.ந.செ.சரண்யா தேவி வேலூர் மாவட்ட ஊராட்சி செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி செயலராக நா. அறவாழி நியமிக்கப்பட்டார்.
தைப்பூச திருவிழாவையொட்டி வடலூர் சத்திய ஞானசபையில் நடந்த ஜோதி தரிசனம்
தைப்பூச திருவிழாவையொட்டி வடலூர் சத்திய ஞானசபையில் இன்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட உள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது டிஜிட்டல் பேனர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவின் ஒரு பகுதியாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என, டிஜிட்டல் பேனர் வைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
விருத்தாசலம் அருகே ஏரியில் இறங்கிய அரசு விரைவுப் பேருந்து
திருப்பதியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்துகொண்டிருந்த தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி நிலைத் தடுமாறி விருத்தாசலம் அருகே ஏரியில் இறங்கியதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் மூலமாக 27 ஆயிரத்து 205 புதிய வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர்.
வாக்குச்சாவடி இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 புதிய வாக்குச்சாவடி இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணி நடந்தது.
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
நாமக்கல் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியம், கூடச்சேரி ஊராட்சி பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
ராமலிங்க சுவாமிகள் கோயில் மடத்தில் ஜோதி தரிசன விழா
புதுச்சேரி முதலியார்பேட்டை ராமலிங்க சுவாமிகள் கோயில் மடத்தில் ஜோதி தரிசன விழா நடந்தது.
காதலியுடன் சேர்த்து வைக்கக் கோரி செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம்
அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சியில் காதலியுடன் சேர்த்து வைக்கக் கோரி இளைஞர் செல்போன் டவரின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சசிகலா விடுதலை: அமமுக பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சசிகலா விடுதலை செய்யப்பட்டதை யடுத்து புதுச்சேரி மாநில அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் மாநில கழக செயலாளர் வழக்கறிஞர் வேல் முருகன் தலைமையில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
குடியரசு தினம் - உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தேசியக் கொடி ஏற்றினார்
72வது குடியரசு தினத்தையொட்டி உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், சட்டத்துறை அமைச்சர், காவல் உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
வாக்காளர் தின நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தேசிய வாக்காளர் தினம் நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டு, அதனைத்தொடர்ந்து நடைபெற்ற தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்று வழங்கி பேசுகையில்:
மாமல்லபுரத்தில் கலாசார கலை விழா தொடக்கம்
அடுத்த மாதம் 2ந்தேதி வரை நடைபெறும்
சுவாமி சகஜானந்தாவின் பிறந்த நாள் விழா
கடலூர் மாவட்டம், சுவாமி சகஜானந்தாவின் பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரத்தில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது நினைவு மண்டபத்தில் உள்ள சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மணிமண்டப வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
புதுச்சேரி அரசை கண்டித்து பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
உள்ளாட்சி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும், புதுச்சேரி கவர்னர் மற்றும் புதுச்சேரி அரசை கண்டித்து, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் காரைக்காலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஏகாம்பர ஈஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம்
ஆரணி அடுத்த கொளத்தூர் கிராமத்திலுள்ள ஏகாம்பர ஈஸ்வரர் கோயிலில் திருத்தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
உலக பேட்மிண்டன் போட்டி - 2வது ஆட்டத்திலும் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி
உலக டூர் இறுதி சுற்றுபேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தடை லை நகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
கடலூர் கிழக்கு மாவட்ட அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டமும் அண்ணாமலை நகரில் நடைப்பெற்றது.
தமிழக முதல்வரை சந்தித்தது ஏன்? நடிகர் விவேக் விளக்கம்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்ந்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகர் விவேக், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்தார். முதல்வரிடம் கோரிக்க மனுவையும் அளித்தார்.
ஆஸ்கர் போட்டியில் 'சூரரைப் போற்று'
ஆஸ்கர் விருதுக்கான பொதுப் பிரிவு போட்டியில், சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெற்றுள்ளது.