CATEGORIES
Kategorier
'ராஜபக்ஷ பெயர் இருந்தால் வீதியில் இறங்க முடியாது
ஹிருணிகா குற்றச்சாட்டு: கோட்டாவின் அரிசிக் கடையை குத்திக்காட்டினார்
2022 வரையிலும் கொரோனா நீடிக்கும்
கொரோனா தொற்று நிலைமை 2022 ஆம் ஆண்டு வரை நீடித்து காணப்படுமென உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முகத்தை மூட மறுத்த பெண்: நாய் பிடிக்கும் கருவி கொண்டு கைது செய்த பொலிஸார்
ஈரானில் முகத்தை மூட மறுத்த பெண்ணை நாய் பிடிக்கும் கருவியைக் கொண்டு பொலிஸார் கைது செய்துள்ளதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருபதுக்கு - 20 உலகக் கிண்ணம்: சுப்பர் - 12 இல் இலங்கை
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.
கிழக்கில் 568 பாடசாலைகள் திறந்தன
கொரோனா நீண்ட விடுமுறையின் பின்பு கிழக்கு மாகாணத்தில், 200 மாணவர்களுக்கு குறைந்த ஆரம்ப வகுப்புக்களைக் கொண்ட 568 பாடசாலைகள் நேற்று (21) மீளத் திறக்கப்பட்டன. மாணவர்களும் ஆசிரியர்களும் ஆர்வத்தோடு வருகைதந்திருந்தனர்.
வாழ்க்கை சுமையை தாங்கி சபைக்குள் வந்து எதிர்த்தார்
கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா
கோட்டா எதிர்க்க மாட்டார்; மஹிந்த பொறுப்பேற்கவும்
முருதெட்டுவே தேரர் கோரிக்கை
வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் பிரான்ஸ் தூதுவர்
இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெர்டு, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
சம்பியன்ஸ் லீக்: அத்லெட்டிகோவை வென்ற லிவர்பூல்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிரீமியர் லீக் கழகமான லிவர்பூல் வென்றது.
மோடிக்கு பகவத்கீதையை பரிசளித்தார் நாமல் ராஜபக்ஷ
குஷிநகர் விமான நிலையம் திறந்துவைப்பு
கொரோனாவின் அடுத்த அலைக்கு ஆபத்து அதிகம்
கொரோனா பரிசோதனைகளைச் காசெயலிழக்கச் செய்வது மற்றும் எழுமாறான மாதிரிக்கான வழிகளைத் தடுப்பதன் மூலமும், நாட்டுக்குள் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் விமானப் பயணிகளின் பி.சி.ஆர்.பரிசோதனைகளை முழுமையாக நிறுத்துவதன் மூலமும் மீண்டுமொரு கோவிட் அலை ஏற்படும் அபாயம் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பதிலை கூற முடியாது
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவுக்கு வழங்குவதுத் தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள 11 கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமை உண்மையெனத் தெரிவித்த வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில, எனினும் அக்கடிதத்துக்கு ஜனாதிபதி வழங்கியிருக்கும் பதிலை பொதுவெளியில் கூற முடியாது எனவும் கூறினார்.
கொரோனாவுக்கு வேலி போடும் சினோஃபாம்
சினோஃபாம் தடுப்பூசி போடப்பட்டவர்களின் உடல் தொடர்ந்து கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் , ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவு நடத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடர்: : நமீபியாவை வீழ்த்திய இலங்கை
இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற நமீபியாவுடனான குழு ஏ போட்டியில் இலங்கை வென்றது.
சீனாவில் வலுப்பெறும் 'Worker Lives Matter'
சீனாவில் பல நிறுவனங்கள் கடைப்பிடித்து வரும், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையான வேலை நேரத்தை எதிர்த்து workers lives matters என்னும் பிரசாரத்தை ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.
