CATEGORIES
Kategorier
கர்நாடகாவில் வெடிமருந்து லாரி வெடித்து 8 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
கர்நாடகாவில் வெடிமருந்து லாரி வெடித்தில் 8 பேர் உயிரிழந்தற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பல்கலை மாணவிகள் விடுதி முன்பு அமர்ந்து போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களது கல்வி கட்டணத்தை அரசு மருத்துவக் கல்லூரி கட்டணம் வசூல் செய்யவேண்டும் என கூறி கடந்த 40 நாட்களுக்கு மேலாக பல்கலைகழக மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது: 3 வீரர்கள் உயிரிழப்பு
நியூயார்க் நகரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் தேசிய பாதுகாப்பு படையின் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
மதுரையில் 2 மாடி கட்டிடம் சரிந்ததால் பரபரப்பு
மதுரையில் 2 மாடி கட்டிடம் திடீரென சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்ணிடம் இரண்டரை பவுன் தங்க தாலி செயினை பறிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை சேர்ந்தவர் கண்ணன் இவர் அந்த பகுதியில் ஒரு ஷாக் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார் இவரது மனைவி உதய சூரியா (38). இவர் வியாழக்கிழமை தோறும் கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி ஸ்ரீ சாய்பாபா கோவிலில் நடக்கும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்வது வழக்கம். வழக்கம்போல் இன்று அதிகாலையில் கோவிலுக்கு வந்து அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக பஸ் ஏறுவதற்காக கன்னியா குமரி நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை யில் நடந்து வந்து கொண்டிருந்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கிழக்கு, வடக்கு வாசல்கள் திறப்பு
ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு மற்றும் வடக்கு வாசல்களை திறக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வெள்ளை கோபுரம் கிழக்கு வாசல் மற்றும் தாயார் சன்னதி வடக்கு வாசல் ஆகியவை திறக்கப்பட்டன.
தெலுங்கானா: கொரோனா தடுப்பூசி போட்ட 18 மணிநேரத்தில் சுகாதார பணியாளர் உயிரிழப்பு
தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்ட 18 மணிநேரத்தில் 42 வயது சுகாதார பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெல்லையில் பரோட்டாவால் சிக்கிய கர்நாடக கொள்ளையர்கள்
நெல்லையில் மோட்டார் சைக்கிளில் சென்றவரிடத்தில் முகவரி கேட்பது போல வழிப்பறியில் ஈடுபட்டு விட்டு பரோட்டா சிக்கன் வாங்க காத்திருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் 4 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்தளர்.
சுவாமிதோப்பில் காமராஜர் ஆதித்தனார் கழக அலுவலகம் திறப்பு
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப் பில் காமராஜர் ஆதித்தனார் கழகத்திற்கான புதிய அலுவலகம் திறப்பு விழா நடை பெற்றது இதில் கலந்துகொண்ட அதன் மாநில தலைவர் டாக்டர் சிலம்பு சுரேஷ் அலுவலகத்தை திறந்துவைத்தார்.
கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்
நீலகிரி மாவட்டம் குன் னூ ர் இன்கோசர்வ் அலுவலகத்தில், முதன்மை செயலாளர், தலைமைச்செயல் அலுவலர் இன்கோசர்வ் மற்றும் நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியாசாஹூ தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில், கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
குமரியில் சுயதொழில் நிறுவனத்தில் ஆட்சியர் அரவிந்த் நேரில் ஆய்வு
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே சுயதொழில் தொடங்குவதன் மூலம் அவர்கள் வேலைவாய்ப்புகளை தேடி நகர்ப்புறப் பகுதிகளுக்கு குடிபெயர்வதை தடுக்கவும், ஊரக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தமிழக அரசு பல்வேறு சுயதொழில் கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது.
குமரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவ கல்லூரி டீன்
குமரியில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
தேமுதிக ஆலோசனை கூட்டம்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் நிறுவனர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க, கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கழகத் துணை செயலாளர் சுதீஷ் வழிகாட்டுதலின்படி திருப்பத்தூர் மாவட்டம் தேமுதிக சார்பில் வருகின்ற சட்டமன்ற தொகுதி தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு 72 சதவீதம் மாணவ, மாணவிகள் வருகை
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக் கூடத்துக்கு 72 சதவீதம் மாணவ மாணவிகள் வந்தனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,152 க்கு விற்பனையாகிறது.
வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதி
வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளித்து கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறக்கட்டளை சார்பில் கண் கண்ணாடி வழங்கல்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் ஏற்கனவே நடைபெற்ற கண் பரிசோதனைக்கான ஒளிமயமான வாழ்வு முகாமில் கண் குறைபாடு கண்டறியப்பட்டவர்களுக்கு அறக்கட்டளையின் சார்பில் கண் கண்ணாடிகளை வழங்கினார்.
விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி
சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
சட்டமன்றத் தேர்தல் பணிகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு
கன்னியாகுமரி ஆட்சியர் தகவல்
சுயதொழில் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ், கடன் உதவி வழங்கல்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாபானை வட்டம், மங்களக்குடி கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சுயதொழில் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் ரூபாய் 51.00 லட்சம் மதிப்பிலான கடன் உதவி களை வழங்கினார்.
குமரியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சி ஒன்றியம், மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது. இதுகுறித்து ஆட்சியர் தெரிவித்ததாவது:
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஆட்சியரிடம் வாழ்த்து
2018-2019ம் ஆண்டில் தேசிய அளவில் பதக்கங்களை வென்ற கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி வழங்கினார்.
இளையான்குடி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
இளையான்குடி அருகே கண்மாய்க்கு வரும் தண்ணீரை திருப்பி விட்டதால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் 19வது பட்டமளிப்பு விழா கல்லூரி பல்கலைக்கழக கலையரங்கில் தலைவர் வள்ளியப்பா தலைமையில் நடைபெற்றது.
தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் வந்த மாணவ, மாணவிகள்
தமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்.
பாலினமான திருநங்கையர் கேரள அரசு முடிவு
கேரள அரசின் அனைத்து துறை விண்ணப்பங்களிலும் திருநங்கையரை ஒரு பாலினமாக சேர்க்க நேற்று உத்தர விடப்பட்டு உள்ளது.
மண்பாண்டம் செய்யும் பணி தீவிரம்
கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுக்கா சேத்தியாத்தோப்பு அருகே பாழ் வாய்க்கால் பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் பல ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு தாடர்பான விசாரணைக்கு காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
கலவர தடுப்பு ஒத்திகை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, வட்டாட்சியர் சிவப்பிரகாசம், வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம், ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் ஆகியோர் கலந்துகொண்டு கலவர தடுப்பு ஒத்திகை நடத்தினார்.
அரசு அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டம், வேங்கிக்கால் பகுதி, திருவண்ணாமலை போளுர் சாலையில் தமிழ் நாடு அரசு அருங்காட்சியகத் துறை மூலமாக ரூ.1.00 கோடி மதிப்பிட்டில் அமைக்கப்பட்டு வரும் திருவண்ணாமலை மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ெ ஜயசுதா, அரசு அருங்காட்சியக காப் பாட்சியர் சரவணன் உடன் இருந்தனர்.