CATEGORIES
Kategorier
ஆளும் சபையால் நிர்வகிக்கப்படும்
ஆளும் சபை ஒன்றால் ஆப்கானிஸ்தான் நிர்வகிக்கப்படும் என்றும், அவை அனைத்துக்கும் பொறுப்பானவராக தலிபான்களின் தலைவர் ஹைபதுல்லாஹ் அகுன்ட்ஸடா இருப்பார் என தலிபானின் சிரேஷ்ட உறுப்பினர் வஹீடுல்லாஹ் ஹஷிமி றொய்ட்டர்ஸுக்குத் தெரிவித்துள்ளார்.
தப்பி ஓடிய சாமியார் நித்யானந்தா 293ஆவது பீடாதிபதியாக முகநூலில் அறிவித்துள்ளார்
கர்நாடகா, குஜராத் பொலிஸாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி தலைமறைவானார். அவரைப் பிடிக்க சர்வதேச பொலிஸ் (இன்டர்போல்) உதவியுடன் சி.பி.ஐ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நிந்தவூரிலிருந்து மூவர் தேசிய கபடி அணிக்கு தெரிவு
இலங்கையின் தேசிய கபடி அணியின் முதலாவது கட்டத் தெரிவில், அம்பாறை மாவட்ட நிந்தவூரில் இருந்து மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மூடவும் மூடவும்
பல முனைகளிலும் அழுத்தம்; மகாநாயக்க தேரர்களும் வலியுறுத்து பங்காளிகளில் பத்து பேர் கடிதம்; சுதந்திரக் கட்சியும் கோரியுள்ளது
‘தலிபானில் மலையாளிகள்' சசி தரூரின் டுவிட்டால் சர்ச்சை
தலிபான் பயங்கரவாதிகளில் மலையாளிகளும் இடம் பெற்றுள்ளனர்' என, முன்னாள் மத்திய அமைச்சரும், கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பியுமான சசி தரூர், 'டுவிட்டரில்' பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு றூட் முன்னேறம்
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு இங்கிலாந்தின் ஜோ றூட் முன்னேறியுள்ளார்.
முடக்காவிடின் நாம் முடக்குவோம்
வெள்ளிக்கிழமை முதல் நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், இரண்டு கிழமைகளுக்கு நாட்டில் வேலைநிறுத்தங்களை முன்னெடுத்து நாட்டை முடக்குவோம் என எச்சரித்துள்ள ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள், தேவையான பொருள்களை சேமித்துக் கொள்ளுங்கள் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
செறிவூட்டப்பட்ட யுரேனிய உலோக உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்கும் ஈரான்
அமெரிக்கா கடும் கண்டனம்
இது இயற்கையின் தண்டனை
இந்த நாடு முகங்கொடுத்துள்ள கொரோனா தொற்றுக்கு தீர்வாக நாட்டை சிறிது காலம் முடக்க வேண்டுமென சுகாதாரத் தரப்பினர் உள்ளிட்டவர்கள் கோரிக்கை விடுத்தால், அரசாங்கம் அதற்கு செவிசாய்த்து நாட்டை முடக்குவது அவசியம் எனத் தெரிவித்துள்ள ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோ, இந்தத் தொற்றானது, இயற்கையால் உலகத்துக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே தான் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 12 பேருக்கு கொரோனா
பாராளுமன்ற பணியாட்தொகுதியினர் 12 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
செலவின்றி கட்டுப்படுத்தலாம்
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கிராம மட்டங்களில் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, தடுப்பூசிகள் மாத்திரம் கொரோனாவுக்கு தீர்வல்ல எனவும் தெரிவித்தார்.
இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா வென்றுள்ளது.
இலங்கைக்கு ஒட்சிசன் எடுத்துவர இந்தியாவுக்கு 'சக்தி' கப்பல் பயணம்
இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி' எனும் கப்பல் நேற்று (17) அதிகாலை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து சென்னை நோக்கி பயணித்தது.
