CATEGORIES
فئات
ஜப்பான் நிலநடுக்க உயிரிழப்பு
ஜப்பான் நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 84-ஆக உயர்ந்தது.
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் 4 பேர் உயிரிழப்பு
லெபனான் தலைந கர் பெய்ரூட்டில் ஹமாஸ் துணைத் தலைவர் சலே அல்-அரூரி வைத்துக் கொல்லப்பட்ட குறி மறுநாளே, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்த நாட்டின் சக்திவாய்ந்த ஹிஸ்புல்லா ஆயுதப் படையைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் மீது ஈரான் குற்றச்சாட்டு
தங்கள் நாட்டின் துணை ராணுவப் படை தளபதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் காரணம் என்று ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
சாகசத்துக்கு லட்சத்தீவு: பிரதமர் மோடி பரிந்துரை!
சாகசத்தை விரும்புபவராக இருந்தால் உங்கள் பயணப் பட்டியலில் லட்சத்தீவு இடம் பெற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளாா்.
காலிறுதியில் நடால்
நடப்பு காலண்டரின் முதல் டென்னிஸ் போட்டியான பிரிஸ்பேன் இன்டர்நேஷனலில், நட்சத்திர வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.
இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்; இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது.
உக்ரைனுக்கு பீரங்கி குண்டுகள் அனுப்பியதா இந்தியா?
உக்ரைனில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பீரங்கி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக ஊடகத் தகவல்கள் வெளியான நிலையில், இத்தகவல்களில் உண்மையில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.
'மக்களவைத் தேர்தலில் வெல்ல ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்'
மக்களவைத் தேர்தலில் வெல்ல காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்கிடையே உள்ள வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும்' என அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனகார்கே வியாழக்கிழமை வலியுறுத்திப் பேசினார்.
பிரதமர் மோடி தலைமையில் வலுவாக செயல்படும் இந்தியா
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வலுவாக செயலாற்றி வருவதாக சீனாவில் இருந்து வெளியாகும் அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ நாளிதழ் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவல் 14-ஆவது முறையாக நீட்டிப்பு
அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 14-ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்துக்கு 9 ஆண்டுகளில் ரூ. 6.96 லட்சம் கோடி
தமிழகத்துக்கு கடந்த 9 ஆண்டுகளில் ரூ. 6,96,666 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் தமிழகத்தில் இருந்து மத்திய அரசுக்கு வரும் வரி வருவாயை விட மத்திய அரசு வழங்கும் நிதி அதிகம் எனவும் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.
தென்னை நார்களை மதிப்புக்கூட்ட அதிநவீன ஆய்வகம்: தனி கொள்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தென்னை நார்களை மதிப்புக்கூட்ட அதிநவீன ஆய்வகம் நிறுவப்படும் என்று தென்னை நார் தொழிலுக்கான தனித்த கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நேபாளத்திலிருந்து 10,000 மெகாவாட் மின்சாரம்
நேபாளத்திலிருந்து அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் மின்சாரத்தை வாங்க அந்நாட்டுடன் இந்தியா வியாழக்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது.
பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
இந்தியாவில் தொழில் தொடங்க வரும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வமுடன் தேர்வு செய்யும் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது என்று தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம் தெரிவித்தார்.
லியோ திரைப்பட விவகாரம் பதில் மனு தாக்கல் செய்ய இயக்குநருக்கு அவகாசம்
லியோ திரைப்பட விவகாரத்தில், அந்தப் படத்தின் இயக்குநா் லோகேஷ் கனகராஜ் பதில் மனு தாக்கல் செய்ய 4 வாரங்கள் அவகாசம் வழங்கி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மோரீஷஸ் நாட்டுக்கான கௌரவ தூதர் தொடர்புடைய இடங்களில் சோதனை: ரூ.850 கோடி ஆவணங்கள் பறிமுதல்
அமலாக்கத்துறை நடவடிக்கை
காவல் துறை உள்பட 3 துறைகளுக்கு புதிய கட்டடங்கள்
காவல் துறை உள்பட 3 துறைகளுக்கான புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
கரோனா தடுப்பூசியால் மாரடைப்பு? ஆய்வு நடத்தப்படுவதாக அமைச்சர் தகவல்
கரோனா தடுப்பூ சியால் மாரடைப்பு ஏற்படுகிறதா என்பது குறித்த ஆராய்ச்சியை விரிவாக முன்னெடுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
மாரத்தான் ஓட்டம்: அடையாறு பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம்
மாரத்தான் ஓட்டத்தையொட்டி, சென்னை அடையாறு பகுதியில் ஜனவரி 6ஆம் தேதி (சனிக்கிழமை) போக்குவ ரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு
அமைச்சர் பி.கே.சேகர்பாபு
காங்கிரஸில் ஆந்திர முதல்வரின் சகோதரி ஒய்.எஸ்.ஆர்.ஷர்மிளா
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியான ஓய்.எஸ்.ஆர்.ஷர்மிளா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே. எம்.பி. ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் வியாழக்கிழமை இணைந்தார்.
பிரதமரிடம் உதயநிதி நேரில் வலியுறுத்தல்
தமிழக வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் வலியுறுத்தினார்.
அமித்ஷாவை சந்திக்கிறது தமிழக எம்.பி.க்கள் குழு
வெள்ள நிவாரண நிதி கோரிக்கை
சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்
பபாசி சார்பில் நடைபெறும் 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அசோக் லேலண்ட் விற்பனை 16,324
ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் கடந்த டிசம்பா் மாத மொத்த விற்பனை 16,324-ஆக பதிவாகியுள்ளது.
55-க்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா; 153-க்கு சரிந்த இந்தியா
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியாவும் 153 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் சரிந்த இந்த ஆட்டத்தில் பௌலா்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனா்.
லட்சத்தீவில் ரூ.1,150 கோடி வளர்ச்சித் திட்டங்கள்
லட்சத்தீவில் வேகமான இணையதள வசதி உள்பட ரூ.1,150 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை புதன்கிழமை தொடங்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி, பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்
காங்கிரஸ்-இடதுசாரிகள் ஊழல் கூட்டணி
பிரதமர் மோடி
குற்றவியல் சட்ட மசோதாக்கள்: ஓர் பார்வை!
குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மூன்று மசோதாக்களை திரும்பப் பெற்ற மத்திய அரசு, திருத்தங்களுடன் புதிய மசோதாக்களை மக்களவையில் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இம்மசோதாக்கள் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.