CATEGORIES
فئات
ஜெய்ஸ்வால் சதம்: முன்னேறும் இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அசத்தலான பேட்டிங்கால் இந்தியா முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்கள் சேர்த்து முன்னேறி வருகிறது.
நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டுநர்களுக்காக பல்வேறு வசதிகளுடன் 1,000 ஓய்விடங்கள்
பிரதமர் மோடி அறிவிப்பு
மாநிலங்களவையில் பாஜக-காங்கிரஸ் காரசார விவாதம்
கர்நாடக காங்கிரஸ் எம்.பி.யின் 'தனிநாடு' கருத்து
2024 மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே ‘இந்தியா’ கூட்டணி: காங்கிரஸ் விளக்கம்
இந்தியா கூட்டணி என்பது மக்களவைத் தோ்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக நலன்களில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை
டி.ஆர்.பாலு
ஜார்க்கண்ட் முதல்வராக சம்பயி சோரன் பதவியேற்பு; இரு அமைச்சர்களும் பதவியேற்றனர்
ஜாா்க்கண்ட் மாநில முதல்வராக ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் மூத்த தலைவா் சம்பயி சோரன் வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ திடீர் சோதனை
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், தமிழகத்தில் ஆயுதப் போராட்டம் நடத்ததிட்ட மிட்டதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி கள் 6 பேர் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வெள் ளிக்கிழமை சோதனை நடத்தினர்.
மணல் ஒப்பந்ததாரர்களின் ரூ.130 கோடி சொத்துகள் முடக்கம்
அமலாக்கத் துறை நடவடிக்கை
தமிழகத்தில் ஒரு மாதத்தில் 32 பேர் உடல் உறுப்புகள் தானம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் அலுவலகக் கட்டடம் திறப்பு
பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருக் அலுவலகக் இளைஞர் நலன்,விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மெட்ரோ ரயில் பயணச்சீட்டு பெற புதிய முறை அறிமுகம்
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான பயணச்சீட்டை ஓஎன்டிசி எனும் நெட்வொா்க் மூலம் பெற்றுக்கொள்வற்கான புதிய முறையை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
மேகாலய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ். வைத்தியநாதன் நியமனம்
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ். வைத்தியநாதன் மேகாலய உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
அமலாக்கத் துறை காவலில் ஹேமந்த் சோரன்
சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனை 5 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
'தமிழக வெற்றி கழகம்'
ரூ.29-க்கு ஒரு கிலோ 'பாரத்' அரிசி
அடுத்த வாரம் விற்பனைக்கு வருகிறது; மத்திய அரசு அறிவிப்பு
பட்ஜெட் நாளில் பங்குச்சந்தை தடுமாற்றம் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
மத்திய இடைக்கால பட்ஜெட் நாளான வியாழக்கிழமை பங்குச்சந்தை தடுமாற்றம் கண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் நிறைவடைந்தன.
விளையாட்டு அமைச்சகத்துக்கு ரூ.3,442 கோடி ஒதுக்கீடு - பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டு
நிகழாண்டு பட்ஜெட்டில் விளையாட்டுத் துறை அமைச்சகத்துக்கு ரூ.3,442.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.3,396.96 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் நிகழாண்டு ரூ.45.36 கோடி கூடுதல் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியா இங்கிலாந்து மோதும் விசாகப்பட்டினம் டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் 2-ஆவது ஆட்டம், விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
தாய்லாந்து மாஸ்டர்ஸ்: காலிறுதியில் மிதுன், அஷ்மிதா
தாய்லாந்து மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மிதுன் மஞ்சுநாத், அஷ்மிதா சாலிஹா ஆகியோா் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினா். கே.ஸ்ரீகாந்த் தோல்வி கண்டாா்.
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருக்கு நீதிமன்றக் காவல்
சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் புதன்கிழமை கைது செய்யப்பட்ட ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் ஒரு நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் பட்ஜெட் - எதிர்க்கட்சிகள் விமர்சனம்
எவ்வித தொலைநோக்குப் பாா்வையும் பொறுப்பும் இல்லாமல் பணக்காரா்களை மேலும் பணக்காரா்களாக மாற்றுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விமா்சித்தனா்.
ஒரு கோடி வீடுகளில் பிரதமரின் சூரிய மின்சார திட்டம்: ஆண்டுக்கு ரூ.18,000 சேமிப்பு
‘பிரதமரின் சூரியோதய திட்டம் மூலம் ஒரு கோடி வீடுகளில் மாதத்துக்கு 300 யூனிட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும். இதனால், ஆண்டுக்கு ரூ.18,000 வரை அந்தக் குடும்பத்தினா் சேமிக்க முடியும்’ என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
56 நிமிஷங்களில் நிர்மலா சீதாராமனின் இடைக்கால பட்ஜெட் உரை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6-ஆவது முறையாக வியாழக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரை சுருக்கமாக 56 நிமிஷங்களில் முடிவடைந்தது.
ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க சம்பயி சோரனுக்கு ஆளுநர் அழைப்பு
ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் அளித்த சோரன்.
தமிழகத்தில் ரூ.2,500 கோடியில் சரக்கு முனையங்கள் ஸ்பெயினில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
தமிழகத்தில் ரூ.2,500 கோடியில் சரக்கு முனையங்கள், சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதற்கு ஸ்பெயின் நாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பாம்பன் புதிய ரயில் பாலப் பணி: கிரேன் விழுந்து 6 பேர் பலத்த காயம்
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் வியாழக்கிழமை தூண்கள் பொருத்தும் பணியின் போது, கிரேன் உடைந்து கீழே விழுந்ததில் 6 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.
தமிழகத்தில் பாஜகவை கால்பதிக்க விடக் கூடாது - அமைச்சர் உதயநிதி
சென்னை ராயபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் பொய்யாமொழி (உள்படம்).
அங்கன்வாடி ஊழியர்களுக்கும் ஆயுஷ்மான் காப்பீடு: சுகாதாரத் துறைக்கு ரூ.90,000 கோடி
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ரூ.90,658.63 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முத்ரா திட்டம்: இதுவரை ரூ22.5 லட்சம் கோடி கடன்
பிரதமரின் ‘முத்ரா’ திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.22.5 லட்சம் கோடி மதிப்பில் 43 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு, உரத்துக்கான மானியம் ரூ.3.69 லட்சம் கோடி ஒதுக்கீடு - திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட 8% குறைவு
உணவு மற்றும் உரங்களுக்கான 2024-25-ஆம் ஆண்டுக்கான மானியமாக ரூ.3.69 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது நடப்பு நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டைக் காட்டிலும் 8 சதவீதம் குறைவாகும்.