CATEGORIES
Kategorier
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி: தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வியடைந்தார். தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்று உள்ளார்.
முரசொலி மாறன் 17வது நினைவு தினம்
புதுச்சேரி தெற்கு மாநில திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 17வது னைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள தெற்கு மாநிலக்கழக அலுவலகத்தில் மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தலைமையில் முரசொலி மாறன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், கடலூர் மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
வாக்காளர் சிறப்பு முகாமில் சார் ஆட்சியர் ஆய்வு
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் பகுதியில் நடைபெற்றுவரும் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்தல் சிறப்பு முகாமினை அரூர் சார் ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.
கார் மீது லாரி மோதி கோர விபத்து 6 குழந்தைகள் உள்பட 14 பேர் பலி
உத்திரப்பிரதேசத்தில் சோகம்
கர்நாடக சிறைத்துறை பரிசீலனை: சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என தகவல்
நன்னடத்தை விதிகள்படி 129 நாட்கள் சலுகை உள்ளதால் சசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் சிறைத்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஜன.5 முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்
ஜனவரி 5ஆம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பரப்புரையைத் தொடங்குகிறார் என கே.என்.நேரு அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
விவசாய சங்கங்கள் ஆலோசனை கூட்டம்
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக அனைத்து விவசாய சங்கங்கள் ஆலோசனை கூட்டம் சிதம்பரம் சிபிஎம் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சிபிஐ சேகர் தலைமையில் நடைபெற்றது.
அதிமுக இளைஞர் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்
கடலூர் கிழக்கு மாவட்டம் பரங்கிப் பேட்டை மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.
இந்திரா காந்தி 104வது பிறந்தநாள் விழா
சிதம்பரம் வடக்கு வீதியில் அன்னை இந்திராகாந்தி படத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.பி.கே. சித்தார்த்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பேருந்துகளில் பயணிகள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பயணம் செய்கிறார்களா?
ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஆய்வு
நள்ளிரவில் டாஸ்மாக் மதுக்கடையில் திருட்டு முயற்சி
கன்னியாகுமரி மாவட்டம் தன் தாமரைக்குளம் அருகே சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த டாஸ்மாக் மதுக்கடையின் முன்பக்க இரும்பு ஷட்டர் அறுக்கப்பட்டு இருப்பதாக இன்று காலையில் தன்தாமரைகுளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இத் தகவலையடுத்து போலீசார் கடையின் மேற்பார்வையாளருக்கு கொடுத்தனர். பின்னர் கன்னியாகுமரி பாஸ்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலையில் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வரலாற்றில் முதன் முறையாக பக்தர்களின்றி நடத்தப்படும் தீபத்திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது.
அங்கன்வாடி ஊழியர்களின் அனைத்து விதமான போராட்டத்துக்கும் திமுக முழு ஆதரவு அளிக்கும். சிவா எம்எல்ஏ உறுதி
புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் மூன்று ஆண்டுகளாக அறிவித்து வழங்கப்படாமல் உள்ள போனஸை வழங்கக்கோரிடும், நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரியும் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரி சாரம் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அலுவலகம் எதிரில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., பங்கேற்று பேசியதாவது:
திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 15ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலில் முறைகேடு
இருப்பிடச் சான்றுகளை கண்காணிக்க குழு அமைத்தது தமிழக அரசு
திருவண்ணாமலை தீப திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
திருவண்ணாமலை தீப திருவிழா அன்றும், அதற்கு முந்தைய நாளிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று ஐகோர்ட்டில் கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
தேனி கண்டமனூர் அருகே கனமழைக்கு வீடு இடிந்து சேதம்
கண்டமனூர் அருகே கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மனைவி பூபதி வயது 57 இவர் கூலி தொழிலாளி இவருக்கு 2 மகன்கள் உள்ளனர் இரவில் மூவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது கனமழையின் காரணமாக இவர் வீட்டின் மண் சுவர் இடிந்து பலத்த சேதம் ஏற்பட்டது இதனால் அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு அவர்கள் மூவரையும் காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர் இது சம்பந்தமாக கணேச புரத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் வருவாய்த்துறை அலுவலருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
மாமங்கலம் நீர் வழி செங்கால் ஓடையை வட்டாட்சியர் ஆய்வு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டம் மாமங்கலம் மற்றும் கொண்டசமுத்திரம் எல்லையில் அமைந் துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருந்து வரும் செங்கால் ஓடையை காட்டுமன்னார் கோயில் வட்டாட்சியர் ராமதாஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றப்படும் என கூறினார் காட்டுமன்னார்கோயில் வட்டத்துக்கு உட்பட்ட மாமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள மேல்பாதி கிராம பொது மக்களுக்கு சுடுகாடு வசதி இல்லாததால் அருகில் இருக்கும் அரசு புறம்போக்கு இடமான செங்கால் ஒடையில் கொண்ட சமுத்திரம் ஊராட்சி விராகுடி பகுதி மக்களுக்கு சொந்தமான சுடுகாட்டை பயன்படுத்தி வந்தனர் இந்நிலையில் மாமங்கலம் மேல்பாதி கிராமத்தில் யாராவது இறந்து போனால் அப்போது பிணத்தை அடக்கம் செய்வதற்கு இரு தரப்பினரிடையே மோதல் உண்டாகி பிரச்சனை ஏற்படும் பல ஆண்டுகாலமாக தனியாக சுடுகாடு அமைப்பதற்கு தொடர்ந்து அரசு அதிகாரியிடம் மனு கொடுத்து வந்தனர்.
