CATEGORIES
فئات
அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதி உடையவரா?
அமெரிக்க முன்னாள் அதிபர்டொனால்ட்டிரம்ப் நாட்டின் அதிபராக மீண்டும் பதவியேற்க மனரீதியாக தகுதி பெற்றவரா எனக் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியாளர் நிக்கி ஹேலி சனிக்கிழமை கேள்வியெழுப்பினார்.
ஆசிய மாரத்தான்: மான் சிங் சாம்பியன்
ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரா் மான் சிங் ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்று அசத்தினாா்.
‘ஃபெடரர் சாதனையை சமன் செய்த ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
ராமர் கோயில் பணி நிறைவுக்கு மேலும் ரூ.300 கோடி தேவைப்படும்
அறக்கட்டளை பொருளாளர் தகவல்
‘நடைப்பயணத்தில் பங்கேற்கக் கூடாது' மக்களை மிரட்டும் பாஜக: ராகுல் குற்றச்சாட்டு
பாரத ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் பங்கேற்கக் கூடாது என்று அஸ்ஸாம் மாநில பாஜக அரசு மக்களை மிரட்டி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.
வாட்ஸ்ஆப் மூலம் மோசடி: பயனாளர்களுக்கு எச்சரிக்கை
வாட்ஸ்ஆப்பில் வேலைவாய்ப்பு, முதலீட்டுத் திட்டங்கள், ஆள்மாறாட்டம், ஸ்க்ரீன் ஷோ் என்ற பெயரில் மோசடி நடைபெறுவது குறித்து பயனாளா்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (பிபிஆா்டி) அறிவுறுத்தியுள்ளது.
இந்திய-அமெரிக்க உறவு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகள் என்பது இவ்விரு நாடுகளுக்கு மட்டுமின்றி சா்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என அமெரிக்காவுக்கான இந்திய தூதா் தரண்ஜித் சிங் சாந்து தெரிவித்தாா்.
அரிச்சல்முனை கடற்கரையில் பிரதமர் மோடி வழிபாடு
ராமநாதபுரம் மாவட் டம், ராமேசுவரத்தை அடுத்த அரிச்சல்முனை சேது தீர்த்தக் கடற்கரையில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மேற்கொண்டார்.
மத்திய பாஜக அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்
தமிழகத்துக்கு உரிய நிதியை வழங்காத மத்திய பாஜக அரசுக்கு மக்களவைத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி கூறினார்.
மக்களவைத் தேர்தலில் இளைஞரணியினருக்கு வாய்ப்பு
முதல்வரிடம் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
40 தொகுதிகளிலும் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெறும்
மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் ‘இந்தியா' கூட்டணி வெற்றி பெறும் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்துக் கடிதம்
அயோத்தி ஸ்ரீராமா் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னின்று நடத்துவதற்காக பிரதமா் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதினாா்.
கோயில்களில் சிறப்பு பூஜைக்கு தடையில்லை
அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டையையொட்டி தமிழக கோயில்களில் திங்கள்கிழமை (ஜன. 22) ராமா் பெயரில் சிறப்பு பூஜைகள், அன்னதானங்கள் வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.
அயோத்தியில் ஸ்ரீராமர் சிலை இன்று பிரதிஷ்டை
உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபால ராமா் (ராம் லல்லா) சிலை திங்கள்கிழமை (ஜன.22) பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
கம்ப ராமாயணம் கேட்ட பிரதமர் மோடி 30ரீரங்கம் அ
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு சனிக்கிழமை வருகை தந்த பிரதமா் நரேந்திரமோடி, கம்பா் மண்டபத்தில் அமா்ந்து கம்பராமாயணப் பாடல்களை கேட்டு மகிழ்ந்தாா்.
2 கி.மீ. தொலைவுக்கு பிரதமர் காரில் பயணம்
வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
'இஸ்ரேல் தாக்குதலில் 4 ஈரான் ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு'
சிரியா தலைநகா் டமாஸ்கஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தங்கள் நாட்டைச் சோ்ந்த 4 பாதுகாப்புப் படை அதிகாரிகள் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.
ராமர் கோயில் பிரசாதம் என்ற பெயரில் அமேசானில் இனிப்புகள் விற்பனை
மத்திய நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்
3 ஆண்டுகளில் நக்ஸல் அச்சுறுத்தலில் இருந்து நாடு விடுபடும்
அமித் ஷா
சபரிமலையில் தரிசனம் கிடைக்காமல் திரும்பிய தமிழக பக்தர்கள்!
கட்டுக்கடங்காத பக்தா் கூட்டம் காரணமாக சபரிமலையில் தரிசனத்துக்குச் சென்ற பலா் தரிசனம் கிடைக்காமல் திரும்ப வேண்டிய நிலைமை இந்த ஆண்டு ஏற்பட்டதாக பக்தா்கள் குமுறுகிறாா்கள். ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்படாததால் மிகுந்த அவதிக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
100 புதிய பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்ட 100 புதிய பிஎஸ்4 பேருந்துகளை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று காலை கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
விண்வெளியில் பயனற்ற செயற்கைக்கோள்களை அழிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்
சந்திரயான்– 3 திட்ட இயக்குநர்
சேலத்தில் இன்று திமுக இளைஞரணி 2-ஆவது மாநில மாநாடு
திமுக இளைஞரணி 2 ஆவது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கட்சிக் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திமுகவிடம் அதிக தொகுதிகளைப் பெற வேண்டும்
மேலிடப் பொறுப்பாளரிடம் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தல்
கட்டுமான நிறுவன உரிமையாளர் வீட்டில் அமலாக்கத் துறை 2-ஆவது நாளாக சோதனை
சட்டவிரோத பணபரிமாற்ற புகாா் தொடா்பாக சென்னையைச் சோ்ந்த தனியாா் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளா் வீட்டில் அமலாக்கத்துறையின் சோதனை இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றது.
தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய சிந்தனைகள் தேவை
தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய சிந்தனைகள் கட்டாயம் தேவை என்று மாநில தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.
7 இடங்களில் இன்று ‘மக்களுடன் முதல்வர்' முகாம்
சென்னையில் 7 இடங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
சென்னையில் விரைவில் பள்ளிகள் பாதுகாப்பு மண்டலம்
சென்னையில் விரைவில் பள்ளிகள் பாதுகாப்பு மண்டலம் அமைக்கப்படும் என பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் தெரிவித்தாா்.
நாளை ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை
விழாக்கோலம் பூண்டது அயோத்தி
ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத் துறை விசாரணை
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனிடம் (48) அமலாக்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.