CATEGORIES
فئات
'சென்னையில் வேலுநாச்சியார் சிலை அமைக்க வேண்டும்'
ஆங்கிலேயரை எதிா்த்துப் போரிட்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் முழு உருவச்சிலையை சென்னையில் அமைக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி இரா.சுரேஷ்குமாா் கூறினாா்.
துவாரகையில் கடலுக்கடியில் பிரதமர் மோடி பிரார்த்தனை!
குஜராத் மாநிலம், துவாரகை கடல் பகுதியில் ‘ஸ்கூபா டைவிங்’ மூலம் நீருக்கடியில் சென்ற பிரதமா் மோடி, அங்கு கடவுள் கிருஷ்ணரால் நிறுவப்பட்டதாக நம்பப்படும் பண்டைய துவாரகை நகரின் புராதன எச்சங்கள் உள்ள இடத்தில் பிராா்த்தனை மேற்கொண்டாா்.
பேரிடர் நிதி தராத மத்திய அரசு
தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பேரிடருக்கு மத்திய அரசு இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
நவால்னியின் உடல் தாயாரிடம் ஒப்படைப்பு
சிறையில் மரணமடைந்த ரஷியாவின் மிக முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னியின் உடல், பல சா்ச்சைகளுக்குப் பிறகு அவரது தாயாரிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
ரஷிய படையெடுப்பின் 2-ஆவது ஆண்டு நிறைவு - உக்ரைனில் மேற்கத்திய தலைவர்கள்
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 2 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி மேற்கத்திய நாடுகளின் தலைவா்கள் சனிக்கிழமை உக்ரைன் வந்து அந்த நாட்டுக்குத் தங்களது ஆதரவை உறுதி செய்தனா்.
இங்கிலாந்து 134 ரன்கள் முன்னிலை - பஷீர் சுழலில் இந்தியா தடுமாற்றம்
ராஞ்சி டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது நாளான சனிக்கிழமை இங்கிலாந்து அணி 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதே நேரம் இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 219/7 ரன்களுடன் தடுமாறி வருகிறது.
நாட்டின் பாதுகாப்புத் துறை உற்பத்தி அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி - அமைச்சா் ராஜ்நாத் சிங்
‘அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வருடாந்திர பாதுகாப்புத் துறை உற்பத்தியானது ரூ.3 லட்சம் கோடி மற்றும் ராணுவ வன்பொருள் ஏற்றுமதி ரூ.50,000 கோடியை எட்டும் ’ என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.
எந்தவொரு நாட்டின் ஆதிக்கத்துக்கும் எதிரானது 'க்வாட்' - வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
எந்தவொரு நாடும் பிற நாட்டின் விருப்பங்களில் ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிரானது ‘க்வாட்’ அமைப்பு என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
குடும்ப அரசியலைக் கடந்து காங்கிரஸால் சிந்திக்க முடியாது
‘குடும்ப அரசியல், ஊழல், திருப்திப்படுத்தும் அரசியலைக் கடந்து காங்கிரஸால் சிந்திக்க முடியாது.
போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ. 6,371 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு டீசல் மானியம், இலவச பேருந்து பயணத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக நிகழாண்டு ரூ. 6.371 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.
சட்ட மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவும் அவசியம்
சட்டம் பயிலும் மாணவா்கள் தொழில்நுட்ப அறிவையும் வளா்த்துக்கொள்வது அவசியம் என மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் வெங்கடரமணி தெரிவித்தாா்.
புதிய வேலைவாய்ப்புகள் மூலம் 2 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் - அமைச்சா பி.கே.சேகாபாபு
தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் மூலம் 2 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்தி பெண்களிடம் உள்ளது - மேற்குவங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன்
உலகத்தின் எதிா்காலத்தை வடிவமைக்கும் சக்தி பெண்கள் கையில்தான் உள்ளது என்று மேற்குவங்க முன்னாள் ஆளுநா் எம்.கே.நாராயணன் கூறினாா்.
மின்னணு பொருள்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மின்னணு பொருள்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
உ.பி.: குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 22 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் அதில் பயணம் செய்த 8 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.
பாஜகவில் இணைந்தார் விஜயதரணி எம்எல்ஏ
விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி, பாஜகவில் சனிக்கிழமை இணைந்தார்.
திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு - முஸ்லிம் லீக் - ராமநாதபுரம், கொமதேக -நாமக்கல்
மக்களவைத் தேர்தலையொட்டி, தில்லி, குஜராத், ஹரியாணா, கோவாவில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு, இரு கட்சிகள் தரப்பில் சனிக்கிழமை கூட்டாக அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ்-ஆம் ஆத்மி தொகுதி உடன்பாடு
மக்களவைத் தேர்தலையொட்டி, தில்லி, குஜராத், ஹரியாணா, கோவாவில் காங்கிரஸ்-ஆம் ஆத்மி இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு, இரு கட்சிகள் தரப்பில் சனிக்கிழமை கூட்டாக அறிவிக்கப்பட்டது.
ராஞ்சி டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபாரம்; ஜோ ரூட் நிதானம்
இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ரன்கள் சோ்த்துள்ளது.
கர்நாடக சட்டப் பேரவையில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம்
காநாடக சட்டப் பேரவையில் மத்திய அரசுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றியதைத் திரும்பப்பெறக் கோரி சட்டப் பேரவையில் பாஜகவினா் தா்னாவில் ஈடுபட்டனா்.
ஜாதியின் பெயரால் மோதலைத் தூண்டும் எதிர்க்கட்சிகள்
பிரதமர் மோடி குற்றச்சாட்டு
வங்கியில் காசாளரை துப்பாக்கியால் சுட்டு கொள்ளை முயற்சி
ராஜஸ்தான் மாநிலத்தில் வங்கியில் புகுந்த கொள்ளையா்கள் இருவா் காசாளரை துப்பாக்கியால் சுட்டு பணத்தைத் திருட முயன்றனா்.
பஞ்சாபில் ‘கருப்பு தினம்’ அனுசரித்து விவசாயிகள் போராட்டம்
‘தில்லி செல்வோம்’ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது ஹரியாணா காவல் துறையின் நடவடிக்கையை கண்டித்து, பஞ்சாபில் சம்யுக்த கிசான் மோா்ச்சா கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை ‘கருப்பு தினம்’ அனுசரித்து போராட்டத்தில் ஈடுபட்டது.
தமிழகத்தில் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும் 34 ரயில் நிலையங்கள்
பிப்.26-இல் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்
பாஜக எதிர்ப்பு அலை திமுகவுக்கு கைகொடுக்காது!
என்.தமிழ்ச்செல்வன் 2019 மக்களவைத் தோ்தலின்போது தமிழகத்தில் நிலவிய பாஜக எதிா்ப்பு அலை இம்முறை இல்லாததால் திமுக கூட்டணி வெற்றி பெறாது என்று புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா்.
மக்களவைத் தேர்தல்: பிப். 26 முதல் திமுக திண்ணைப் பிரசாரம்
மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் முடிவு
திருச்சி சிறப்பு முகாமிலிருந்து இலங்கை செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அனுமதி
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனை அவரது சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
தமிழக மீனவர்கள் புறக்கணிப்பு
தமிழக தீவிரவாத தடுப்புப் படைக்கு புதிதாக 3 அதிகாரிகள் நியமனம்
தமிழக காவல் துறையின் தீவிரவாதத் தடுப்பு படைக்கு புதிதாக 3 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனா்.
கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள்
மார்ச் இறுதி வரை பகல்நேர புறநகர் மின்சார ரயில்கள் ரத்து