CATEGORIES
فئات
பள்ளிகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்?
சென்னையில் பள்ளிகளுக்கு தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் நிலையில், அது தொடா்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றுவதற்கு காவல் துறையினா் ஆலோசித்து வருகின்றனா்.
தமிழர்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட இரு இயற்கை பேரிடர் பாதிப்புகளை சரி செய்ய எந்தவித நிதியுதவியையும் மத்திய அரசு வழங்கவில்லை; எனினும், தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்ள ஆதரவு கேட்டு வருகின்றனர்; தமிழக மக்கள் ஒரு போதும் ஏமாறமாட்டார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மத்திய அரசு திட்டங்களில் திமுக அரசின் 'ஸ்டிக்கர்'- பிரதமர் மோடி குற்றச்சாட்டு
மத்திய அரசின் திமுக அரசின் திட்டங்களுக்கு, ‘ஸ்டிக்கர்' ஒட்டப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் குற்றஞ்சாட்டினார்.
பங்காரு அடிகளார் பிறந்த நாள்: ரூ.3.25 கோடியில் நல உதவிகள்
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் பங்காரு அடிகளாரின் 84-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, 3,687 பயனாளிகளுக்கு ரூ. 3.25 கோடி மதிப்பிலான நல உதவிகளை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
மேற்கு வங்க பாஜக வேட்பாளர் பவன் சிங் விலகல்
மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்க பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போஜ்புரி நடிகா் பவன் சிங், தோ்தலில் போட்டியிட இயலாது என விலகினாா்.
நாகை-இலங்கை பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம் என அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.
சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய அதிநவீன தொழில்நுட்ப கண்காட்சி
சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய அதிநவீன தொழில்நுட்பக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பிரதமரின் அனுமதியின்றி அமைச்சர் பென்னி அமெரிக்கா பயணம்
இஸ்ரேல் அரசில் பிளவு?
வெலிங்டன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெற்றி
நேதன் லயன் சுழலில் சுருண்டது நியூஸிலாந்து
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
மகளிா் பிரீமியா் லீக் போட்டியின் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 25 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை வீழ்த்தியது.
செமிகண்டக்டர் உற்பத்தி 5 ஆண்டுகளில் இந்தியா முத்திரை பதிக்கும்
அடுத்த 5 ஆண்டுகளில் செமிகண்டக்டா் (குறைமின்கடத்திகள்) தயாரிப்பில் சா்வதேச அளவில் இந்தியா முத்திரை பதிக்கும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
தமிழகத்தில் 56 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து
போலியோ தடுப்பு முகாம்
தேர்தலுக்காக மட்டுமே ம தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தமிழகம் வருவதற்கு தேர்தல்தான் காரணம் என்று பள்ளி கல்வித் துறை மகேஸ் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தெரிவித்தார்.
வீட்டில் பட்டாசு தயாரித்தவர் வெடி விபத்தில் உ உயிரிழப்பு
தென் காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த நபர், வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது மனைவி காயமடைந்தார்.
திரு.வி.க.நகரில் ரூ. 69 லட்சத்தில் சமுதாயக் கூடம்
திரு.வி.க. நகரில் ரூ. 69 லட்சத்தில் புதிதாக அமையவுள்ள சமுதாயக் கூடத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
மணிப்பூர்: ஆயுதக் கொள்ளை வழக்கில் 7 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை
மணிப்பூரில் காவல்துறை ஆயுதக் கிடங்கில் ஆயு தங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 7 பேர் மீது குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு தீவிரம்: அமித் ஷா
‘போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகத் தீவிரமான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறது; இதனால், நாட்டில் போதைப் பொருள் பறிமுதலும் கைது நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
வளர்ச்சியைக் கூறி மக்களிடம் ஆதரவு
மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
தென்காசியில் தேவநேயப் பாவாணர் மணிமண்டபம் அமைக்க பரிசீலனை
தென்காசியில் தமி ழறிஞர் தேவநேயப் பாவாணருக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமராக ஷாபாஸ் நாளை பதவியேற்பு
பாகிஸ் தான் பிரதமராக லீக்-நவாஸ் கட்சியின் ஷாபாஸ் ஷெரீஃப் முஸ்லிம் (பிஎம்எல்-என்) 2-ஆவது முறையாக மீண்டும் திங்கள்கிழமை பதவியேற்கவிருக்கிறார்.
காஸாவில் வான்வழியாக உணவுப் பொட்டலங்களை வீசியது அமெரிக்கா
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் அமெரிக்கா வான் வழியாக நிவாரணப் பொருள்களை சனிக்கிழமை விநியோகித்தது.
பிளே-ஆஃப் சுற்றுக்கு மும்பை தகுதி
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 3-2 கோல் கணக்கில் பஞ்சாப் எஃப்சியை சனிக்கிழமை சாய்த்தது. இதன் மூலம், அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
ஊழலில் நிபுணத்துவம் பெற்ற கட்சி திரிணமூல்
ஊழல் புரிவதில் நிபுணத்துவம் பெற்ற கட்சி திரிணமூல் காங்கிரஸ்' என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.
ஒவ்வொரு நகரிலும் கூட்டுறவு வங்கி: புதிய அமைப்புக்கு அமித் ஷா இலக்கு
ஒவ்வொரு நகரிலும் ஒரு கூட்டுறவு வங்கியை அமைக்க வேண் டும் என்று புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் வளர்ச்சி நிறுவனத்துக்கு மத்திய உள் துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச் சர் அமித் ஷா இலக்கு நிர்ணயித்துள்ளார்.
தொழிலதிபர்களின் ரூ. 16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி
பத்து முதல் பதினைந்து தொழிலதிபா்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ள மத்திய அரசு, பயிா்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க மறுக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளாா்.
தலித், விளிம்புநிலை மக்களை கேடயமாக பயன்படுத்தும் காங்கிரஸ்
தங்களின் ஊழல், குடும்ப அரசியலை நியாயப்படுத்துவதற்காக, தலித் சமூகத்தினா் மற்றும் இதர விளிம்புநிலை மக்களை கேடயமாகப் பயன்படுத்துகிறது காங்கிரஸ் என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றம்சாட்டினாா்.
தஞ்சை மாவட்டத்தில் திருவோணம் வட்டம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவோணம் வட்டத்தை உருவாக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் மூலம் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும்
மத்திய நிலக்கரித் துறைச் செயலர் அம்ரித் லால் மீனா
தமிழகத்தில் இன்று போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 3) நடைபெறவுள்ள போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில், 5 வயதுக்குட் பட்ட 57.84 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தல் எப்போது?
மக்களவை தேர் தலுடன் சேர்த்து விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலையும் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.