CATEGORIES
فئات
வளமான வாழ்வுக்கு நலங்கூட்டும் திட்டங்கள்!
சுகாதாரத் துறையில் தேசிய சாதனை!
ராஜஸ்தான்: மின்சாரம் பாய்ந்து 16 குழந்தைகள் காயம்
ராஜஸ்தான் மாநிலத்தில் மகா சிவராத்திரி தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது மின்சாரம் பாய்ந்ததில் 16 குழந்தைகள் மற்றும் இருவர் காயமடைந்தனர்.
திமுக கூட்டணியில் வி.சி.க.வுக்கு 2, மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், மதிமுகவுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ.100 குறைப்பு
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படுகிறது' என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அறிவித்தார். இந்த விலைக்குறைப்பு சனிக்கிழமை (மார்ச் 9) முதல் அமலுக்கு வரும்.
ராகுல் மீண்டும் வயநாட்டில் போட்டி
காங்கிரஸ் முதல்கட்ட பட்டியல்; 39 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சத்தில் நிறைவு
இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தைநோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய உச்சத்தில் நிறைவடைந்தன.
சமகாலத்துக்கு ஏற்றதாக மாற்ற முயலும் இந்தியா, ஜப்பான்: எஸ்.ஜெய்சங்கர்
ஜப்பான் வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு
நாகபுரி சிறையிலிருந்து பேராசிரியர் சாய்பாபா விடுவிப்பு
மாவோயிஸ்டுகளுடன் தொடா்பு வைத்திருந்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து தில்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் ஜி.என்.சாய்பாபாவை மும்பை உயா்நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில், நாகபுரி மத்திய சிறையிலிருந்து வியாழக்கிழமை அவா் விடுவிக்கப்பட்டாா்.
ஐஐடி மாணவர்கள் 100% வாக்களிக்க வேண்டும்
ஐஐடி மாணவா்கள் மக்களவைத் தோ்தலில் தங்கள் வாக்கை 100 சதவீதம் பதிவு செய்ய வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என் .ரவி கூறினாா். சென்னைஐஐடியில் ஆராய்ச்சி மாணவா்களின் மாநாட்டின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வடசென்னை அனல் மின் நிலையம்: ரூ.10,158 கோடியில் 800 மெ.வா. உற்பத்தி
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஜனநாயகத்திற்கு சவாலாகும் கட்சித் தாவல்!
தோ்தல் நெருங்கிவரும் நிலையில் நாம் பல அதிா்ச்சியான நிகழ்வுகளைப் பாா்க்கலாம்.
மைசூரில் தமிழ் கல்வெட்டுகள்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
கா்நாடக மாநிலம், மைசூரு தொல்லியல் ஆய்வு மையத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழ் கல்வெட்டுகளை தமிழகத்துக்கு மாற்றுவது தொடா்பான வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
புதுச்சேரி சிறுமி உடல் நல்லடக்கம்: காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட புதுச்சேரி சிறுமியின் உடல் வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் பெண்கள் சிறந்த முடிவு எடுக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள விடியலின் ஒளியை இந்தியா முழுவதும் பரவச் செய்வதற்கு வரும் மக்களவைத் தோ்தலில் பெண்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.
பாதுகாப்பான இடங்களை பெண்கள் அறிய உதவும் ‘மை சேப்டிபின்' செயலி
மாநகராட்சி ஒப்பந்தம்
கொளத்தூரில் புதிதாக பூப்பந்தாட்டம்- குத்துச்சண்டை விளையாட்டரங்கம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்
சென்னை கொளத்தூரில் புதிதாக பூப்பந்தாட்ட மைதானம், குத்துச்சண்டை உள் விளையாட்டு அரங்கத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், கொளத்தூரின் பல்வேறு பகுதிகளில் முடிவடைந்த திட்டப்பணிகளை அவர் திறந்து வைத்தார்.
சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறது காஷ்மீர்
பிரதமர் மோடி பெருமிதம்
ஐடி, வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் வரலாற்றுச் சாதனை
இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை காலையில் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை, பிற்பகலில் வலுப்பெற்று நோ்மறையாக முடிந்தது.
தென் கொரியாவுடன் செமி-கண்டக்டர் துறையில் ஒத்துழைப்பு
தென் கொரியாவுடன் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள், குறை மின்கடத்தி (செமி கண்டக்டா்) மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற துறைகளில் உத்தி சாா்ந்த ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா விரும்புகிறது’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவித்தாா்.
பெண்கள் சக்தியால் திரிணமூல் வீழ்த்தப்படும்
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி
தில்லியில் இன்று கூடுகிறது காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு
முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு
இடதுசாரி தீவிரவாதத்திலிருந்து 2 ஆண்டுகளில் நாடு விடுபடும்
அமித ஷா
சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்படும்
சிறுமி கொலை வழக்கு தொடா்பாக, சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று, புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
எங்கே தமிழ்? எதிலே தமிழ்?
தமிழ்நாட்டில் தமிழுக்காகப் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை இன்னும் தொடா்ந்துகொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவா்கள் சொன்னதை மறந்து விட்டாா்களா? தோ்தல் கால வாக்குறுதியை ஆட்சியாளா்கள் மறந்துவிடுவதுபோல வாக்களித்த மக்களும் மறந்து விட்டனா்.
மீண்டும் வரலாறு படைப்போம் நாட்டைக் காப்போம்: முதல்வர்
‘மீண்டும் வரலாறு படைப்போம்; நாட்டைக் காப்போம்’ என்று திமுக ஆட்சியமைத்த தினத்தையொட்டி அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
பெண் வேட்பாளர்களை அதிகமாக களமிறக்க வாய்ப்பு
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்களை களம் இறக்க வாய்ப்பு இருப்பதாக, தமிழக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கை இரு மடங்கு உயர்வு
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கிட்டப்பார்வைக்கு 10 விநாடிகளில் லேசர் சிகிச்சை: அகர்வால்ஸ் மருத்துவமனையில் அதிநுட்ப வசதி
கிட்டப் பார்வை (மையோபியா) பிரச்னைக்கு லேசர் நுட்பம் மூலம் 10 விநாடிகளில் தீர்வு காணும் 'ஸ்மைல் ப்ரோ' சிகிச்சை முறையை டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவக் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது.
‘எம்ஹெச் 60ஆர் ஹெலிகாப்டர்கள்' கடற்படையில் இணைப்பு
இந்திய கடற்படையில் எம்ஹெச் 60ஆர் சீஹாக் ஹெலிகாப்டர்கள் புதன்கிழமை இணைக்கப்பட்டன.
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்
என்ஐஏ அறிவிப்பு