CATEGORIES
Kategorier
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்
முதல்வரிடம் நாம் தமிழர் கட்சி மனு
புகைப்படக் கண்காட்சி
சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம், தர்மபட்டி ஊராட்சியில் மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது.
திருக்கல்யாண வைபவம்
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கான்பெட் பெட்ரோல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி 9ம் நாளாக தொடர் போராட்டம்
காரைக்காலில் மூடி கிடைக்கும் 3 கான்பெட் பெட்ரோல் நிலையங்களை உடனே திறக்க வலியுறுத்தி, நேற்று 9ம் நாளாக தொடர் போராட்டத்தை நடத்தினினர்.
தேசியம் காக்க புதுச்சேரி காக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெற்றிச்செல்வம் முன்னிலை வகிக்க ஆர்எஸ்எஸ் நிர்வாகி பழனிவேல், கலாச்சாரப் பிரிவு மாநில துணை அமைப்பாளர் இன்பசேகர் விழிப்புணர்வு புத்தகம் வழங்கினார்.
வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டம் இடையமேலூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வந்ததை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி, கடந்த 16.11.2020 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
ரஜினி அரசியல் தொடர்பாக குருமூர்த்தியுடன் விடியவிடிய ஆலோசனை நடத்திய அமித்ஷா?
ரஜினி அரசியல் தொடர்பாக குருமூர்த்தியுடன், மத்திய அமைச்சர் அமித்ஷா விடிய விடிய ஆலோசனை நடத்தியது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
உதயநிதி ஸ்டாலினுடன் சிவா எம்எல்ஏ சந்திப்பு
திமுக தலைவர் உத்தரவின்படி, இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்கின்ற பிரச்சார பயணத்தை நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் தொடங்க முயற்சித்தபோது இரண்டாம் நாளாக கைது செய்யப்பட்டு, நாகை யாழிசை திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்.
கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் சூரசம்ஹாரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான முருகன் கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல் முருகன் கோயிலில் கந்தசஷ்விழா கடந்த 15 ம்தேதி தொடங்கியது. இதனையொட்டி தினமும் காலையில் ஹாமம், சிறப்பு பூஜை, அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
அண்ணாமலை பல்கலைக்கழகம் சி.டி.இ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
கல்வி நிறுவனத்திற்கும், தொழில் துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்காக அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சென்னையின் தொழில்நுட்பக் கல்விக்கான கூட்டமைப்பு (சி.டி.இ) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
செம்பரம்பாக்கம், அடையாறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: அரசுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம்
நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 4027 கன அடி தண்ணீர் வருகிறது. கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 4027 கன அடி தண்ணீர் வருகிறது.
பொது இடங்களில் சுற்றித்திரியும் நபர்களை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு
நாமக்கல் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு தெருக்கள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரியும் நபர்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மீட்டு அரசு நிதி உதவியுடன் செயல்படும் ராசிபுரம் அணைக்கும் கரங்கள் தொண்டு நிறுவன மனநல காப்பகத்தில் சேர்க்கப் பட்டு, இங்கு தங்கும் இடம், உணவு, மருத்துவ உதவி மற்றும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
மணல் அள்ள வந்த மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த 18 மாதங்களுக்குப் பிறகு அரசு மணல் குவாரி கருப்பேரி கொள்ளிடம் ஆற்றில் புதிதாக தொடங்குவதற்கு பொதுப்பணித்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளனர்.
சத்துணவு மையங்களுக்கு தீ தடுப்பு பாதுகாப்பு கருவி வழங்கல்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலம் மற்றும் சத்து ணவுத் திட்டத் துறையின் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களுக்கு தேவையான தீ தடுப்பு பாதுகாப்பு கருவி, உணவு பரிசோதிக்கும் கொள்கலன்கள் மற்றும் பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங் கும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் சத்துணவு பணியாளர்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க, திருத்த முகாம்
தேனிமாவட்டம், உத்தமபாளையம் தாலுகா கம்பம் ஒன்றிய பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சுருக்க, திருத்த முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கம்பம் ஒன்றிய தி.மு.கவரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.
நிவர் புயல் நள்ளிரவு கரையை கடக்க வாய்ப்பு
வானிலை மையம் தகவல்
குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் கோவில்பட்டி பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சி செயலர்களுக்கும் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் தலைமை வகித்தார். மேலும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாமோதரன் முன்னிலை வகித்தார்.
நிவர் புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் 24 விமான சேவைகள் ரத்து
நிவர் புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்தில் 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிவர் புயலுக்காக இந்திய ராணுவத்தின் எட்டு குழுக்கள் இன்று சென்னை வருகை
வீடுகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வேண்டுகோள்
தோட்டக்கலை படிப்பு முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் பிஎஸ்சி விவசாயம் மற்றும் பிஎஸ்சி தோட்டக்கலை படிப்புகளும் முது அறிவியல் பிரிவில் உழவியல் தோட்டக்கலை மரபியல் பூச்சியியல் பயிர் நோயியல் நுண்ணுயிரியல் வேளாண் பொருளாதாரம் மற்றும் வேளாண் விரிவாக்க துறை ஆகிய படிப்புகளும் பட்டயபிரிவில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
குற்றங்களை குறைக்க பாடுபட்ட காவலர்களுக்கு பாராட்டு
திருப்பத்தூர் மாவட்டத்தில் விபத்து, கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, சூதாட்டம், மணல் கடத்தல், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களை குறைக்க தொடர்ந்து பாடுபட்ட சரக டிஎஸ்பி , காவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் அனைவருக்கும் ஊக்கப் பரிசு வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2 புதிய ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையை கூடுதலாக தர வேண்டும் என மருத்துவர்கள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதிமுக இளைஞர் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் அதிமுக இளைஞர் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், காமக்கூர்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மற்றும் ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் முகாமினை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே. மோகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இம்முகாமில் புதிய வாக்காளர்களிடமிருந்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டனர்.
630 கி.மீட்டர் தொலைவில் மையம் சென்னையை நோக்கி வேகமாக நகரும் புயல் சின்னம்
வானிலை மையம் தகவல்
அதிமுக இளைஞர் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்
கடலூர் கிழக்கு மாவட்டம் குமராட்சி கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை யினை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.
அரசு வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு காடு வளர்ப்பு குறித்து சிறப்பு பயிற்சி
காரைக்கால் பஜன் கோவா (பண்டித ஜவஹர்லால் நேரு அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்) அரசு வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு, ஜப்பானிய மியாவாக்கி காடு வளர்ப்பு குறித்து சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இடம் மாறுகிறது பாராளுமன்ற மகாத்மா காந்தி சிலை
தற்போது புதிய பாராளுமன்றம் கட்டுவதற்கான வேலைகள் துவங்கி நடைபெற்று வருகின்றது.
காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம்
ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் மயில்வாகனன் முன்னிலையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் காணாமல்போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது.
அதிமுகவை யாரும் கைப்பற்ற முடியாது அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேட்டி
அதிமுகவை யாரும் கைப்பற்ற முடியாது. அதிமுக ஆண்டவன் கட்சி என தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜி தெரிவித்தார்.