CATEGORIES
فئات
ஒவ்வொரு குடும்பத்தையும் கைதூக்கிவிடும் ஆட்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஜாபர் சாதிக்கின் வெளிநாட்டுப் பயணங்கள்: என்சிபி விசாரணை
திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பாணை அனுப்ப முடிவு
காஸா பேச்சுவார்த்தை நீட்டிப்பு
காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளவும், ஹமாஸிடம் உள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கும் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்கொரிய பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை
தென்கொரியா சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அந் நாட்டு பிரதமா் ஹன் டக்-சூவை செவ்வாய்க்கிழமை சந்தித்து இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
அடுத்த 6 ஆண்டுகளில் 17,500 இயற்கை எரிவாயு நிலையங்கள்
மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தகவல்
உ.பி: வாரணாசி தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி. பாஜகவில் ஐக்கியம்
உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யும், கட்சியின் மூத்த நிா்வாகியுமான ராஜேஷ் மிஸ்ரா பாஜகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தாா்.
ஜெயலலிதா ஆபரணங்களை தமிழகத்துக்கு திருப்பி அனுப்ப இடைக்காலத் தடை
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்களை தமிழகத்துக்கு திருப்பி அனுப்பும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை
பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு வழக்கு
பதவியை உதறுவது எளிதில்லை!
கடந்த ஆயிரம் ஆண்டு கால இந்தியாவில் ஒரு பொற்காலம் என்று சொல்லத்தக்கது, காந்தியின் தலைமையில் நாடு நடந்த காலம்தான்!
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட கனிமொழி விருப்பம்
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி விருப்பம் தெரிவித்துள்ளாா்.
போதைப் பொருள்கள் ஒழிப்புக்காக அதிமுக குரல் தொடர்ந்து ஒலிக்கும்
தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளதைக் கண்டித்து, அதிமுக சாா்பில் மாா்ச் 4-இல் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பா டி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இலவச வீட்டுமனைப் பட்டா பிரச்னைக்குத் தீர்வு காண குழு
அமைச்சர் தா.மோ.அன்பரசன்
விண்வெளி ஆய்வில் பெண்களுக்கு முக்கியத்துவம்: நாசா விஞ்ஞானி வலியுறுத்தல்
விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பெண்கள் பங்கெடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் வலியுறுத்தினாா்.
தண்டவாளத்தில் சிக்கிய லாரி: ரயில்கள் தாமதம்
திருவள்ளூா் அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற லாரி, அதில் சிக்கியதால் சென்னை சென்ட்ரல் நோக்கி சென்ற ரயில்கள் தாமதமாகச் சென்றதால் பயணிகள் பாதிக்கப்பட்டனா்.
குடும்பக் கட்சி ஆளும் மாநிலங்களில் வளர்ச்சியில்லை
பிரதமர் மோடி
புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை: பவுன் ரூ.48,000-ஐ தாண்டியது
வரலாற்றில் முதல்முறையாக ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 6,000-ஐ தாண்டியது.
திருக்கோவிலூர் - பொன்முடியின் தொகுதி காலியானதாக அறிவிப்பு
நீதிமன்ற வழக்கால் தகுதியிழப்புக்குள்ளான க.பொன்முடியின் திருக்கோவிலூா் பேரவைத் தொகுதியை காலியானதாக பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது.
பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடக்கம் - தமிழ் வினாத்தாள் கடினம்: மாணவர்கள் கருத்து
தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் தேர்வான தமிழ்ப் பாடத்துக்கான வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
காஸா போர் நிறுத்தம் : இஸ்ரேலுக்கு நெருக்கடியை அதிகரித்தது அமெரிக்கா
காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலுக்கு அளித்து வரும் நெருக்கடியை அமெரிக்கா மேலும் அதிகரித்துள்ளது.
பெங்களூருக்கு 3-ஆவது வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 11-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 23 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை திங்கள்கிழமை தோற்கடித்தது.
பெங்களூரு குண்டுவெடிப்பு: என்ஐஏ விசாரணை
பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர், எம்எல்ஏ ராஜிநாமா
குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவா் அம்பரீஷ் தொ் மற்றும் போா்பந்தா் தொகுதி எம்எல்ஏ அா்ஜுன் மோத்வாடியா ஆகியோா் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தனா்.
‘அதிதி’ திட்டம்: ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்
பாதுகாப்புத் துறையில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான ‘அதிதி’ திட்டத்தை பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
லஞ்சம்: எம்.பி., எம்எல்ஏக்களுக்கு சட்ட பாதுகாப்பு கடையாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
‘நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் வாக்களிக்கவோ அல்லது குறிப்பிட்ட விஷயத்தை பேசவோ உறுப்பினா்கள் லஞ்சம் பெறுவது குற்றமாகும்; எனவே, குற்றவியல் விசாரணையில் இருந்து அவா்களுக்கு சட்ட பாதுகாப்பு கிடையாது’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அதிரடியாக தீா்ப்பளித்தது.
மாநிலங்கள் வளர்ந்தால் நாடு வளரும்: பிரதமர் மோடி
மாநிலங்களின் வளா்ச்சி மூலம் நாடு வளா்ச்சியடைவதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.
பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு
சென்னை வந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நிகழாண்டு இறுதியில் தொடங்கும்
2024- ஆம் ஆண்டு இறுதியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் கூறினாா்.
முருகன் உள்ளிட்ட மூவரை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசின் அனுமதி வேண்டும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு முகாமில் உள்ள முருகன், ராபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை இலங்கைக்கு அனுப்புவதற்கான அனுமதியை மத்திய அரசு விரைவாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணை அனுமதி கிடைக்கவில்லை - மத்திய குற்றப் பிரிவு
செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது.
சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய வசதி
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்