CATEGORIES
Kategorier
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற தமுமுகவினர் கைது
காரைக்காலில் இன்று (4-1-21) பள்ளிகள் திறப்பை கண்டித்து, காரைக்கால் அம்பகரத்தூரில் உள்ள புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் வீட்டை நேற்று முற்றுகையிட முயன்ற, தமுமுகவினர் 28 பேரை, திருநள்ளாறு போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் சென்னை வருகிறார்
மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 14 ந் தேதி மீண்டும் சென்னை வருகிறார். மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 14ந் தேதி மீண்டும் சென்னை வர திட்டமிட்டுள்ளார்.
வீரமங்கை வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
இந்திய விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி வெற்றி கண்ட முதல் பெண்மணியும், தன்னிகரற்ற வீரத்தாய் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீரமங்கை வேலுநாச்சியாரின் 291வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், சிவகங்கை சூரக்குளத்தில் அமைந்துள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசனை கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் 01.01.2021 அன்று 18 வயது பூர்த்தியாகும் மற்றும் வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் பதிவு செய்து கொள்ளாதவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்வதற்கு ஏதுவாக, சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் 16.11.2020 முதல் 15.12.2020 வரை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச சித்த மருத்துவ முகாம் ஆட்சியர் துவக்கி வைத்தார்
தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்ட இலவச சித்த மருத்துவ முகாமினை துவக்கி வைத்து, பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் மூலிகை கண்காட்சியினை பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
வளர்ச்சி திட்டப் பணிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ஆட்சியர்
சேலம் மாவட்டம், நங்கவள்ளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள் அமைக்கப்பட்டுவரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
நம்மாழ்வார் ஏழாம் ஆண்டு நினைவு நாள்
வேளாண்மையை மீட்டெடுக்க போராடிய இயற்கை வேளாண் விஞ் ஞானி வேளாண் பெருங்கு டியோன் நம்மாழ்வார் ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக நம்மாழ்வார் திருவுருவ படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் நிகழ்வும் மற்றும் நம்மாழ்வார் நினைவுக் கொடிக்கம்பம் நிறுவி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வும் நடைப்பெற்றது.
இந்தியாவில் மேலும் 5 பேருக்கு உருமாறிய கொரோனா
இதுவரை 25 பேருக்கு பாதிப்பு
வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட ஆய்வு
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு பண்டகசாலை குடொனில், வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2021 முன்னிட்டு, பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி , அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்க்கும் பணி
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை சரிபார்க்கும் பணிகளை இன்று துவக்கி வைத்தார்கள்.
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த மாடுகள்
காவலரை முட்ட பாய்ந்ததால் பரபரப்பு
திருச்சியில் 2வது நாள் பிரச்சாரம் ஸ்ரீரங்கம் கோவிலில் முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19ந்தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியில் பிரச்சாரம் தொடங்கினார். இதையடுத்து அ.தி.மு.க.வின் பிரச்சாரம் முறைப்படி 27 ந்தேதி தொடங்கியது. சென்னையில் நடந்த பிரச்சார தொடக்க நிகழ்ச்சியில் முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: ஆட்சியர் உத்தரவு
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெல் நிறுவன பொறியாளர்கள் மூலம் முதல் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஜல்லிக்கட்டுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு
கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகே பின்னலூர் கிராமத்தில் நடந்த முடிந்த நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி பானுப்பிரியாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
ஐயப்பன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் பேரூராட்சி தேசிய நெடுஞ் சாலையில் அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீ ஐயப்பன் கோயில் திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் குத்து விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.
மதுரா பவுண்டேஷனின் மனிதநேய செயல்பாடு
சில மாதங்களுக்கு முன் மறைந்த சென்னை பல்லாவரத்தை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிட மதுரா பவுண்டேஷன் நிர்வாகம் முடிவு செய்து உடனடியாக களத்தில் இறங்கி தீவிர முயற்சியால் மிக குறுகிய காலத்தில் ஒரு லட்சத்து பதிமூன்று ஆயிரம் ரூபாயை 1,13,000.00 திரட்டியது.
சட்டமன்ற பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
புதுவை சட்டமன்ற பாதுகாப்பு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
கடலூரில் ரத்ததான முகாம்
கடலூரில் நேருயுவகேந்திரா சார்பில் 30க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.
பாதாள சாக்கடை கழிவை அகற்ற ரோபோட் இயந்திர திட்டம் துவக்கம்
கடலூர் நகராட்சியில், பாதாள சாக்கடை கழிவை அகற்ற ஓஎன்ஜிசி பெரு நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கடலூர் நகராட் சியுடன் இணைந்து ரோபோட் இயந்திர திட்டத்தை தொழில் துறை அமைச்சர் சம்பத், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி முன்னிலையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
புதுவையில் குவிந்த சுற்றுலா பயணிகள் நோணாங்குப்பம் படகு குழாமில் ஒரே நாளில் ரூ5 லட்சம் வசூல்
கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் மார்ச் இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மார்ச் முதல் அக்டோபர் வரையிலும் சுற்றுலா பயணிகள் வருகை அடியோடு முடங்கியது. அதன்பிறகு, ஊரடங்கில் படிப்படியாக பல்வேறுதளர்வுகள் கொண்டுவரப்பட்டன. அப்படி இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை பெரிய அளவில் இல்லை.
நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேலம் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி சார்பாக அஸ்தம்பட்டி ரவுண்டானா பெட்ரோல் பங்க் எதிரில் தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடியில் அம்மா மினி கிளினிக் திறப்பு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றியம் பெரியதாழை கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை நாளை உதயம்
காணொலி காட்சி மூலம் தொடக்கி வைக்கிறார் முதல்வர்
மாஸ்டர் பட விவகாரம் முதலமைச்சருடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு
மாஸ்டர் படவிவகாரம் தொடர்பாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் விஜய் இன்று திடீர் என சந்தித்து பேசினார்.
அண்ணாமலை பல்கலையில் கொடி நாள் விழா
அண்ணாமலை பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் (அலகு 16) சார்பில் முல்லை இல்லத்தில் சர்வதேச மனித ஒற்றுமை மற்றும் கொடி நாள் விழா நடைபெற்றது.
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கடலூர் கிழக்கு மாவட்டம் குமராட்சி கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் புதிதாக நியமிக் கப்பட்டுள்ள நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் தலைமையில் சிதம்பரத்தில் நடைப்பெற்றது.
137 மரங்களை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடும் பணி
திருப்பத்தூர் மாவட்டம் லண்டன் மிஷன் ரோட்டில் அமைந்துள்ள திருப்பத்தூர் வனத்துறை அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் புதியதாக கட்டப்பட இருந்த நிலையில் அந்த இடத்தில் பல நூறு வருடங்களாக செழித்திருந்த 137 மரங்களை வீன் ஆகாத வண்ணம் திருப்பத்தூர் நகரின் பல்வேறு இடங்களில் வேரோடு இடம் பெயர்த்து நடப்பட்டு வருகிறது.
மதுரையை சுற்றி பார்க்க ஹெலிகாப்டர் சேவை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் தனியார் சார்பில் மதுரையில் உள்ள சுற்றுலா தலங்களை ஹெலிகாப்டர் மூலம் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மானாவாரி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
நயினார்கோவில் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் காரடர்ந்தகுடி கிராமத்தில் தமிழ்நாடு நீடித்த மானாவாரி வளர்ச்சி இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.