CATEGORIES
Kategorier
40 ஆண்டுகளுக்கு மேலாக எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக இருந்த கேப்.ராமகிருஷ்ணன் காலமானார்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன். சினிமாவில் சண்டைப்பயிற்சி கலைஞராகவும், எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த அனைத்து படங்களிலும் அவருக்கு டூப் போட்டு நடித்தவர் இவர்தான். ஒரு சில படங்களில் நம்பியாருக்கும் டூப் போட்டு நடித்தார்.
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் ஒரு பகுதியாக சாலைப் பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் ஒரு பகுதியாக, சாலைப் பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில், கல்லூரி மாணவர்களுக்கு நேற்று கட்டுரை போட்டி நடைபெற்றது.
புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற தொகுதி, ஆயங்குடி ஊராட்சியில் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5.00 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, கழக அமைப்பு செயலாளர், காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் முருகுமாறன் தலைமை ஏற்று அடிக்கல் நாட்டினர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை அரசு பள்ளி மாணவிகள் முற்றுகை
இலவச மடிக்கணினி வழங்கக்கோரி அரசு பள்ளி மாணவிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் விருது - பொற்கிழி வழங்கும் விழா
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் விழா மற்றும் திருவள்ளுவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார்.
திருமண விழாவில் நெகிழ்ச்சி தந்தை சிலையுடன் மேடைக்கு வந்து தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சகோதரி
பட்டுக்கோட்டையில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் தந்தை சிலையுடன் மேடைக்கு வந்த மூத்த சகோதரி தனது தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது உறவினர் களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தாளவாடி அருகே வனச்சாலையில் சிறுத்தை நடமாட்டம்
தாளவாடி அருகே வனச்சாலையை சிறுத்தை கடந்த சம்பவம் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் ஆட்சியரிடம் மனு
சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத் தின் சார்பாக, கடலூர் புதுப்பாளையம் பகுதியில் உள்ள அப்துல்கலாம் நகரில் 14 ஏக்கர் அரசுக்கு சொந்தமான இடத்தை புதுப்பாளையம் விஸ்வகர்மா என போலியான சங்கத்தினை பயன்படுத்தி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் 50 ஆண்டு காலங்களாக போலியான ஆவணங்களை வைத்து பாவாடை ஆ ச்சாரி என்கின்ற நபர் ஆக்கிரமிப்பு செய்து, 50 ஆண்டு காலமாக அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் வரிவசூல் செய்து வருகிறார்.
தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அனுமதி
தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,760க்கு விற்பனையாகிறது.
ஆசிரியை வீட்டில் 25 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு
ஜெயங்கொண்டம் அருகே ஆசிரியை வீட்டில் கதவின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
போலியோ சொட்டு மருந்து முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1234 போலியோ சொட்டு மருந்து மையங்கள் 4912 சுகாதார நிலையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை வட்டார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பள்ளிகளில் நடைபெறும்.
போலியோ சொட்டு மருந்து முகாம்
சிதம்பரத்தில் அனைத்து ரோட்டரி சங்கங்கள், சிதம்பரம் நகராட்சி மற்றும் தமிழக அரசின் சுகாதார துறை ஆகியவற்றின் சார்பில் சிதம்பரம் நகர்புர சுகாதார மையத்தில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.
நெல்லையில் ஆர்ப்பாட்டம்
நெல்லை சுத்தமல்லி ஏர்வாடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக எல்லைகள் மூடல்: வாகன வாகன போக்குவரத்து கடும் பாதிப்பு
டெல்லியில் விவசாயிகளின் தொடர் போராட்டம் எதிரொலியாக எல்லைகள் மூடப்பட்டு வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்புகள், கடும் குளிர், காற்று மாசு ஏற்பட்டு காற்றின் தர குறியீடு மிக மோசமடைந்த பிரிவில் உள்ளது மற்றும் விவசாயிகளின் போராட்டம் ஆகியவற்றால் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
நெல்லையப்பர் கோவிலில் தெப்ப திருவிழா
நெல்லையப்பர் கோவிலில் நடந்த தெப்ப திருவிழா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வாகா முதல் கன்னியாகுமரி வரை - பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கார் பயணம் நிறைவு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி எல்லையில் தொடங்கிய கார் பயணம் கன்னியாகுமரியில் நேற்று நிறைவடைந்தது 32வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழா நாடு முழுவதும் நடந்து வருகிறது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் ஒரு பகுதியாக, எமதர்மன் வேடம் அணிந்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொழுநோய் விழிப்புணர்வு
கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது.
தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்களை ஆய்வு செய்த டிஜிபி சைலேந்திரபாபு
தமிழக தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ என்னும் புதிய செயலி கடந்தாண்டு துவக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் கோயிலில் வளைகாப்பு திருவிழா
திருச்சி உறையூர் சாலை ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ குங்குமவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ குங்குமவள்ளிக்கு 71 ஆவது ஆண்டு வளையல் காப்பு திருவிழா நடைபெற்றது.
தைப்பூச விழாவில் விமான அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்
திருவண்ணாமலை அடுத்த நெய்வாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற தைப்பூச விழாவில் செக்கிழுத்தும், முதுகில் அலகி குத்தி முருகருக்கு மாலை அணிவித்தும், கொதிக்கும் எண்ணெய்யில் வடை சுட்டும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
குறுந்தொழில் முனைவோர் சிறப்பு திட்டம் துவக்கம்
சிறப்பு திறனுடையோர் குறுந்தொழில் முனைவோர் சிறப்பு திட்டத்தை கடலூர் சார் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
6 தொகுதிகளுக்கும் நாடார் வேட்பாளர்கள் நாடார் மக்கள் பேரவை தீர்மானம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளுக்கும் நாடார் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று நாடார் மக்கள் பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் புதிதாக 11,427 பேருக்கு கொரோனா தொற்று: 118 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,57,610 உயர்ந்துள்ளது.
10 மாதங்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் தீர்த்த கிணறுகளை திறக்க அனுமதி
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் கடந்த மார்ச் மாதம் 23ந் தேதி முதல் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளும் மூடப்பட்டன.
அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் ஆண் குழந்தை சேர்ப்பு
மாவட்ட சமூக நல அலுவலர் கந்தன் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
காஷ்மீரில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் திருமலை திருப்பதி கோயில்
கன்னியாகுமரி, ஜன.28காஷ்மீரில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் திருப்பதி கோயில் அமைக்க அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று திருமலை திருப்பதி தேவஸ் தான சேர்மன் சுப்பாரெட்டி மற்றும் உறுப் பினர் சேகர்ரெட்டி ஆகியோர் கூறினர்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் நிறைபுத்தரிசி பூஜை வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் வருஷாபிஷேக விழா
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.