CATEGORIES
Kategorier
விதிகளுக்கு புறம்பாக செயல்படும் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி திமுகவினர் திடீர் போராட்டம்
விதிகளுக்கு புறம்பாக செயல்படும் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி திமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர். சென்னை சோழிங்கநல்லூர் அருகே நடைபெற்று வரும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
மழை வெள்ளத்தில் இடிந்த வீடு, சாலைகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்
முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்
பாரதி பிறந்த நாள் விழா: அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை
மகாகவி பாரதியாரின் 139ஆவது ஆண்டு பிறந்தநாள் அரசு விழா செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இன்று காலை நடைபெற்றது.
நிவாரண நிதி வழங்கல்
கயத்தாறு பாரதி நகரில் உள்ள மக்கள் கேரளா இடுக்கி மாவட்டம் பெட்டிமுடி டிவிஷனில் மண்சரிவில் உயிரிழந்த 2 குடும்பத்தாருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக அரசின் உதவித் தொகையாக இறந்து போன சண்முகையா சரஸ்வதி மகன் விஜய்யிடம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையும், முருகன், ராமலட்சுமி அவரது மூத்த மகள் ஆகிய மூன்று பேர் இறந்ததற்கு அவர்கள் குழந்தையான அன்னலட்சுமி, சரண்யா இருவரிடமும் தலா ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வீதம் ரூ.9லட்சத்தை கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
தொடர் மழையால் புதுவையில் 61 ஏரிகள் நிரம்பின அதிகரிக்கும் நீர்வரத்தால் நீர் நிலைகளில் குளிக்க டிஜிபி தடை
புதுச்சேரியில் தொடர் மழையால் 61 ஏரிகள் நிரம்பின. அதிகரிக்கும் நீர்வரத்தால் நீர்நிலைகளில் குளிக்க டிஜிபி தடை விதித்துள்ளார்.
மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு: ஆஸ்பத்திரியில் அனுமதி
கொளத்தூர் நிகழ்ச்சியின்போது மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா 4ஆம் ஆண்டு நினைவு தினம்
சேலம் குகை மாரியம்மன் கோவில் பகுதியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் மாநகர மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதி 1ல் 46வது கோட்டம் திருச்சி மெயின் ரோடு, குகை பாலம் மற்றும் குகை மாரியம்மன் கோவில் திடலில் பகுதி கழக செயலாளர் சண்முகம் தலைமையில், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.செல்வராஜ், மாநகர மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சரவணமணி முன்னிலையில், திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து துவக்கம்
வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவிப்புயலாக வலுப்பெற்று தென்மாவட்ட கடலோரப்பகுதிகளை தாக்கும் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை செய்திருந்தது.
சித்ரா தற்கொலைக்கு யார் காரணம்? காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம் என்பது குறித்து காவல் துறையினர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
காவல்துறை கண்காணிப்பாளர் காவல் நிலையத்தில் ஆய்வு
கயத்தாறில் காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வின் செய்து அங்கு உள்ள ஆவணங்களை சரிபார்த்து வழக்கு கோப்புகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
திருப்பத்தூர் மாவட்டம் சோலையார் பேடடை மற்றும் மண்டல நாயன கொண்டா பகுதியில் தமிழ்நாடு ஸ்கூல்ஸ் கிரிக்கெட் அசோசியேஷன் மூலம். திருச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கரூர், திருப்பத்தூர், வேலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான. ஸ்டேட் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு பெரம்பலூர் அணியும், கிருஷ்ணகிரி அணியும் விளையாடியதில் பெரம்பலூர் அணி வெற்றி பெற்றது.
காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்
திருச்சி பொம்மணி சமுத்திரம் காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை சாணிப்பூண்டியில் மெய்ப்பொருள் நாயனார் குரு பூஜை
திருவண்ணாமலை அடுத்த சாணிப்பூண்டி கிராமத்தில் மெய்ப்பொருள் நாயனார் குரு பூஜை விழா நடைபெற்றது.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 15-வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 15 வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரஜினி கட்சிக்கு புதிய கொடி தயார்
நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31ந்தேதி புதிய கட்சியை தொடங்கும் தேதியை அறிவிக்க உள்ளார்.
பிரதமரின் வெளிநாட்டுப் பயண விபரங்களை வெளியிட முடியாது: இந்திய விமானப் படை
பிரதமரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதால், அவரது வெளிநாட்டுப் பயண விவரங்களை வெளியிட முடியாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) புதன்கிழமை தெரிவித்தது.
பரவலாக மழை பெய்தும் பலனில்லை - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் ஏரிகள் பாசனத்திட்டங்கள் நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தும், பெரும்பாலான ஏரிகள் போதிய நீர்வரத்தின்றி வறண்டு காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகம்-புதுவையில் பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா 3 நாள் சுற்றுப்பயணம்
பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கி உள்ளார்.
தமிழகத்தில் வரும் ஜனவரிக்குள் கொரோனா தடுப்பூசி?
முதற்கட்டமாக 5 லட்சம் பேருக்கு செலுத்த ஆயத்த பணிகள் தீவிரம்
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி அமைச்சர் பாராட்டு
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, புதிய கல்வி கொள்கைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
கூட்டணிக்கான முயற்சியா? பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பன்னாட்டு பாரதி திருவிழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு
அதிரடி அரசியல் ஆரம்பம்
சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூறாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடங்கியது
சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூறாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடங்கியது.
காலிமனைகளில் தண்ணீர் தேங்கியதால் பாம்புகள் நடமாட்டம் அதிகரிப்பு
புதுவையில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக வயல்வெளிகள், காலி மனைகளில் தண்ணீர் அதிக அளவு தேங்கியுள்ளது.
ஐம்மு-காஷ்மீரில் கடும் பனி: 350 குடும்பங்களுக்கு ரேஷன் தொகுப்புகளை விநியோகித்த ராணுவம்
ஜம்மு - காஷ்மீரில் கடும் பனிப் பொழிவால் பாதிக்கப்பட்ட கிராமப் பகுதிகளில் வசிக்கும் 350 குடும்பங்களுக்கு ரேஷன் உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகளை உள்ளடக்கிய தொகுப்புகளை இந்திய ராணுவம் புதன்கிழமை விநியோகித்தது. மேலும், மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
22 கற்சிலைகள், 17 பஞ்சலோக சிலைகள் பழமையானவைதான்
தொல்லியல் துறை அதிகாரிகள் உறுதி
கொடி நாள் வசூல் ஆட்சியர் தொடங்கி வைத்தார்
கொடி நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு முகாம் அலுவலகத்தில் கொடி நாள் வசூலை துவக்கி வைத்தார்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,551 கன அடியாக அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை ஆகியவற்றால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
திருப்பதி லட்டு விநியோகம் செய்வதாக போலி இணையதளம்
திருப்பதி லட்டு பிரசாதத்தை அனைத்து நாடுகளிலும் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்வதாக போலி இணையதளம் குறித்த விளம்பரங்கள் பரவி சமூக வலை தளங்களில் வருகின்றன.
கடலூர், கீரப்பாளையம் ஒன்றியத்தில் வெள்ள மீட்பு குறித்து ஆய்வுக் கூட்டம்: 3 அமைச்சர்கள் பங்கேற்பு
புவனகிரி அருகே கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் வெள்ள மீட்பு குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர்கள் தங்கமணி, சம்பத், சண்முகம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
அர்ஜூன மூர்த்தி, தமிழருவி மணியனுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை
புதிய கட்சி தொடங்கப்படவுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் லோசனை மேற்கொண்டு வருகிறார்.