CATEGORIES
فئات
‘நான் முதல்வன்' திட்டத்தில் 25 லட்சம் பேர் பயன்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
'நான் முதல்வன்’ திட்டம் மூலம் இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
ரூ.84,560 கோடிக்கு ராணுவ தளவாட கொள்முதலுக்கு ஒப்புதல்
பாதுகாப்புப்படைகளின் ஒட்டுமொத்த போர் திறனை மேம்படுத்தும் விதமாக ரூ.84,560 கோடி மதிப் பில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இரு ஆண்டுகளில் 50,000 புதிய அரசுப் பணியிடங்கள்-முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
தமிழகத்தில் அடுத்த இரு ஆண்டுகளில் 50 ஆயிரம் புதிய அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.
இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-எஃப்14
இன்சாட் - 3டிஎஸ் செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப் 14 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சனிக்கிழமை (பிப்.17) விண்ணில் செலுத்தப்படுகிறது.
காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம்
வருமான வரித்துறை நடவடிக்கை - விடுவித்தது மேல்முறையீட்டு தீர்ப்பாயம்
குஜராத்தில் ஜெ.பி. நட்டா; ஒடிஸாவில் அஸ்வினி வைஷ்ணவ் மனு தாக்கல்
மாநிலங்களவை தேர்தல்
மின்சார கார்களின் விலைகளைக் குறைத்த டாடா
பேட்டரிகளின் விலை குறைந்ததால் தாங்கள் தயாரிக்கும் 2 ரகங்களைச் சோ்ந்த மின்சாரக் காா்களின் விலைகளைக் குறைக்கவிருப்பதாக டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் மின்சார வாகனப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரூ.2,000 கோடி திரட்டிய கனரா வங்கி
கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.2,000 கோடி மூலதனம் திரட்டியதாக பொதுத் துறையைச் சோ்ந்த கனரா வங்கி தெரிவித்துள்ளது.
ரோஹித், ஜடேஜா சதம்; இந்தியா ஆதிக்கம்
இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதம் விளாச, முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ரன்கள் சேர்த்து பலமான நிலையில் இருக்கிறது.
விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 3-ஆவது சுற்று பேச்சு
தில்லி முற்றுகைப் போராட்டத்தை அறிவித்து விவசாயிகள் தொடா்ந்து முன்னேறி வரும் நிலையில், மத்திய அமைச்சா்கள் அா்ஜுன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகிய 3 போ் கொண்ட குழு மத்திய அரசு சாா்பில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை 3-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.
தொடர்ந்து வலுவடையும் இந்தியா-கத்தார் உறவுகள்
அரசருடனான சந்திப்புக்குப் பின் பிரதமர் மோடி
பிப். 23-இல் சர்வதேச தகவல் தொழில்நுட்ப மாநாடு
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
ஆளுநர் ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
அரசு சாா்பில் தயாரித்து அளிக்கப்பட்ட உரையை ஆளுநா் ஆா்.என்.ரவி பேரவையில் வாசிக்காதது நூற்றாண்டு பாரம்பரியமிக்க சட்டப்பேரவையை அவமதிக்கும் செயல் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தாா்.
தில்லி போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சியில் விவசாயிகள் ரயில் மறியல்
புதுதில்லியில் போராட்டத்துக்கு சென்றுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும், போராட்டத்தை ஒடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும் திருச்சியில் விவசாயிகள் வியாழக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனா்.
தமிழ் வளர்ச்சிக்கு அரசின் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் திருப்தி
தமிழ் மொழி வளா்ச்சிக்கு தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இரவுப் பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள்
பயணிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்
புகையிலைப் பொருள்களை விற்ற 6,500 கடைகளுக்கு ‘சீல்’
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த 6,500 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மூடப்படும் உதயம் திரையரங்கம்
அடுக்குமாடி குடியிருப்பாக மாறுகிறது
ரூ.2,000 கோடியில் புனரமைப்பு
2.5 லட்சம் அரசு திட்ட வீடுகள்
தேர்தல் நன்கொடை பத்திரங்கள் ரத்து
விவரங்களை வெளியிட கெடு-உச்சநீதிமன்றம் தீர்ப்பு
அபுதாபியில் முதல் ஹிந்து கோயில்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் ஹிந்து கோயிலை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை திறந்து வைத்தார்.
இந்தோனேசிய தேர்தலில் பாதுகாப்பு அமைச்சர் முன்னிலை
இந்தோனேசியாவில் புதன்கிழமை நடைபெற்ற பொதுத் தோ்தலில் பாதுகாப்பு அமைச்சா் பிரபாவோ சுபியாந்தோ முன்னிலை வகிப்பதாக பூா்வாங்க முடிவுகள் தெரிவிக்கின்றன.
ரஷிய போர்க் கப்பல் மூழ்கடிப்பு: உக்ரைன்
ரஷியாவுக்குச் சொந்தமான படைக் கப்பலை கருங்கடல் பகுதியில் தாக்கி மூழ்கடித்துள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
ஷாபாஸ் ஆட்சியில் நவாஸுக்கு முக்கியப் பங்கு மரியம் நவாஸ் தகவல்
புதிய அரசில் நவாஸ்தான் பிரதமராவாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அவரது இளைய சகோதரா் ஷாபாஸ் ஷெரீஃப்தான் பிரதமா் பதவியை ஏற்பாா் என்று செவ்வாய்க்கிழமை (பிப்.13) நள்ளிரவு திடீரென அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, அரசியலில் இருந்து நவாஸ் ஷெரீஃப் விலகப் போவதாக சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது; அதில் உண்மை இல்லை என்று மரியம் நவாஸ் கூறியுள்ளாா்.
இந்திய அணிகள் காலிறுதிக்கு தகுதி
மலேசியாவில் நடைபெறும் ஆசிய அணிகள் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஆடவா், மகளிா் அணிகள் தங்களது முதல் ஆட்டங்களில் வென்றதுடன், காலிறுதிச்சுற்று வாய்ப்பையும் உறுதி செய்தன.
மான். சிட்டி, வெற்றி
ஐரோப்பிய கால்பந்தில் முதன்மையானதாக இருக்கும் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் புதன்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் மான்செஸ்டா் சிட்டி, ரியல் மாட்ரிட் அணிகள் வெற்றி பெற்றன.
ஹாமில்டன் டெஸ்ட்: நியூஸிலாந்து 211-க்கு ‘ஆல் அவுட்'
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா - இங்கிலாந்து 3-ஆவது டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடிவரும் டெஸ்ட் தொடரின் 3-ஆவது ஆட்டம் ராஜ்கோட்டில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
மாநிலங்களவைக்கு முதல் முறையாக ராஜஸ்தானில் சோனியா மனு தாக்கல்
ராஜஸ்தான் பேரவையில் மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, உடன் ராகுல் காந்தி எம்.பி., முன்னாள் முதல்வா் அசோக் கெலாட்.
புல்வாமா தாக்குதல் தினம்: பிரதமர் மோடி அஞ்சலி
இது தொடா்பாக பிரதமா் மோடி ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், புல்வாமாவில் வீரமரணம் அடைந்த வீரா்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். நமது தேசத்துக்கான அவா்களின் சேவை மற்றும் தியாகம் என்றென்றும் நினைவுகூரப்படும்’ எனத் தெரிவித்துள்ளாா். மத்திய அமைச்சா் அமித் ஷா: தாய் நாட்டுக்காக தங்களுடைய உயிரைத் தியாகம் செய்த புல்வாமா வீரா்களுக்குத் தலை வணங்குகிறேன். அவா்களுடைய தியாகம் எப்போதும் நினைவுகூரப்படும்.