பசு வதைக்கு தடை
இந்து சட்டங்களை திருத்த அமைச்சரவை அங்கிகாரம்
கொரோனா குறையும் வரை பொதுப் போக்குவரத்தை பிற்போடவும்
கொரோனா தொற்றை கணிசமாகக் கட்டுப்படுத்தும் வரை, பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிப்பதை மேலும் பிற்போட வேண்டும் என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணம்: இன்று இலங்கைக்கு முதலாவது போட்டி
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு -20 உலகக் கிண்ணத் தொடரானது நேற்று ஆரம்பித்திருந்த நிலையில், தமது முதலாவது குழுநிலைப் போட்டியில் நமீபியாவை, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் இலங்கை நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு இலங்கை எதிர்கொள்கின்றது.
இந்தியாவை வென்ற இலங்கை
இலங்கை, இந்திய இராணுவ அணிகளுக்கிடையிலான நட்பு ரீதியிலான கரப்பந்தாட்டப் போட்டியில் 3 - 0 என நேர் செட்களில் இலங்கை வென்றது.
கொரோனாவுக்குப் பின் சிறுவர்களுக்கு 'மிஸ்'-சி
வைத்தியர் விஜி திருக்குமார் எச்சரிக்கை
சுகாதாரத்தைப் பின்பற்றாத கடைகளுக்குப் பூட்டு
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத உணவு கையாளும் நிலையங்கள், விற்பனை நிலையங்கள் போன்றவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன், நேற்று (18) தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல்; முடிச்சியை அவிழ்க்கவும்
சர்வதேசத்திடம் கர்தினால் மெல்கம் கோரிக்கை
நனோ நைதரசன் திரவ உரம் இறக்குமதி
இந்தியாவில் இருந்து 2.9 பில்லியன் ரூபாய் (290 கோடி ரூபாய்) பெறுமதியான 3.1 மில்லியன் லீற்றர் நனோ நைதரசன் திரவ உரத்தை (பசளை) இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (18) காலை நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வட கடலில் பேரணி
நூற்றுக்கணக்கான மீனவர்களும் மக்கள் பிரதிநிதிகளும்
புத்திசாலிகள் கூடி குறைந்தால் தெற்கு ஆசிரியர்களே பொறுப்பு
தெற்கில் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் போது, வடக்கிலுள்ள ஆசிரியர்கள் அங்குள்ள மாணவர்களுக்கு கற்பிக்கின்றமையால் எதிர்காலத்தில் வடக்கில் புத்திசாலிகள் அதிகரிக்கும் அதேவேளை, தெற்கில் புத்திசாலிகளுக்கு ஏற்படும் பற்றாக்குறைக்கு ஆசிரியர்களே பொறுப்பு கூற வேண்டும் என, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் படக்குழு சாதனை
ஹொலிவுட்டில் விண்வெளியை மையமாக வைத்து 'கிராவிட்டி', 'இன்டர்ஸ்டெல்லர்' போன்ற பல திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. முதன் முறையாக விண்வெளிக்கே சென்று, ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள் ரஷ்ய படக்குழுவினர்.
நான்கு முறை முதலமைச்சர்
இன்னும் முதலமைச்சராக உணர்வதாக கூறிய தேவேந்திர பட்னாவிசுக்கு சரத்பவார் பதிலடி கொடுத்துள்ளார். 4 தடவை முதலமைச்சராக பதவி வகித்த நான் அப்படி உணரவில்லை என்றார்.
இந்திய இராணுவ பிரதானி வருகையில் பாரிய சந்தேகம் மறைந்து உள்ளது
பிராந்தியத்திலுள்ள பெறுமதிக்க சொத்துகளை கொள்ளையிடுவதற்கே இந்திய இராணுவ பிரதானி இலங்கைக்கு வந்துள்ளார். ஆனால், யுத்தக் காலத்தில் கூட இவர் இலங்கைக்கு வரவில்லை முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.
விலைகள் அதிகரித்தமை அரசாங்கத்தின் தவறல்ல
அரசாங்கத்தை நாங்கள் பொறுப்பேற்கும் போது, நாட்டின் பொருளாதார வேகம் 2.2 க்கு குறைந்து இருந்தது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் காமினி லொக்குகே, பொருள்களின் விலைகள் அதிகரித்தமை அரசாங்கத்தின் தவறல்ல என்றார்.
ஐ.பி.எல்: இறுதிப் போட்டியில் கொல்கத்தா
இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா நைட் றைடர்ஸ் தகுதி பெற்றுள்ளது.