CATEGORIES
Kategorier
கனமழையால் நிரம்பி வழியும் பழமை வாய்ந்த படுகை அணை திடீர் சுற்றுலாத் தலமாக மாறிய புதுவை செல்லிப்பட்டு கிராமம்
புதுச்சேரி அருகே கனமழையால் நிரம்பி வழியும் பழமை வாய்ந்த படுகை அணையைக் காண, பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் செல்லிப்பட்டு கிரா மம் திடீர் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.
காரைக்காலில் நேஷனல் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி திருச்சி அணி முதலிடம் பிடித்து சாதனை
காரைக்கால் ஜப்பானீஸ் கோஜுரியு கராத்தே அசோசியேசன் மற்றும் விஆர்எஸ் கலைத்தாய் சிலம்பம் அசோசியேசன் இணைந்து, காரைக்காலில் நேஷனல் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டியை நடத்தியது.
நிவர் புயல் சேதம் முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை ஒதுக்கியது தமிழக அரசு
நிவர் புயல் சேதங்களை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியது.
திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடி வேதநாத ஈஸ்வரர் கோயிலில் மகா பைரவர் யாகம்
திருவண்ணாமலை அடுத்த வேடந்த வாடி கிராமத்தில் அமைந்துள்ள வேதநாத ஈஸ்வரர் கோயிலில் உலக நன்மைக்காக நடைபெற்ற மகா பைரவர் யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் எளிதாக சென்றுவர புறநகர் ரயிலை இயக்க வேண்டும்: கமல்ஹாசன்
கல்விச் சாலைகள் திறந்துள்ளதால் மாணவர்கள் எளிதாக சென்றுவர புறநகர் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
2 நாட்கள் ஆய்வு முடிந்தது: எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக்குழு சந்திப்பு
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவினர் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள்.
காவலர் மாதிரி தேர்வு பரிசளிப்பு விழா
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் நல்லாசியுடன் சோனியா அகாடமி நடத்தும் இலவச இறுதி காவலர் மாதிரி தேர்வு நடைபெற்றது. இதில் 229 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் இருந்து புதுச்சேரி போலீஸார் விலகல்
புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2021ல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை சமூக வலைத்தளங்களில் துவக்கிவிட்டன. குறிப்பாக வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் குழுக்கள் மூலம் தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் கருத்துகளை முன்வைக்க துவங்கியுள்ளனர்.
மனு அளிக்க வந்த பெண்ணிற்கு வலிப்பு முதலுதவி செய்த எம்எல்ஏ
மதுரையில் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி சசிகலா என்பவர் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன்னை சந்திக்க நேற்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். கணவரால் கைவிடப்பட்ட அந்த பெண்ணிற்கு இருதய பிரச்சினையுடன் உள்ள ஒரு சிறு குழந்தையும் உள்ளது.
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு
தமிழ்நாடு ஆதி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பட்டுக்கோட்டையில் சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடைய திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பாண்டியன் எம்எல்ஏ நேரில் ஆய்வு
புயல் காரணமாக பெய்த கன மழையினால் சிதம்பரம் பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை நீட்டிப்பு உச்சநீதிமன்றம்
சென்னை சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை ட் டி த் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிறந்து 45 நாட்களே ஆன குழந்தை நலக்குழு அலுவலகத்தில் ஒப்படைப்பு
நாமக்கல் மாவட்டத்தில், பிறந்து 45 நாட்களே ஆன தங்கள் குழந்தையை வளர்க்க இயலாத காரணத்தினால், அதன் பெற்றோர் குழந்தையை நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்திடம் ஒப்படைத்தார்கள். இந்த குழந்தைக்கு தேவையான உரிய உணவு வழங்கப் பட்டதுடன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூலம் மருத்துவ கண்காணிப்பு ஆகியவை குழந்தைகள் நல குழுமத்தினரால் மேற்கொள்ளப்பட்டது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெற்று மனுக்கள் தொடர்பாக மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை செய்ததுடன், மேலும் மாற்றுத்திறனா ளிகளின் கோரிக்கை மனுக்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து உரிய நலத்திட்டங்களை உடனுக்குடன் வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.
வெள்ளாளர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்
பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஏழு உட்பிரிவுகளை இனி தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரில் அழைக்க வேண்டும் என்கிற தமிழக அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து வெள்ளாளர் சங்கத்தினர் திருச்சியில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஏழு உட்பிரிவுகளை இனி தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப் பெயரில் அழைக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
மாபெரும் ரத்ததான முகாம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு டாக்டர் அம்பேத்கர் இளைஞர்கள் நற்பணி மன்றம்சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நகர செயலாளர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்றது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பாண்டியன் எம்எல்ஏ ஆய்வு
சிதம்பரம் அருகே கிள்ளை பரங்கிப்பேட்டை பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் சங்காரவேலு தலைமை வகித்தார்.
தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மலை உச்சிக்கு சென்று மகாதீபத்தை தரிசனம் செய்த நடிகை
தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மலை உச்சிக்கு சென்று மகாதீபத்தை தரிசனம் செய்த நடிகை மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.
ஸ்ரீசாய் பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
திருப்பத்தூர் தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் கொரோனாவைரஸ் தொற்றிலிருந்து சீக்கிரம் விடுபடவேண்டும் என்றும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அயராது பாடுபட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறை மற்றும் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு மாணவர்கள் சார்பாக சாமிக்கு சிறப்பு பிரார்த்தனை பூஜைகள் செய்து வழிபட்டனர்.
கொரோனா தடுப்பூசி குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 8 மாதத்துக்கும் மேலாக கொரோனா நோய் தொற்று பொதுமக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு வருகிறது. கொரோனா நோய்க்கு எதிராக சரியான தடுப்பு மருந்து இல்லாததால் நோய் தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியாமல் சர்வதேச நாடுகள் அவதிக்குள்ளாகி வருகின்றன. கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் பல்வேறு நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் 3 கொரோனா தடுப்பு மருந்துகள் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்தது
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் அதிக மழை பெய்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும்
வெதர்மேன் தகவல்
திருச்சி ஏர்போர்ட்டில் ரேஷன் கடை அமைச்சர் தொடங்கி வைத்தார்
திருச்சி ஏர்போர்ட்டில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கிவைத்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீர்
அமைச்சர், கலெக்டர் ஆய்வு
மூன்றாவது நாளாக வெறிச்சோடிய கன்னியாகுமரி
புரெவி புயல் தாக்கும் என்று அறிவிக்கப்பட்ட கன்னியாகுமரி மூன்றாவது நாளாக இன்றும் வெறிச்சோடி காணப்பட்டது.
ரூ.1295. 76 கோடி மதிப்பில் முல்லை பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்
முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கடந்த 38 மாத சம்பளத்தில், 19 மாத சம்பளம் வழங்க வலியுறுத்தி, காரைக்காலில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வெள்ளியங்கால் ஓடையில் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது
20 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்
ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: ரஜினிகாந்த் அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.