CATEGORIES
فئات
சமாதான பேச்சுக்கு நெதன்யாகு முட்டுக்கட்டை
தனது அரசியல் லாபத்துக்காக காஸா போா் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடா்பான பேச்சுவாா்த்தைக்கு இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு முட்டுக்கட்டை ஏற்படுத்துவதாக கத்தாா் குற்றம் சாட்டியுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் தரிசன நேரம் நீட்டிப்பு
அயோத்தி ராமா் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தா்கள் தினசரி வருகை தந்து கொண்டிருப்பதால், தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இறுதிச்சுற்றில் சபலென்கா - ஜெங் பலப்பரீட்சை
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில், பெலாரஸின் அரினா சபலென்கா - சீனாவின் கின்வென் ஜெங் ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.
அநீதிக்கு எதிராக ‘இந்தியா' கூட்டணி ஒற்றுமையுடன் போராடும்: ராகுல் நம்பிக்கை
‘நாடு முழுவதும் நிகழ்ந்து வரும் அநீதிக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் போராடும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தாா்.
மீண்டும் பாஜகவில் இணைந்தார் ஜெகதீஷ் ஷெட்டர் !
கா்நாடக சட்டப்பேரவை தோ்தலையொட்டி, பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா், பாஜகவில் வியாழக்கிழமை மீண்டும் இணைந்தாா்.
திரிணமூல் காங்கிரஸுடன் தொகுதி உடன்பாட்டுக்கு விரைவில் தீர்வு ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை
திரிணமூல் காங்கிரஸுடன் தொகுதி உடன்பாட்டுப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். இது தொடர்பாக அக் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்' என்று காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
கேரள சட்டப்பேரவை 2 நிமிஷங்களுக்குள் உரையை முடித்த ஆளுநர்!
கேரளத்தில் ஆளும் இடதுசாரி அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், சட்டப்பேரவையில் 2 நிமிஷங்களுக்குள் தனது உரையை முடித்தாா் ஆளுநா் ஆரிஃப் முகமது கான்.
குடியரசு தின கொண்டாட்டம்: தில்லியில் உச்சபட்ச பாதுகாப்பு
நாட்டின் 75-ஆவது குடியரசு தின கொண்டாட்டம் தில்லியில் உள்ள கடமைப் பாதையில் வெள்ளிக்கிழமை (ஜன. 26) காலை நடைபெறுகிறது. குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் பங்கேற்கிறாா்.
9 தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருது தமிழறிஞர் அரங்க ராமலிங்கம், 8 பேர் தேர்வு
இரண்டு ஆண்டுகளுக்கான இலக்கிய மாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அரங்க.ராமலிங்கம் உள்பட 9 தமிழறிஞா்கள் விருதுகளைப் பெறவுள்ளனா்.
நாட்டு மக்களே எனது குடும்பம்: பிரதமர் மோடி
‘நாட்டு மக்களே எனது குடும்பம்; அவா்களின் கனவுகளே எனது உறுதிப்பாடுகள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
தமிழகத்தில் பிப்.13-இல் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை
மக்களவைத் தோ்தல் தொடா்பாக தமிழக காங்கிரஸ் நிா்வாகிகளுடன் அந்தக் கட்சியின் அகில இந்திய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, சென்னையில் பிப். 13-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளாா்.
வட மாநில மக்களுக்குக்கூட மத்திய அரசு நன்மை செய்யவில்லை- முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஹிந்தி மொழி பேசும் வட மாநில மக்களுக்குக்கூட, மத்திய பாஜக அரசு நன்மை செய்யவில்லை என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினாா்.
திருச்சியில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் மாநாடு | முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் எனும் தலைப்பிலான மாநாடு திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
பணிப்பெண் சித்ரவதை வழக்கு: திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் கைது
பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மொ்லினா ஆகியோரை தனிப்படை போலீஸாா் ஆந்திர மாநிலத்தில் கைது செய்தனா்.
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 40 சரிவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 46,640-க்கு விற்பனையானது.
இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி காலமானார்
இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி (47) உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் வியாழக்கிழமை காலமானாா்.
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு
தீ விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த அதிமுக முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் மருமகள் பூா்ணிமா சிகிச்சை பலனின்றி வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கேலோ சைக்களத்தான்: போக்குவரத்து மாற்றம்
கேலோ சைக்களத்தான் போட்டி நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (ஜன.26) முதல் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெங்கையா நாயுடு, வைஜெயந்தி மாலா, பத்மா சுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷண்: விஜயகாந்துக்கு பத்ம பூஷண்
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு (74), பழம் பெரும் நடிகை வைஜெயந்தி மாலா (90), தெலுங்கு நடிகா் சிரஞ்சீவி (68), சென்னையைச் சோ்ந்த பரதநாட்டியக் கலைஞா் பத்மா சுப்பிரமணியம் (80), பிகாரைச் சோ்ந்த மறைந்த சமூக ஆா்வலா் பிந்தேஸ்வா் பதக் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதும், மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதார வளர்ச்சி தொடரும் குடியரசுத் தலைவர் நம்பிக்கை
கடந்த சில ஆண்டுகளாக வேகமடைந்து வரும் இந்திய பொருளாதார வளா்ச்சி வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நம்பிக்கை தெரிவித்தாா்.
இந்தியாவில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஜெய்பூரில் பிரதமர் மோடியுடன் பேச்சு
குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் வியாழக்கிழமை இந்தியா வந்தாா்.
திமுக அரசின் முயற்சிகளால் ஜல்லிக்கட்டு தடைகள் விலகின
திமுக அரசு மேற்கொண்ட தீவிர முயற்சிகளால் தான் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான தடை கள் விலகின என்றார் முதல்வர் மு.க. ஸ்டா லின்.
பட்ஜெட் கூட்டத்தொடர்: நாடாளுமன்ற பாதுகாப்புக்கு 140 சிஐஎஸ்எஃப் வீரர்கள்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் வரும் 31-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், நாடாளுமன்றப் பாதுகாப்புக்காக மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) 140 போ் கொண்ட குழு பணியமா்த்தப்பட்டுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
அயோத்தியில் தொடர்ந்து குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்
அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபாலராமரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்து வருகின்றனா்.
நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டத்தை ஊக்குவிக்க ரூ. 8,500 கோடி
நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டத்தை ஊக்குவிக்க ரூ. 8,500 கோடி அளவுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வழக்குகளுக்கு அஞ்ச மாட்டேன்: ராகுல் காந்தி
பாஜக ஆளும் மாநில அரசுகள் என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் என்னை அச்சுறுத்த முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.
சென்னையில் குற்றங்களைக் கட்டுப்படுத்த 3 செயலிகள்
டிஜிபி சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
பன்னாட்டு மருத்துவ மாநாடு ஆய்வுரைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்
சென்னையில் அண்மையில் நடைபெற்ற பன்னாட்டு மருத்துவ மாநாட்டின் ஆய்வுரைகள், அறிக்கைகள் ஆவணங்களாகத் தொகுக்கப்பட்டு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
‘இந்தியா’ கூட்டணிக்குப் பின்னடைவு
மேற்கு வங்கத்தில் திரிணமூல், பஞ்சாபில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி
'தமிழர் பண்பாட்டின் அடையாளமாக ஏறுதழுவுதலுக்கு அரங்கம்’
தமிழா் பண்பாட்டின் அடையாளமாக ஏறுதழுவுதலுக்கு அரங்கம் அமைத்துள்ளது திமுக அரசு என்றாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.