இந்தியாவை விட ஆபத்தான நிலையில் இலங்கை
உலகில் பிரபலமான பல்கலைக்கழகமொன்றால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய இந்தியாவை விட 15 மடங்கு வேகமாக அதிக ஆபத்தை இலங்கை எதிர்கொண்டு வருவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
காபூலிலிருந்து ஜனாதிபதி, இராஜதந்திரிகள் வெளியேற்றம்: போருக்கு முற்றுப்புள்ளி வைத்தது தலிபான்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள ஜனாதிபதி மாளிகையின் கட்டுப்பாட்டை எடுத்த பின்னரே இவ்வாறு தலிபான்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
மனம் திறந்த நயன்தாரா
சமூக வலைத்தளத்தில் கணக்குகள் தொடங்காதது ஏன் என்பது குறித்து நடிகை நயன்தாரா தொலைக்காட்சி பேட்டியில் விளக்கமளித்துள்ளார்.
மூன்றாவது அலையில் 19 கர்ப்பிணிகள் மரணம் - கர்ப்பிணி வாரமும் அறிமுகம்
கொரோனா மூன்றாவது அலையில் 19 கர்ப்பிணிகள் மரணித்துள்ளனர் எனவும் இவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டிருக்கவில்லை எனவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார்.
புலிகளுடன் தலிபான்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை
பௌத்த பகுதிகளுக்கு ஆபத்து ஏற்படாது
இங்கிலாந்து எதிர் இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலை பெற்ற இங்கிலாந்து
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
பயன்படுத்திய முகக் கவசங்களை குப்பையில் வீசாது, எரித்து விடுங்கள் - பாரியளவில் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்
முகக் கவசங்களைப் பயன்படுத்தியதன் பின்னர், அவற்றை குப்பைகளில் போட வேண்டாமெனத் தெரிவிக்கும் பேராசிரியர் அஜந்தா பெரேரா, முகக் கவசங்களை வீடுகளிலேயே எரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தேசிய கொடி ஏற்ற மக்கள் எதிர்ப்பு
கோவாவின் சாவோ ஜசின்டோ தீவில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அங்கு தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியை இரத்து செய்வதாக கடற்படை அறிவித்துள்ளது. எனினும், நிகழ்ச்சியை நடத்த முதலமைச்சர் சாவந்த் அறிவுறுத்தியுள்ளார்.
சும்மா சுற்றி திரியாதீர்கள்
நேற்றிரவு முதல் புதுக் கட்டுப்பாடு நாளை முதல் திருமணத்துக்குத் தடை
இ.போ.சவில் 285 பேருக்கு கொரோனா
இலங்கை போக்குவரத்து சபையின் 285 ஊழியர்கள் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
முற்றாக போக்குவரத்து தடை: சான்றிதழ் கட்டாயம்
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடைச் செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ள கொவிட்-19 செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா, இந்த நடைமுறை நேற்று (13) நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
நாட்டைத் திறந்து வைத்து பாதுகாப்பாக இருப்போம்
நாட்டை முழுமையாக மூடுங்கள், மூடுகள் எனக் கூறுபவர்கள் மாற்றுவழிமுறைகளை கூறவில்லையெனத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, ஏற்றுமதி வருமானம் குறையுமாயின், நோயாளியொருவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதிலும் பிரச்சினைகள் ஏற்படும்.
தொற்றா நோயாளர்கள் குறித்து கவனம் செலுத்தவும்
நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எவ்விதமான தீர்மானமும் எடுக்கவில்லையெனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 60 வயதுக்கு மேற்பட்ட நீண்டநாள் தொற்றா நோயாளர்களாக இனங்காணப்பட்டவர்கள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
ஓகஸ்ட் 21 கறுப்பு கொடி தினம்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணைகளை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஓகஸ்ட் 21ஆம் திகதி கறுப்பு கொடி தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
ஒட்சிசன் இறக்குமதி செய்ய தீர்மானம்
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால், அவர்களுக்கு தேவையான ஒட்சிசனை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
பெரும்பான்மையானோர் நாட்டை முடக்க வேண்டாம் என்று கோருகின்றனர்
அலுவலக பணிகளுக்காக தேவையானவர்களை மாத்திரம் வேலைக்கு அழைக்க வேண்டுமென நிறுவனத் தலைவர்களிடம் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி, நாட்டை முடக்க வேண்டாமென்றே பெரும்பான்மையானோர் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.