CATEGORIES
فئات
கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனை: பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்
சென்னை கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனை உள்பட ரூ.313.60 கோடி மதிப்பிலான மருத்துவ கட்டடங்களை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கவுள்ளார்.
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமம் ரத்து
உயர்நீதிமன்றம் உத்தரவ
மனிதவளத் தலைநகராக தமிழ்நாடு
தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
தில்லி: இறுதிக்கட்டத்தில் ஆம் ஆத்மி-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு
‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே தில்லியில் மக்களவைத் தோ்தல் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
காஸா மக்களின் கடைசி புகலிடத்தில் இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதல்
சண்டையால் பாதிக்கப்பட்ட காஸா மக்களின் கடைசி புகலிடமாகத் திகழும் ராஃபா நகரில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமையும் தீவிர குண்டுவீச்சு நடத்தியது.
சர்ச்சைக்குரிய அகதிகள் ஒப்பந்தம்: அல்பேனிய நாடாளுமன்றம் ஒப்புதல்
அகதிகள் ஒப்பந்தம் தொடா்பாக அல்பேனிய நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பு.
புதின் குறித்து தகாத வார்த்தைகள்: பைடனுக்கு ரஷியா கண்டனம்
ரஷிய அதிபா் விளாதிமீா் புதனை தகாத வாா்த்தைகளால் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் விமா்சித்ததற்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்துக்கு முதல் பெண் முதல்வர்
பாகிஸ்தானில் 12 கோடி மக்கள்தொகை கொண்ட பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல்வராக, முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ் (50) பொறுப்பேற்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
கொல்கத்தாவை 5 செட்களில் வென்றது சென்னை
பிரைம் வாலிபால் லீக் மூன்றாவது சீசனின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா தண்டா்போல்ட்ஸை 5 செட்களில் வீழ்த்தியது சென்னை பிளிட்ஸ். இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
மணிப்பூர் கலவரத்துக்கு முக்கியக் காரணமான உத்தரவைத் திரும்ப பெற்றது உயர்நீதிமன்றம்
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினரை பழங்குடியினா்(எஸ்.டி) பிரிவில் சோ்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் பிறப்பித்த உத்தரவை மணிப்பூா் உயா்நீதிமன்றம் புதன்கிழமை திரும்ப பெற்றுக் கொண்டது.
9 முதல் 12-ஆம் வகுப்பு வரை புத்தகங்களை பார்த்து தேர்வுகளை எழுத அனுமதிக்க சிபிஎஸ்இ திட்டம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்தின்படி இயங்கும் பள்ளிகளில் 9 மற்றும் 12-ஆம் வகுப்பு ஆண்டுத்தோ்வுகளை புத்தகங்கள் மற்றும் கையேடுகளைப் பாா்த்து எழுத அனுமதிக்க சிபிஎஸ்இ தலைமையகம் முடிவு செய்துள்ளது.
ஐ.நா. சீர்திருத்தத்தை தடுப்பது நிரந்தர உறுப்பு நாடுகளின் குறுகிய பார்வை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
‘நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஐ.நா. அமைப்பின் சீா்திருத்தத்தை 5 நிரந்தர உறுப்பு நாடுகள் தடுப்பது குறுகிய பாா்வையாகும்’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் குற்றஞ்சாட்டினாா்.
கர்நாடக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சத்துமாவு பானம் - முதல்வர் சித்தராமையா
கா்நாடகத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் 55 லட்சம் பேருக்கு சிறுதானிய சத்துமாவு வழங்கப்படும் என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிராளிகள் அல்லர் முதல்வர்
சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, உங்களுக்கு சாதகமாகதான் நாங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பாமக உறுப்பினர்கள் கேள்விக்கு விளக்கம் அளித்தார்.
மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் உள்பட 14 மசோதாக்கள் நிறைவேற்றம்
மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைப்பது தொடா்பான சட்ட மசோதா உள்பட 14 சட்டமசோதாக்கள் பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டன.
