CATEGORIES
Kategorier
Multilac நிரூபிக்கப்பட்ட தீர்வு வழங்குநராக அங்கிகாரம்
Multilac, 2021 தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளத்தின் விருதுகளில் பல விருதுகளை தனதாக்கியிருந்தது. அண்மையில் இடம்பெற்ற இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில், பெரிய பிரிவில் தங்க விருதையும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் சிறந்த செயற்பாட்டாளருக்கான விருதையும் Multilac வென்றுள்ளது.
நிபந்தனை பிணையில் ஹிஜாஸ் விடுதலை
மேன்முறையீட்டு நீதிமன்றம் பெப்ரவரி 7ஆம் திகதியன்று வழங்கிய பிணை உத்தரவுக்கு அமைய சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, புத்தளம் மேல் நீதிமன்றத்தால் நேற்று (09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
விரைவில் மாகாண சபைத் தேர்தல்
விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று, தேர்தலும் இடம்பெறும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. மஸ்தான் தெரிவித்தார்.
தேசிய வருமானத்துக்குப் பங்களிப்பு செய்தவர்கள் நாடோடிகளாக அலைகின்றனர்
செங்கொடிச் சங்கம் கவலை
கொவிட்-19க்கு புதிய மருந்து அறிமுகம்
இந்தியாவில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்கள் பயன்படுத்தும் வகையில், ஃவபிஸ்பிரே ( FabiSpray ) என்னும் மூக்கின் வழியாகச் செலுத்தும் மருந்தை கிளென்மார்க் ( Glenmark) எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா பரிசோதனை கிளிநொச்சியில் மந்தம்
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்புத் தெரிவித்துள்ளது.
கல்லூரிகளுக்கு விடுமுறை: 'பர்தா' விவகாரத்தால் கர்நாடகாவில் பதற்றம்
கர்நாடகாவில் முஸ்லிம் மாணவியர், கல்லூரிக்கு 'பர்தா' அணிந்து வரும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பதற்றமான சூழல் நிலவுவதை அடுத்து, இரண்டு கல்லுாரிகள் நேற்று முன்தினம் (07) விடுமுறை அறிவித்தன.
இரத்தினக்கல் கொள்வனவில் வரி பேருவளை நகர சபையில் யோசனை
துசித குமார டி சில்வா பேருவளை நகர சபைக்கு உட்பட்ட இரத்தினக்கல் ஏல சந்தையில் இருந்து இரத்தினக்கல்லை கொள்வனவு செய்யும் வெளிநாட்டவர்கள், பேருவளை நகர சபைக்கு வரி செலுத்த வேண்டுமென்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இன்று இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி: இந்தியாவை எதிர்கொள்ளுமா மேற்கிந்தியத் தீவுகள்?
இந்திய, மேற்கிந்தியத் தீவுகளுக்கு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது, அஹமதாபாத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
அலைபேசி பயன்படுத்த பஸ் சாரதிகளுக்குத் தடை
அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், பணியின்போது அலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் 16 தமிழக மீனவர்கள் கைது
நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 16 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
மாணவர்களுக்கு தடுப்பூசி; தேவையற்ற பயம் அவசியமற்றது
தடுப்பூசிகளை செலுத்திகொண்ட கொழும்பு மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கு, எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை எனத் தெரிவிக்கும் கொழும்பு மாவட்டப் பாடசாலைகளுக்கான சுகாதார காரியாலயத்தின் தலைவர் வைத்திய சி.எம்.ஜயலத், தடுப்பூசிகள் தொடர்பில் தேவையற்ற பயம் கொள்வது, அவசியமற்றது எனவும் தெரிவித்தார்.
ஷங்கரின் மகள்களுக்கு மறுப்பு
பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவான 'சர்க்காரு வாரி பாட்டா' என்ற திரைப்படம் வரும் மே மாதம் 12ஆம் திகதி வெளியாக உள்ளது.
சீனாவில் தீவிரமடையும் கொரோனா
கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்றுப் பரவலானது அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோல் விலை அதிகரிப்பால் மின்கட்டணமும் அதிகரிக்கும்
பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருளின் விலையை அதிகரிக்கும் என தெரிவிக்கும் மின்சாரத்துறை சேவை தொழிற்சங்கத்தின் தலைவ ரஞ்சன் ஜயலால், இதனூடாக மின்சாரக் கட்டணங்களும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஓடிடி தப்பே இல்லை: தயாரிப்பாளர் வேதனை
கடந்த நவம்பர் 25ஆம் திகதி வெளியான சிம்புவின் ‘மாநாடு' திரைப்படம் முதல் நாளே 10 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் 25வது நாளில் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.
லதா மங்கேஷ்கர் காலமானார்
இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், உடல் நலக் குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் நேற்றுக் (06) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 92 ஆகும்.
இனவாதத்தை ஒழிக்கவேண்டும் - கிளிநொச்சியில் சிலரத்ன தேரர்
நாட்டில் இனவாதத்தை ஒழிக்க அனைத்து சிங்கள, தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
மீனவர் பிரச்சினையில் இலாபம் தேட இடமளியோம்
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையில் அரசியல் இலாபம் தேட எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என அகில இலங்கை மீனவர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் நெல்சன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
சபையைக் கூட்ட இன்று கூட்டம்
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமைகளுக்கு மத்தியில் உரிய சுகாதார ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடித்து பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கும், எதிர்வரும் அமர்வுகளில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள அலுவல்கள் குறித்து ஆலோசிப்பதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு, இன்று திங்கட்கிழமை (07) கூடவுள்ளது.
5G பரிசோதனையை ஆரம்பிக்கிறது எயார்டெல்
வர்த்தக வலையமைப்பில் நேரடி 5G பரிசோதனைகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்துக்குள் கொரோனா அதிகரித்தது
அமைச்சர் அமரவீரவுக்கு கொரோனா; சபாநாயகர் வீடு திரும்பினார்
தேர்தலில் பா.ஜனதா சார்பில் திருநங்கை போட்டி
சென்னை மாநகராட்சி 76 ஆவது வட்டார வேட்பாளராக திருநங்கை ராஜா என்கிற ரதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேசிய கீதத்தை அவமதித்து முதலமைச்சர்?
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த ஆண்டு மும்பைக்கு வந்தபோது தேசிய கீதத்தை அவமதித்ததாக பா.ஜ.க நிர்வாகி விவேகானந்த் குப்தா, பெருநகர நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சர்வதேச ஓய்வை அறிவித்து டெர்பஷையரில் இணைந்த லக்மால்
சர்வதேச ஓய்வை அறிவித்து டெர்பஷையரில் இணைந்த லக்மால்
உயர்தரப் பரீட்சையை இடைநிறுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி
விசேட அதிரடிப் படை குவிப்பு
பெரிய கட்சிகளில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளூராட்சித் தேர்தலில் முக்கிய கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க ஆகியவை திருநங்கைகளை வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளன.
பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் சம்பியனான கற்பிட்டி பிரதேச செயலகம்
புத்தளம் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த புத்தளம் மாவட்ட பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான சுதந்திர தின வெற்றி கிண்ண மென்பந்தாட்டத் தொடரானது வென்னப்புவ அல்பட் பீரிஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
பாடசாலைகளுக்கு மார்ச் 7 வரை விடுமுறை
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதற்காக அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு பெப்ரவரி 07ஆம் திகதி முதல் மார்ச் 07ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் தொற்றின் வேகம் அதிகரிப்பு
இருதரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டு