திருவண்ணாமலை அருகே குரு பரிகார தலத்தில் குரு பெயர்ச்சி யாகம்
திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடியில் வட ஆலங்குடி என்றழைக்கப்படும் குரு பரிகார தலத்தில் நடைபெற்ற மகா குரு பெயர்ச்சியாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் பெயர், ராசிக்கு அர்ச்சனை செய்து கொண்டனர்.
ஜோ பைடனின் மந்திரிசபையில் 2 இந்தியர்கள் இடம் பெற வாய்ப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தலைமையில் அமையவிருக்கும் புதிய மந்திரி சபையில் 2 இந்தியர்கள் இடம் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆன்லைன் நடைமுறையின் குறைபாடுகளை நீக்க கோரி: சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சண்முகா பொதுவுடமை கட்டுமான அமைப்புசாரா மற்றும் 12 புதிய நலவாரிய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக நலவாரியத்தில் பதிவு, புதுப்பித்தல், கேட்க மனு அளித்தல் ஆன்லைனில் நடை முறையின் குறைபாடுகளை நீக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நாங்குநேரி எம்எல்ஏ நாராயணன் மனு
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார் பட்டி நாராயணன் நேரில் சந்தித்து தனது நாங்குநேரி தொகுதியில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்றி தரும்படி கோரிக்கை மனு அளித்தார்.
மத்திய அமைச்சர்களுடன் புதுவை முதல்வர் சந்திப்பு
புதுடெல்லியில் மத்திய அமைச்சர்களை புதுவை முதல்வர் நாராயணசாமி செவ்வா ய்க்கிழமை சந்தித்து, பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தினார்.
மீட்பு, நிவாரண பணிகளில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சர் வலியுறுத்தல்
பருவமழையின் போது மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் ஷாஜகான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியது - முதற்கட்டமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது
2020-21ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.வி ஜயபாஸ்கர் வெளியிட்டார்.
பாஜக மாவட்ட செயலாளரை காரில் கடத்தி கொலை மிரட்டல்: விசிகவினர் மீது வழக்கு பதிவு
சீர்காழியில் பாஜக மாவட்ட செயலா ளரை காரில் கடத்தி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத் தில் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரூ.67,378 கோடி திட்டங்களுக்கு அமைச்சர் அமித்ஷா அடிக்கல் முதல்வர் பழனிசாமி தலைமையில் நவம்பர் 21இல் விழா
தமிழகத்தில் ரூ.67 ஆயிரத்து 378 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் சனிக்கிழமை (நவ. 21) அடிக்கல் நாட்டுகிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார் சசிகலா: பெங்களூரு தனி நீதிமன்றத்தில் டிடி தரப்பட்டது
சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் சசிகலாவுக்கு விதித்த அபராத தொகை ரூ.10 கோடியே 10 லட்சத்திற்கான வங்கி வரையோலை பெங்களூரு தனி நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.
இலுப்பூர் மதர்தெரசா தொழில்நுட்ப கல்லூரியில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மதர் தெரசா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் நாளை 19.11.2020 மற்றும் 20.11.2020 ஆகிய இரண்டு நாட்கள் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஜயபாஸ்கர் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார்.