CATEGORIES
Kategorier
ஆரல்வாய்மொழியில் சிறப்பு மருத்துவ முகாம்
ஆரல்வாய்மொழியில் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு திறப்பு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் பொதுப்பணித்துறை மூலம் 2019-2020 ஆம் ஆண்டு ரூ.5.34 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி திறந்து வைத்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாண்டியன் எம்எல்ஏ நேரில் ஆய்வு
புயல் காரணமாக பெய்த கன மழையினால் சிதம்பரம் பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
களக்காடு வட்டார விவசாயிகள் களப்பயணம்
களக்காடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வசந்தி வழிகாட்டுதலின் படி “நுண்ணீர் பாசனம்' என்ற தலைப்பில் கீழ் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் உள்ள நீர் தொழில்நுட்ப மையம் மற்றம் திருப்பூர் அருகில் பொங்கலூரில் உள்ள வேளாண் அறிவியல் மையத்துக்கும் வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஜாய் பத்மதினே தலைமையின் கீழ் களக்காடு வட்டார விவசாயிகள் களப்பயணம் அழைத்து செல்லப்பட்டனர்.
அம்மா மினி கிளினிக் திறப்பு
கயத்தாறு யூனியனை சேர்ந்த அய்யனார் ஊத்து கிராமத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பொதுமக்களை அச்சுறுத்திய முதலை பிடிபட்டது
சிதம்பரம் அருகே உள்ள சி கொத்தங்குடி ஊராட்சியில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான நாகமுத்து நகரில் பொதுமக்கள் உபயோகப் படுத்துவதற்கான குட்டை ஒன்று உள்ளது, இந்த குட்டையில் கடந்த வாரம் பெய்த கன மழையினால் நீரில் அடித்து வரப்பட்ட முதலை குட்டி ஒன்று இந்த குட்டையில் வந்து தங்கிவிட்டது. இது கடந்த சில தினங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த நிலையில் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
யாதவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அதிமுக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவை பதவி நீக்கம் செய்யக்கோரி ராமநாதபுரம் மாவட்ட யாதவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலித் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி தனித்து போட்டியிட வேண்டும்
தேசிய பொதுச்செயலாளர் பேட்டி
சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்
சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ராஜபாளையத்தில் மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லையில் இருந்து நவகைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது
நெல்லையில் இருந்து நவகைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நவகைலாய கோவில் களுக்கு பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் ஆண்டு தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மார்கழி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையான நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.
தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது ஆட்சியர் தகவல்
நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் 2021ஐ முன்னிட்டு, மகராஸ்டிரா மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டார்.
பத்திரிகையாளர்களை தாக்கிய அதிமுக நிர்வாகி மீது புகார்
திருச்சியில் இன்று அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை செய்தி சேகரிக்க சென்ற திருச்சி நிருபர் சாம் கூட்டத்திற்குள் நுழைவதற்கு முன்பு தின நாளிதழ்கள் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் கையில் கொடுக்கப் பட்டது.
ஜனவரியில் கொரோனா தடுப்பூசி
மத்திய சுகாதார அமைச்சர் தகவல்
கால்நடை கடன் வழங்குவதில் முறைகேடு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் பகுதியில் கால்நடை கடன் வழங்குவதில் முறைகேடு நடந்ததாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோட்டுக்கு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறக்கும் பணிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்களின் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
புதுவை மீனவர் வலையில் சிக்கிய முப்படைகளில் பயன்படுத்தப்படும் டம்மி டார்கெட்
புதுச்சேரி மீனவர் வலையில் முப்படைகளில் பயன்படுத்தப்படும் டம்மி டார்கெட் சிக்கியது.
பேக்கெட்டில் மட்டுமே சமையல் எண்ணெய்களை விற்க வேண்டும்: சில்லறை விற்பனையில் விற்க தடை
பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய்களை சில்லறை விற்பனையில் (லூசில்) விற்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.
ஆந்திராவில் மர்ம நோய் தாக்கி பலர் பாதிப்பு - விவசாய நிலத்தில் பயன்படுத்திய பூச்சிக்கொல்லி மருந்தே காரணம் என எய்ம்ஸ் ஆய்வறிக்கை வெளியீடு
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஏலூரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட மர்ம நோய் காரணமாக 618 பேர் பாதிக்கப்பட்டனர். பலர் விசித்திரமாக கூச்சலிட்டுக் கொண்டே நடுரோட்டில் மயங்கி விழுந்தனர். ஒருசிலருக்கு வலிப்பு நோயும் ஏற்பட்டது.
சிதம்பரத்தில் பரபரப்பு கிராம நிர்வாக அதிகாரிகள் முற்றுகை போராட்டம்
சிதம்பரம் எம்.கே தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி பிரியா (32). இவர் சிதம்பரம் அருகே உள்ள நாஞ்சலூர் கிராமப்பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் சிதம்பரம் பகுதியில் பலத்த மழை பெய்த போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் சிதம்பரம் சப்கலெக்டர் மதுபாலன் ஆகியோர் நாஞ்சலூர் பகுதிக்கு மழை வெள்ள பகுதிகளை பார்வையிட சென்றனர்.
மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை
கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை செய்யப்பட்டது. பாதத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கடை பெயர் பலகைகளில் தமிழில் எழுத வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி விழிப்புணர்வு
காலாப்பட்டு தொகுதியில் கடைகள் நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் சட்டப்படி கடைகளில் பெயர்ப்பலகைகள் முதன்மையாக தமிழில் பெரிதாக எழிதிட வேண்டுமென கோரிக்கைகளை முன்வைத்து தமிழால் ஒன்றுபடுவோம், தமிழனை ஆளவைப்போம், தமிழை வாழவைப்போம் தமிழ்த்தேசிய அரசியல் வலிமைப்படுத்திடவும் வணிகபெருமக்கள் அனைவரும் ஆதரவு வழங்க கோரியும் நாம் தமிழர் கட்சி காலாப்பட்டு தொகுதி முழுவதும் இன்று நாம் தமிழர் கட்சி வணிகர் பாசறை சார்பில் அங்காடிகள் (கடைகள்) பெயர் பலகை தமிழில் எழுதுவதற்கு புதுச்சேரி மாநில அரசாணையை துண்டறிக்கையில் பதிவிட்டு விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட்டது.
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திமுக-கூட்டணி கட்சி உண்ணாவிரதம்
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை, புதுச்சேரியில் திமுக, தோழமைக் கட்சிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கல்
சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் தமிழன் ஜெகன், ஆணைக்கிணங்க திருவாரூர் மாவட்டத்தில் புரெவி மற்றும் நிவர் புயலில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
அம்மா மினி கிளினிக் துவக்க விழா
v
கடத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நெப்போலியன் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்கு தி.மு.க. ஒன்றிய கழக செயலாளராக ராமியண ஹள்ளியை சேர்ந்த நெப்போலியன் என்பவரை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒப்புதலோடு துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமனம் செய்தார்.
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கடலூர் கிழக்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ பாண்டியன் தலைமையில் சிதம்பரத்தில் நடைப்பெற்றது.
கோவாக்சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
முதல்கட்ட சோதனை முடிவில் ஐசிஎம்ஆர் தகவல்
தமிழ்நாடு முழுவதும் 27ந்தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்தம்
தமிழ்நாடு முழுவதும் வருகிற 27 ந்தேதி முதல் காலவரையற்றலாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதாக மாநில தலைவர் எம். குமாரசாமி கூறினார். கோவையில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் எம். குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 27ம் தேதி விடுதலையாகிறார் சசிகலா
அத்திப்பள்ளி வரை சசிகலாவிற்கு பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு உத்தரவு