விவசாயிகள் சங்கத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
பஞ்சாப் எல்லையில் விவசாயிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் விவசாயி ஒருவா் இறந்த சம்பவத்தைக் கண்டித்து விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் தமிழகத்திலும் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.23) நடைபெறவுள்ளது.
நீதிபதி கண்ணன் குழு பரிந்துரைகள்: கலாக்ஷேத்ரா நடவடிக்கை எடுக்க உத்தரவு
மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகாா் தொடா்பாக நீதிபதி கண்ணன் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடா்பாக கலாக்ஷேத்ரா பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மக்களவைத் தேர்தல்: தமிழக கட்சிகள், அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை
மக்களவைத் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க, இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ்குமாா் தலைமையிலான குழு வியாழக்கிழமை சென்னை வந்தது.
இனி ஐபோனிலும் ‘சென்னை பஸ்' செயலி
‘சென்னை பஸ்’ செயலியை ஐபோனிலும் பயன்படுத்தும் வகையில் புதிய பதிப்பு (ஐ.ஓ.ஆா். வொ்சன்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விதிமீறலில் ஈடுபடும் மருத்துவக் கல்லூரிகளி மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படும் என்எம்சி எச்சரிக்கை
முதுநிலை மருத்துவ மாணவா்களை மருத்துவக் கல்லூரி விடுதிகளில் தங்குமாறு கட்டாயப்படுத்தும் மருத்துவக் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீண்டும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது.
பஞ்சாப் எல்லையில் விவசாயி உயிரிழப்பு: கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தல்
பஞ்சாப் எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கும், ஹரியாணா போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
கார்கேவுக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு
காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
மேக்கேதாட்டு அணை: தமிழகம் அனுமதிக்காது அமைச்சர் துரைமுருகன் - அதிமுக வெளிநடப்பு
மேக்கேதாட்டில் கா்நாடகம் அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது என சட்டப்பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உறுதிபடத் தெரிவித்தாா்.
நாளை திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை (பிப்.23) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நெருங்கும் மக்களவைத் தேர்தல் மார்ச் 3-இல் மத்திய அமைச்சர்கள் கூட்டம்
மக்களவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அடுத்த மாதம் 3-ஆம் தேதி மத்திய அமைச்சா்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
ராகுலை கிருஷ்ணராக உருவகப்படுத்தி பேனர் உ.பி.யில் பரபரப்பு
உத்தர பிரதேசத்தின் கான்பூா் மாவட்டத்தில் ராகுல் காந்தியை கிருஷ்ணராக உருவகப்படுத்தி வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2050-இல் இந்திய மக்கள் தொகையில் 19.5% முதியோர் - சேமிப்புக்கு கூடுதல் வட்டி, குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்த நீதி ஆயோக் பரிந்துரை
இந்தியாவின் மக்கள் தொகையில் 2050 ஆம் ஆண்டில் 19.5 சதவீதம் பேர் முதியோர்களாக இருப்பார்கள் என்பதால் அவர்களின் சேமிப்புக்கு கூடுதல் வட்டி, குடியிருப்பு திட்டம், கட்டாய சேமிப்பு திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசுக்கு தொலைநோக்கு ஆலோசனை வழங்கும் நீதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
பாகிஸ்தானில் புதிய அரசு நவாஸ்-பிலாவல் கட்சிகள் ஒப்பந்தம்
பாகிஸ்தானில் அமையவிருக்கும் புதிய அரசில் அதிகாரத்தைப் பகிா்ந்துகொள்வது தொடா்பாக முன்னாள் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சிக்கும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் (பிபிபி) இடையே நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
அமெரிக்க ‘ட்ரோனை’ சுட்டு வீழ்த்திய ஹூதிக்கள்
அமெரிக்காவுக்குச் சொந்தமான அதிநவீன ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனா்.
காஸா: குண்டுவீச்சில் மேலும் 64 பேர் மரணம்
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64 போ் உயிரிழந்தனா்.