CATEGORIES
Kategorier
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தைமாத பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காவல் அதிகாரிகள் பணி தொடக்க நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்ட மக்கள் பணிக்காக வார்டு விழிப்புணர்வு காவல் அதிகாரிகளின் பணியினை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூரில் குடியரசு தின விழா அணிவகுப்பில் மயங்கி விழுந்த பெண் போலீசால் பரபரப்பு
திருவள்ளூரில் குடியரசு தின விழா அணிவகுப்பில் மயங்கி விழுந்த பெண் போலீசால் பரபரப்பு ஏற்பட்டது.
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா
பிப்ரவரி 3ந் தேதி சென்னை திரும்ப திட்டம்
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிரொலி - நள்ளிரவு முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு 144 தடை: போலீசார் உத்தரவு
டெல்லியில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவை டெல்லி போலீசார் பிறப்பித்துள்ளனர்.
தேர்தல் விழிப்புணர்வு வாகன பேரணி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு
இந்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடங்கி நாமக் கல் டவுன் குளக்கரையில் முடிவடைந்தது.
மாரியம்மன் கோவிலில் கொடை விழா
கயத்தார் அருகே தெற்கு இலந்தைகுளம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கொடை விழா கடந்த கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தேசிய பெண் குழந்தைகள் தினவிழா
விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நாலாட்டின்புத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பத்மாவதி பெருமாள் நன்றி கூறினார்.
முதலியார்பேட்டை ராமலிங்க சுவாமிகள் கோயில் மடத்தில் தைப்பூச பெருவிழா
புதுச்சேரி முதலியார்பேட்டை ராமலிங்க சுவாமிகள் கோயில் மடம், கிருஷ்ண மூர்த்தி படையாட்சியார் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் திருவருட் பிரகாச வள்ளல்பெருமான் தொடங்கியருளிய 150ம் ஆண்டு தைப்பூச பெருவிழா மற்றும் முதலியார்பேட்டை சங்கத்தின் 72ம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு
தேனி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் தேனியில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலக கூட்டரங்கில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு துவக்க விழா" நடைபெற்றது.
சிக்கிம் எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவம் ஓட ஓட விரட்டியடிப்பு
மோதலில் 20 சீன வீரர்கள், 4 இந்திய வீரர்கள் காயம்
ஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் 28ந்தேதி திறந்து வைக்கிறார்
ஜெயலலிதா நினைவு இல்லத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28ந்தேதி திறந்து வைக்கிறார். தமிழகத்தின் முதலமைச்சராகவும், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதம் 5ந்தேதி மரணம் அடைந்தார்.
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் 28ம் தேதி தைப்பூச திருவிழா தேரோட்டம்
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வருகிற 28ம் தேதி தைப்பூச திருவிழா தேரோட்டம் நடக்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் துணைவேந்தர், எம்எல்ஏ பேச்சுவார்த்தை
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்வி கட்டணத்தை அரசு மருத்துவ கல்லூரி கல்வி கட்டணம் போல் குறைக்க வேண்டுமென கடந்த 47 தினங்களாக பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி
தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஏழைகாத்தம்மன், வல்லடிகார சுவாமி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்றது.
சசிகலா விரைவில் நலம்பெற சிறப்பு பூஜை
கயத்தாறில் காந்தாரியம்மன் கோவில், உசிலங்குளம் கிராமத்தில் காளியம்மன் கோவில், சாஸ்தா கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் இன்று சசிகலா விரைவில் குணமடைந்து, நலம் பெற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென் மண்டல தேர்தல் பிரிவு செயலாளரும், கயத்தார் யூனியன் தலைவருமான எஸ் .வி.எஸ்.பி. மாணிக்கராஜா தலைமையில் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடைபெற்றன.
அண்ணா நீர்நிலை பூங்கா திறப்பு விழா
நாமக்கல் நகராட்சி கொண்டி செட்டிப்பட்டி ஏரியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கரின் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா அமைத்தல், ஏரியின் இருபுறங்களிலும் கம்பி வலை வேலி அமைத்தல், நுழைவு வாயில் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொண்டி செட்டிபட்டி பகுதி தன்னார்வலர்கள் நாமக்கல் நகராட்சியுடன் இணைந்து ஏரியில் தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளார்கள்.
விழிப்புணர்வு வாகன பேரணி
நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் நாடு அரசின் போக்குவரத்து துறையின் சார்பில் 32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவையொட்டி மகளிர் தலைகவசம் அணிதல் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல் திருமாவளவன் ஆணைக்கினங்க தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில், மத்திய , அரசு வேளாண்மை சட்டங்களை முழுமையாக தடை செய்ய கோரியும் தமிழக அரசு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை தமிழக அரசே இயற்ற வேண்டும் எனவும், மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் சி.நா.சக்கரவர்த்தி தலைமை வகித்தார்.
மரக்கன்று நடும் விழா
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீராம் குரூப் நிறுவனங்கள் சார்பில் கம்பைநல்லூரிலிருந்து ஆனந்தூர் செல்லும் சாலையில் கெலவள்ளி அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ழியர்கள் ர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வில் அம்பு எய்தும் போட்டி
புதுச்சேரி மாநில அளவிலானவில் அம்பு எய்தும் போட்டிகள் முருங்கப்பாக்கம் பகுதியில் நடந்து வருகிறது.
புதுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு வார விழா
புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு தலைக்கவச விழிப்புணர்வு இருசக்கர வாகன மகளிர் பேரணியினை மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சிகள் ரத்து
தமிழக அரசு அறிவிப்பு
கூடுதல் நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் புயல் மற்றும் கடுமையான மழையின் காரணமாக விவசாயசம்பா சாகுபடி செய்த விளைநிலங்கள் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் தண்ணீரில் மூழ்கியும், அழுகியும், முளைத்துள்ளது.
கொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசிகலா மருத்துவமனையில் இருப்பார்
சசிகலாவுக்கு தற்போது காய்ச்சல் இல்லை உடல்நிலை சீராக உள்ளது என விக்டோரியா மருத்துமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா கூறி உள்ளார்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மற்றும் வீதி நாடகம் மூலம் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வினை பணகுடி காவல்துறையினர் செய்தனர்.
உக்ரைன் நாட்டில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலி
உக்ரைன் நாட்டில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடியில் நடமாடும் நியாயவிலை கடை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் கோபாலபுரம் மற்றும் நாச்சியார்புரம் ஆகிய பகுதிகளில் அம்மா நகரும் நியாய விலை கடை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு கோபாலபுரம் மற்றும் நாச்சியார்புரம் ஆகிய பகுதிகளில் அம்மா நகரும் நியாய விலை கடையினை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.
அரசின் திட்டங்களை பயன்படுத்தி மாணவர்கள் முன்னேற வேண்டும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிலும் 1978 மாணவ, மாணவிகளுக்கு ரூ.78.42 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.