CATEGORIES
Kategorier
சர்வதேச விமான சேவை: மீண்டும் தொடங்குவது தொடர்பாக மறுபரிசீலனை
ஒமைக்ரோன் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக மத்திய அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவுள்ளது. இதனால் சேவை தொடங்கும் திகதி தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.
கோதுமை மா விலை அறிவிப்பு
ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 17 ரூபாய் 50 சதத்தினால் அதிகரித்துள்ளதாக, பிறீமா மற்றும் செரெண்டிப் ஆகிய நிறுவனங்கள், நேற்று (29) அறிவித்தன.
அலுகொல்ல மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு
தீர்வு காண உறுதியளிப்பு
மலையக அரசியல் அரங்கம் அரசியல் தளத்தில் இருந்து உருவாக்கும் - முன்னாள் எம்.பி திலகராஜ் தெரிவிப்பு
அறிவார்ந்த அரசியல் உரையாடலை மலையக அரசியல் தளத்தில் உருவாக்கும் நோக்கில் ‘மலையக அரசியல் அரங்கம்' எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று அவ்வமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்.பியுமான உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்
அம்பாறையில் முப்படை, பொலிஸ் தீவிர ரோந்து
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர ரோந்தில் ஈடுபடுவதுடன், சோதனை நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகின்றனர்.
சிலிண்டர்கள் வெடிக்கின்றனவா?
கேட்கவும் இல்லை: கேள்வியும் படவில்லை
இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சை நீக்கப்படும்வரை போராடுவோம்
நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்துள்ள 'மாநாடு' திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணியின் தேசியச் செயலர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.
'சிறந்த சுகாதார ஊடகவியலுக்கான விருது'
சிறந்த சுகாதார ஊடகவியலுக்கான விருது வழங்கும் வைபவம்
இந்திய அரசியலில் மாற்றம் சுப்ரமணியசுவாமி
முதலமைச்சர் மம்தா சந்திப்பு
2026ஆம் ஆண்டில் தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி மலரும்
2026ஆம் ஆண்டு தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யுமென்று மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
'வானொலி அரச விருது'
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிறை எப்.எம். அறிவிப்பாளரும் ஆசிரியரும் கவிஞரும் எழுத்தாளருமான ஜே. வஹாப்தீன் வானொலி அரச விருது பெற்றார்.
கறுப்புப் பணம் ரூ.400 கோடி சிக்கியது
புதுடெல்லியின் ‘ரியல் எஸ்டேட்' நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 400 கோடி ரூபாய் கறுப்பு பணம் சிக்கி உள்ளது.
மஹஓயாவில் ஆகக் கூடிய மழை
அம்பாறை மாவட்டத்தில் நேற்று (25) காலை 08.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் மஹஓயா பிரதேசத்தில் ஆகக் கூடிய 83.02 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, பொத்துவில் வானிலை அவதான நிலைய கண்காணிப்பாளர் எம்.ஏ.எம். அக்மல் தெரிவித்தார்.
மேலும் ஆறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும்
விவசாயிகளின் மேலும் ஆறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடருமென கூட்டமொன்றில் உரையாற்றிய விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன சிறந்த வீரருக்கான விருது பட்டியலில் ரொனால்டோ
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 2020-21 பருவகாலத்துக்கான சிறந்த வீரர் விருதுப் பட்டியலில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் முன்களவீரர் லியனல் மெஸ்ஸி, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருடன் கடந்தாண்டு வெற்றியாளரான றொபேர்ட் லெவன்டோஸ்கியும் இடம்பெற்றுள்ளார்.
பாகிஸ்தான் - இலங்கை வர்த்தக மகாநாடு கொழும்பில்
பாகிஸ்தான், ராவல்பன்டி வர்த்தக சங்கமும் கொழும்பு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அலுவலகமும் இணைந்து இலங்கை - பாகிஸ்தான் வர்த்தக முதலீடு மற்றும் பாவனைப்பொருட்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சம்பந்தமான மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை (23) கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.
நடிகை கங்கனா மீது வழக்கு தொடருமாறு கோரிக்கை
சீக்கியரைப் புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள பொலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, மும்பை பொலிஸில் சீக்கிய அமைப்பு பிரதிநிதிகள் புகார் அளித்துள்ளனர்.
ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கம் ஜே.வி.பிக்கு கிடையாது”
சிதைந்து போன நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவது எமது நோக்கம் அல்ல.
முடிந்தால் தேர்தலை நடத்துங்கள்
மக்கள் ஆணையாருக்கு இருக்கிறது என்பதை அறிய, மாகாண சபை தேர்தலை நடத்திப் பாருங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் சவால் விடுத்தார்.
மற்றுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் வந்தன
தற்பொது இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
சூர்யாவுடன் இணைந்தார் சிவகார்த்திகேயன்
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் 40வது திரைப்படம் எதற்கும் துணிந்தவன்'.
சட்டம் - ஒழுங்கு தொடர்பில் பிரதமர் மோடி ஏன் பேசவில்லை?
நாட்டின் சட்டம் - ஒழுங்கை அமல்படுத்தும் அமைப்புகளின் நிலை பற்றி ஏன் பிரதமர் மோடி பேசவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கமல்ஹாசனுக்கு கொரோனா
நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
50 நாட்களில் 64 டெங்கு நோயாளர்கள்
பேருவளையில் கடந்த 50 நாட்களில் மாத்திரம் 64 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டள்ளதாக அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
சாப்பாடு பொதியின் விலையும் உயர்ந்தது
ஹட்டன் மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் சடுதியாக அதிகரித்துள்ள மரக்கறிகளின் விலை அதிகரிப்பால், சாப்பாடு பொதிகளின் விலையும் அதிகரித்துள்ளது.
நுவரெலியாவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - வர்த்தகர்களும் ஆதரவு
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக, வர்த்தகர்களும் கடைகளை அடைத்து, ஆதரவளித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமன்றி, நுவரெலியாவில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு நேற்றையதினம் மரக்கறிகள் லொறிகள் செல்லவில்லை.
பட்ஜெட்டுக்கு மு.கா வாக்களிக்காது
வரவு - செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார்.
வீசப்படும் முகக் கவசங்கள் தொற்று பரவும் அபாயம்
கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக பயன்படுத்தப்படும் முகக் கவசங்கள், சுற்றாடலில் ஆங்காங்கே வீசப்படுவதன் காரணமாக மாத்தளை மாவட்டத்தில் பாரிய சுற்றாடல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பிள்ளைகளுக்கு காய்ச்சல், இருமலா? பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்கிறார் சுதர்ஷினி
தங்களது பிள்ளைகளுக்கு காய்ச்சல், இருமல் காணப்படுமாக இருந்தால் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே பெற்றோர்களிடத்தில் வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் சூர்யா வீட்டுக்குப் பலத்த பாதுகாப்பு
நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த ஜெய்பீம் திரைப்படம் குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அவரது இல்லத்துக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.