CATEGORIES
Kategorier
கொரோனா மரணங்கள் இலங்கையில் 19 சதவீதத்தால் அதிகரிப்பு
தெற்காசிய வலயத்தில் கொரோனா மரணவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்ட வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் வீசியெறிந்த செல்போனுக்கு சீல்'
முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் சிறைச்சாலையில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் திறன்பேசியை, சிறைச்சாலைகள் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்குமா, நீடிக்காதா? இன்று அறிவிப்பு
நாடில் தற்போது அமலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை 06ஆம் திகதிக்குப் பின்னர் தளர்த்துவதா, அல்லது நீடிப்பதா? என்பது இன்று (03) தீர்மானிக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வளர்ப்பு நாய்களுக்கும் வரி அறவிட தீர்மானம்
மார்ச் 31க்கு முன்னர் செலுத்தவேண்டும்
ரஞ்சனை மன்னிக்கவும் ஜனாதிபதிக்கு சஜித் கடிதம்
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் சஜித் பிரேமதாஸ, நேற்று (01) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
ரிஷாட்டின் விளக்கமறியல் 7 வரை நீடிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் விளக்கமறியல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று (01) பிறப்பிக்கப்பட்டது.
மேலும் 14 நாள்கள் நாட்டை முடக்குக
இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே கோரியுள்ளார்.
நாகபூசணி கோவிலில் மஹோற்சவம் இல்லை
யாழ்ப்பாணம், நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் வருடாந்த மஹோற்சவம், இவ்வருடம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தை சாதனை
கொழும்பு பங்குச் சந்தையின் வரலாற்றில் முதன்முறையாக அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 9,000ஐ கடந்துள்ளது.
தொற்றாளர்கள் அதிகரிப்பு: யாழ். போதனாவில் நிரம்பி வழிகின்றனர்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனோ சிகிச்சைவிடுதிகள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகிறது.
முதியோர் இல்லத்தில் 43 பேருக்கு கொரோனா
யாழ்ப்பாணம், கைதடி அரச முதியோர் இல்லத்தில் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
சிவப்பு சீனிக்கு நீண்ட வரிசை
சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் நேற்று (31) முதல் ஒரு கிலோகிராம் சிவப்பு சீனி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
டொலர் எகிறியது; ரூபாய் சரிந்தது
ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
காதில் பூ சுற்றும் செயற்பாடு
சம்பள பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவையின் தீர்மானங்களை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள அதிபர், ஆசிரியர் ஒன்றிணைந்த தொழிற்சங்கம், 5,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவானது, காதில் பூ சுற்றும் செயற்பாடாகும் என விமர்ச்சித்துள்ளன.
முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கூறினார் செந்தில் தொண்டமான்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், தொலைப்பேசி ஊடாகத் தொடர்புகொண்டு, நன்றி தெரிவித்து கொண்டார்.
ரிஷாட் மனைவியின் பிணை மனு நிராகரிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வரையும் செப்டெம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, நேற்று (30) உத்தரவிட்டார்.
போதைப்பொருள் பாவிப்போருக்கு அம்பிட்டியவில் விற்பனை
மனநலம் குன்றியோருக்கான மருந்துகள். 18 ஆயிரம் மருந்துகள் மீட்பு
தென் ஆபிரிக்காவில் திரிபுடைய புதிய பிறழ்வு
தென் ஆபிரிக்காவில் கொவிட் 'வைரஸின் புதிய பிறழ்வு இனங்காணப்பட்டுள்ளது.
திருமலையில் விசேட சீல்
திருகோண மலையில் மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண மதுவரித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் ஏ.தர்மசீலனின் பணிப்புரைக்கு அமைய, திருகோணமலை மதுவரித் திணைக்கள அதிகாரி எஸ்.கே. வணிகசிங்கவின் வழிகாட்டலுடன், திருகோணமலை பிராந்திய மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ஜானி அத்தநாயக்க குழுவினரால், திருகோணமலையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
நாளொன்றுக்கு 140 தொன் ஒக்சிசன் தேவை
கொரோனா தொற்றாளர்களுக்கு வழங்குவதற்காக வாராந்தம் 300 தொன் ஒக்சிசனை இந்தியாவிலிருந்து கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புரதம் நிறைந்த உணவுகளை அவசியம் உட்கொள்ளவும்
வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்கள் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமாவதாக மருத்துவ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
ஃபைசர் தடுப்பூசியை வழங்குவர்
கொரோனாவுக்கு எதிரான ஃபைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான முழு அதிகாரமும் இராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
தியாக கோரிக்கைவிட எந்த உரிமையும் இல்லை
மக்களைத் தியாகம் செய்யுமாறு கோரிக்கை விடுப்பதற்கு அரசாங்கத்துக்கு உரிமை இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
'வன்டே கப்' இடியப்பத் தட்டுக்குத் தடை
இடியப்பத் தட்டு, குடிநீர் கோப்பை உட்பட ஏழு வகையான பிஸாட்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளை தடை செய்வது தொடர்பாக, அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவையில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடியதில் பிரயோசனம் இல்லை விஞ்ஞான ரீதியில் முடக்கவும்
சகல வாகனங்களும் ஓடுகின்றன; மக்கள் வீதிகளில் திரிகின்றனர்
காபூல் விமான நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு அருகே நேற்று முன்தினம் (26) இரவு இரட்டைக் குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 13 பேர் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் ஆவர். எஞ்சிய 60 பேரில் 3 குழந்தைகள் உள்ளிட்ட ஆப்கானியர்கள் ஆவர்.
உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்தவும்
கொரோனா தொற்று உருவான சீனாவில் தொற்றால் உயிரிழந்தவர்களை விட, இரண்டு மடங்கை விட அதிகமானவர்கள் தற்போது, இந்தச் சிறிய நாட்டில் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ், தொழிங்சங்கவாதிகள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், ஆசிரியர்கள், நாட்டின் எதிர்காலத் தலைவர்களான சிறுவர்கள் எனப் பலரையும் இழந்துள்ளதன் அதிர்ச்சி தனக்கு தனிப்பட்ட ரீதியில் உள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிப்பு
தமிழகத்தில் இலங்கை தமிழர்களின் மேம்பாட்டுக்காக, பல்வேறான திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் நேற்று (27) அறிவித்தார். அவர்களின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆப்கானியர்களைக் கைவிட்டதை போல் தமிழர்களை கைவிடக்கூடாது
ஆப்கானியர்களை 'அம்போ' எனக் கைவிட்டதை போல், தமிழர்களைக் கைவிடக்கூடாது என தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி கேட்டுக்கொண்டுள்ளார்.
முடக்கத்தால் பாரிய நட்டம்
நாட்டில் 10 நாள்கள் தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ரயில்வே திணைக்களத்துக்கு ரூபாய் 13 கோடி 33 இலட்சத்துக்கும் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.