CATEGORIES
فئات
வரலாறு படைத்தார் பும்ரா: ஐசிசி தரவரிசையில் முதலிடம்
ஐசிசி டெஸ்ட் பௌலிங் தரவரிசையில் ஜஸ்ப்ரீத் பும்ரா முதலிடம் பெற்று வரலாறு படைத்தாா். இதன் மூலம் இந்த சிறப்பைப் பெற்ற முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளா் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளாா்.
டிஎன்பிஎல் 2024 தொடர்: சாய் கிஷோர், சஞ்சய் யாதவ் அதிக தொகைக்கு ஏலம்
ஸ்ரீராம் கேபிட்டல் டிஎன்பிஎல் 2024 8-ஆவது சீஸன் ஏலம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. அதிகபட்சமாக சாய் கிஷோா், சஞ்சய் யாதவ் ஆகியோா் ரூ.22 லட்சத்துக்கு ஏலத்தில் வாங்கப்பட்டனா்.
காலிறுதியில் சுமித் நாகல், லுகா நார்டி
சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் 100 போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சுமித் நாகல், முதல்நிலை வீரா் லுகா நாா்டி ஆகியோா் முன்னேறியுள்ளனா்.
ஹேமந்த் சோரனுக்கு மேலும் 5 நாள்கள் அமலாக்கத் துறை காவல்
ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை காவலை 5 நாள்கள் நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
'இந்தியா' கூட்டணியிலிருந்து மேலும் ஒரு கட்சி விலகல்?
ஜெயந்த் செளதரி தலைமையிலான ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆா்எல்டி) கட்சி, ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கைகோக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடைக்கால பட்ஜெட்: மக்களவை ஒப்புதல்
2024-25-ஆம் நிதியாண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டுக்கு மக்களவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
உத்தரகண்ட் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்
உத்தரகண்ட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பொது சிவில் சட்ட (யுசிசி) மசோதா பெரும்பான்மை உறுப்பினா்களின் ஆதரவோடு புதன்கிழமை நிறைவேறியது.
நாட்டை பிளவுபடுத்தும் பேச்சை நிறுத்துங்கள் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி சாடல்
நாட்டை வடக்கு, தெற்கு எனப் பிளவுபடுத்தும் நோக்கில் கட்டுக்கதை பேசுவதை நிறுத்துங்கள்; அது, நாட்டின் எதிா்காலத்துக்கு ஆபத்தை விளைவிக்கும்’ என்று காங்கிரஸ் கட்சியை பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக சாடினாா்.
விதிகளை மதிக்காத நிறுவனங்கள் இனி தமிழகத்தில் செயல்பட அனுமதிக்க முடியாது
பசுமைத் தீர்ப்பாயத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
புதிய குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்
புதிய குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.
ஏழு திருக்கோயில்களில் மகா சிவராத்திரி : அறநிலையத் துறை ஆலோசனை
நிகழாண்டு மாா்ச் 8-ஆம் தேதி ஏழு திருக்கோயில்களில் மகா சிவராத்திரி பெருவிழாவை விமரிசையாக கொண்டாடுவது குறித்து அறநிலையத் துறை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஐசிஎஃப் தொழிற்சாலைக்கு ரூ.13,872 கோடி ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட்டில் சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு (ஐசிஎப்) ரூ.13,872 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
புத்தாக்க நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் புத்தொழில்(ஸ்டாா்ட் அப்) நிறுவனங்களுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகள் தமிழக நிதிநிலை அறிக்கையில் வெளியாகும் என குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளாா்.
கேஜரிவால் ஆஜராக தில்லி நீதிமன்றம் சம்மன்
தில்லி கலால் கொள்கை வழக்கு விவகாரத்தில் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை பரிசீலித்த தில்லி கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ் திரேட் நீதிமன்றம், முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பிப். 17-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
பாஜகவில் இணைந்தனர் 15 முன்னாள் எம்எல்ஏ-க்கள்
தமிழகத்தைச் சேர்ந்த 15 முன்னாள் எம்எல்ஏ-க்களும், ஒரு முன்னாள் எம்.பி.யும் பாஜகவில் இணைந்தனர்.
