CATEGORIES
فئات
காஸா: 22 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு
காஸாவில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ஜப்பான் நிலநடுக்கத்தில் 55 பேர் உயிரிழப்பு
ஜப்பானில் திங்கள்கிழமை ஏற்பட்ட கடுமையான தொடா் நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.
இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதும் 2-ஆவது டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது மற்றும் கடைசி ஆட்டம், கேப் டவுனில் புதன்கிழமை தொடங்குகிறது.
ஒருநாள் தொடரை முழுமையாக வென்றது ஆஸி.
இந்திய மகளிருக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை அபார வெற்றி பெற்றது.
நடாலுக்கு முதல் வெற்றி; சோஃபியா அதிர்ச்சித் தோல்வி
பிரிஸ்பேன் இன்டர்நேஷனல் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் முதல் சுற்றில் வெற்றி கண்டார்.
குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் விரைவில் வெளியீடு? I mim Tula ே
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) விதிகள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம்: அமித் ஷா ஆய்வு
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த மாதம் 5 ராணுவ வீரா்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: பாதுகாப்புப் படையினர் 5 பேர் காயம்
இம்பால்: மணிப்பூரில் பழங்குடியினா் அதிகம் வாழும் தேங்நெளபால் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 5 போ் காயமடைந்தனா்.
சபரிமலையில் ஜன.10 முதல் தரிசனத்துக்கு நேரடி பதிவு இல்லை
சபரிமலை: சபரிமலையில் ஜனவரி 10-ஆம் தேதிமுதல் தரிசனத்துக்கு பக்தா்கள் நேரடியாகப் பதிவு செய்ய முடியாது (ஸ்பாட் புக்கிங்) என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் (டிடிபி) தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம்: வேதாந்தாவின் மனுவை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் தாமிர உருக்காலை மூடல் விவகாரம் தொடா்பான வேதாந்தா குழுமத்தின் மேல்முறையீட்டு மனுவைப் பரிசீலிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் தெரிவித்தது.
ஜெஎன் 1 வகை கரோனா பாதிப்பு 4 நாள்களில் குணமாகிவிடும்
ஜெஎன்1 வகை கரோனா தொற்று பாதித்தோா் 4 நாளில் குணமாகி விடுவதால், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
பள்ளிகள் திறப்பு; பாடநூல்கள் விநியோகம்
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட நிலையில் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு முதல் நாளிலேயே மூன்றாம் பருவத்துக்கான பாடநூல்கள் விநியோகிக்கப்பட்டன.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கூடுதல் நிதி: மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
காமராஜர் துறைமுகத்தில் ரூ.206 கோடியில் புதிய சரக்கு முனையம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ.206 கோடி மதிப்பிலான இரண்டாவது பொது சரக்கு முனையத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெருந்திட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு பேருந்து சேவைகள் மாற்றப்பட்டதால், காலியாகும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், அதையொட்டி உள்ள சிஎம்டிஏ-வுக்குச் சொந்தமான 16 ஏக்கா் இடத்தை ஒருங்கிணைத்து மக்களுக்கு பயன்படும் வகையில் பெருந்திட்டம் அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
இன்றுமுதல் சென்னை புத்தகக் காட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
பபாசி சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு தொடங்கி வைக்கவுள்ளாா்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மாணவர்களுக்கு பிரதமர் பாராட்டு
திருச்சி பன்னாட்டு விமான நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புதிய முனைய திறப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய அரசு இசைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தாா்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு
அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க அரசாணை வெளியிடப்ப்பட்டுள்ளது. இதற்காக ரூ.238 கோடி நிதி ஒதுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு
லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி
ஜப்பான்: ஓடுதளத்தில் விமானங்கள் மோதி தீக்கிரை பயணிகள் தப்பினர்
ஜப்பான் தலைநகா் டோக்கியோவிலுள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற பயணிகள் விமானத்துடன் கடலோரக் காவல் படை விமானம் மோதியதில் இரு விமானங்களும் தீக்கிரையாகின.
தமிழகம் வஞ்சிக்கப்படவில்லை - பிரதமர் நரேந்திர மோடி
பாஜகவின் தற்போதைய 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்துக்கு இரண்டரை மடங்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
முதல் சூரிய உதயம்: கன்னியாகுமரியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்
முக்கடல் சங்கமம் பகுதியில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள். (வலது) மேக மூட்டம் காரணமாக தெளிவாகத் தெரியாத சூரிய உதயம்.
உக்ரைன் மீது ரஷியா இதுவரை இல்லாத தீவிர ட்ரோன் தாக்குதல்
உக்ரைன் மீது ரஷியா இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கையில் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது.
போர் வியூகங்கள் மாற்றப்படும்: இஸ்ரேல்
காஸாவில் நீண்டகாலம் சண்டையிடுவதற்கு ஏற்ற வகையில் போர் வியூகங்கள் மாற்றிய மைக்கப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்: டேவிட் வார்னர் ஓய்வு
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டர் டேவிட் வார்னர் (37), ஒருநாள் ஓய்வு கிரிக்கெட்டிலிருந்து பெறுவதாகதிங்கள்கிழமை அறிவித்தார்.
பிரிஸ்பேன் இன்டர்நேஷனல்: ரூன், ஒசாகா வெற்றி .
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரிஸ்பேன் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில் டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன், ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோா் முதல் சுற்றில் திங்கள்கிழமை வெற்றி பெற்றனா்.
தொழில்நுட்பத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணியாளா்களுக்கு, ஆதாா் அடிப்படையிலான பணப் பரிவா்த்தனையில் ஊதியம் வழங்கும் நடைமுறையை மத்திய அரசு கட்டாயமாக்கியதற்கு காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
'இந்தியா' கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் அவசியம்
'இந்தியா' கூட்ட ணிக்கு தலைவர், ஒருங்கிணைப்பா ளர் நியமிக்கப்படுவது அவசியம் என்று சிவசேனை (உத்தவ் பிரிவு) மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.
ஜன. 6-இல் எல்-1 புள்ளியை அடைகிறது ஆதித்யா
இஸ்ரோ தலைவர் சோமநாத்
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரின் ரூ.4.71 கோடி சொத்துகள், 453 பவுன் நகைகள் முடக்கம்
அமலாக்கத் துறை நடவடிக்கை