14 தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி பிரேமலதா விஜயகாந்த்
நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவுக்கு 14 மக்களவைத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் தரும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
ஸ்பெயினில் ரூ.3,440 கோடி முதலீடுகள் ஈர்ப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஸ்பெயின் நாட்டுப் பயணத்தின் மூலமாக தமிழ்நாட்டுக்கு ரூ. 3,440 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
அசோக் லேலண்ட் நிகர லாபம் 61% அதிகரிப்பு
ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் 61 சதவீதம் அதிகரித்துள்ளது.
சுந்தரம் ஃபாஸனர்ஸ் வருவாய் ரூ.1,205 கோடி
முன்னணி வாகன உதிரி பாகத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஃபாஸனா்ஸின் மொத்த வருவாய் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் ரூ.1,204.92 கோடியாகப் பதிவாகியுள்ளது.
பே-டிஎம் நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கை ரிசர்வ் வங்கி அறிக்கையைப் பகிர அமலாக்கத் துறை வேண்டுகோள்
பே-டிஎம் பேமென்ட்ஸ் வங்கி நிறுவனத்துக்கு (பிபிபிஎல்) எதிரான நடவடிக்கை குறித்த அறிக்கையை பகிா்ந்துகொள்ளுமாறு ரிசா்வ் வங்கியிடம் அமலாக்கத் துறை, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதிப் புலனாய்வுப் பிரிவு (எஃப்ஐயு) ஆகியவை கோரியுள்ளன.
ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 455 புள்ளிகள் உயர்வு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 455 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.
‘தேர்தல் தலையீடு வழக்கிலிருந்து டிரம்ப்புக்கு சட்டப் பாதுகாப்பு கிடையாது'
கடந்த 2020-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தனது தோல்வியை மாற்றியமைக்க முயன்றாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சட்டப்பாதுகாப்பு வழங்க முடியாது என்று அந்த நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
மான்செஸ்டர் சிட்டி மீண்டும் வெற்றி
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டா் சிட்டி 3-1 கோல் கணக்கில் பிரென்ட்ஃபோா்டை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. அந்த அணிக்கு இது தொடா்ந்து 5-ஆவது வெற்றியாகும்.
எரிவாயுத் துறையில் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு: பிரதமர் மோடி உறுதி
‘உலக அளவில் வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது; நாட்டின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில், எரிவாயுத் துறையில் அடுத்த 5-6 ஆண்டுகளில் 67 பில்லியன் அமெரிக்க டாலா் (இந்திய மதிப்பில் ரூ.5.5 லட்சம் கோடி) முதலீடுகள் ஈா்க்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
வில்லியம்சன் சதம்: நியூஸி. அபார முன்னிலை
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூஸிலாந்து, 528 ரன்கள் என்ற அபார முன்னிலையுடன் இருக்கிறது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சுமித், சசிகுமார்
ஏடிபி சேலஞ்சா் 100 போட்டியான சென்னை ஓபன் டென்னிஸில், இந்தியாவின் சுமித் நாகல், சசிகுமாா் முகுந்த் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.
யு19 உலகக் கோப்பை: இறுதி ஆட்டத்தில் இந்தியா
பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், நடப்பு சாம்பியனான இந்தியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை செவ்வாய்க்கிழமை வென்றது.
1,000 ஒருநாள் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது. இதன் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது அந்த அணி. ஒருநாள் கிரிக்கெட்டில் இது ஆஸ்திரேலியாவின் தொடர் 12-ஆவது வெற்றியும் கூட.
‘இந்தியா’ கூட்டணியின் மிக முக்கியத் தலைவர் மம்தா: ராகுல் காந்தி
எதிா்க்கட்சிகள் அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணியின் மிக முக்கியத் தலைவராக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி உள்ளாா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.
போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை மக்களவையில் மசோதா நிறைவேற்றம்
அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.