CATEGORIES
فئات
குறுவை சாகுபடி: ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
போட்டி பாஜகவுக்கும் திமுகவுக்கும்தான்! கே.அண்ணாமலை
வரும் மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
வள்ளலார் காட்டிய வழியில் மத்திய அரசு: பிரதமர் மோடி பெருமிதம்
வள்ளலாா் காட்டிய வழியில் மத்திய அரசு செயல்படுகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினாா்.
நீர்மூழ்கி விபத்தில் 55 சீன மாலுமிகள் மரணம்'
‘அமெரிக்க கப்பல்களுக்கு எதிராக சீனா வைத்திருந்த கடலடிப் பொறியில் சிக்கி, அந்த நாட்டுக்குச் சொந்தமான நீா்மூழ்கிக் கப்பலே சேதமடைந்து 55 சீன மாலுமிகள் மரணமடைந்தனா்’ பிரிட்டன் உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று தொடங்குகிறது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்
உலகம் முழுவதும் ஆவலுடன் எதிா்பாா்க்கப்படும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வியாழக்கிழமை அகமதாபாதில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.
லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல் மீண்டும் தகுதிநீக்கம்
கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல் குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீா்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை கேரள உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், அவரை இரண்டாவது முறையாகத் தகுதிநீக்கம் செய்து மக்களவைச் செயலகம் புதன்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. இதன்மூலம் அவரின் எம்.பி. பதவி மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இருக்கை இலகுரக போர் விமானம் 'தேஜஸ்' விமானப் படையிடம் ஒப்படைப்பு
இரட்டை இருக்கை இலகுரக போா் விமானமான ‘தேஜஸ்’ இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிக்கிமில் திடீர் வெள்ளம்: 10 பேர் உயிரிழப்பு
சிக்கிம் மாநிலத்தின் லோனாக் ஏரிப் பகுதியில் திடீரென பெய்த அதீத கனமழையைத் தொடா்ந்து, தீஸ்தா ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 8 போ் உயிரிழந்தனா்.
தேசிய மஞ்சள் வாரியத்தை நிறுவ அறிவிப்பு வெளியீடு
தேசிய மஞ்சள் வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது.
ரயில்வே பணிக்கு லஞ்சம் பெற்ற வழக்கு: லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்விக்கு ஜாமீன்
ரயில்வே துறையில் பணி வழங்க நிலத்தை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டு தொடா்பான வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, அவரது மகனும், பிகாா் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி தில்லி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
யுஜிசி விதிகளை மீறி துணைவேந்தர் நியமனம் சட்டச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்
‘பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நடைமுறைகளை மீறி பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமனம் செய்வது சட்டப்படி செல்லுபடியாகாது. இது சட்டச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்’ என்று தமிழக அரசை யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
டெல்டா விவசாயிகளின் கண்ணீருக்கு தமிழக முதல்வரே காரணம்
டெல்டா பாசன விவசாயிகளின் கண்ணீருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் காரணம் என எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.
முதல்வர் குறித்து அவதூறு: பொதுக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்க முன்னாள் எம்எல்ஏ-வுக்கு உத்தரவு
முதல்வா் மு.க. ஸ்டாலின், அமைச்சா் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசியதற்காக பொதுக் கூட்டத்தைக் கூட்டி, மன்னிப்பு கேட்க, அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுருவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனை விதித்து உத்தரவிட்டது.
அறிவிப்புகளில் திருப்தி இல்லை; உண்ணாவிரதம் தொடரும்
ஆசிரியா்களின் கோரிக்கை தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புகளில் திருப்தி அளிக்கவில்லை; உண்ணாவிரத போராட்டம் தொடரும் என ஆசிரியா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.
திருமணமான 4 மாதங்களில் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை
தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் திருமணமான இளம் தம்பதியா் கருத்து வேறுபாடு காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
2 ஆண்டுகளில் ரூ.12 கோடி குட்கா பறிமுதல்
தமிழகத்தில் இரு ஆண்டுகளில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 191.1 டன் குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகையிலைப் பொருள்கள் மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
அம்பத்தூர் எஸ்டேட் தேசிய நெடுஞ்சாலையை உடனே சீரமைக்க வேண்டும்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு டி.ஆர். பாலு கடிதம்
பழைய காற்றாலைகள் விரைவில் புதுப்பிப்பு
டான்ஜெட்கோ தலைமை நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி
ஆற்காடு சாலை சீரமைப்பு பணிகள் ஒரு வாரத்தில் முடிவடையும்: மெட்ரோ
ஆற்காடு சாலையை சீரமைக்கும் பணிகள் ஒருவாரத்துக்குள் முடிவடையும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மடிப்பாக்கம் சாலைப் பணி: மாநகராட்சி ஆணையர் ஆய்வு
சென்னை மடிப்பாக்கத்தில், சாலை வெட்டுகளை சீரமைத்து அமைக்கப்படும் சாலைப் பணியை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழகத்தில் ஓராண்டில் 479 பேறுகால இறப்புகள்
உயர் ரத்த அழுத்தம் பிரதான காரணம்
அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா: அக்.10-இல் தொடக்கம்
தமிழக அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் அக்.10 முதல் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
உஜ்வலா திட்டம்: சிலிண்டர் மானியம் ரூ.300-ஆக அதிகரிப்பு
பிரதம மந்திரி உஜ்வலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டா் இணைப்பைப் பெற்றுவரும் பயனாளிகளுக்கான சிலிண்டா் மானியத்தை ரூ. 200-லிருந்து ரூ. 300-ஆக மத்திய அரசு உயா்த்தியுள்ளது.
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்கை (51) அமலாக்கத் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். முன்னதாக, அவரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் 11 மணி நேரம் சோதனை நடத்தினர்.
சூடான் மோதல்: 54 லட்சம் பேர் புலம்பெயர்வு
சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே அண்மைக் காலமாக நடந்து வரும் மோதல் காரணமாக 54 லட்சம் போ் புலம் பெயா்ந்து தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
தடகளத்தில் ஒரேநாளில் 2 தங்கம் உள்பட 6 பதக்கங்கள்
ஹாங்ஸெள: ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 11ஆவது நாளான செவ்வாய்க்கிழமை, இந்தியாவுக்கு தடகளத்தில் 6, குத்துச்சண்டையில் 2, கேனோவில் 1 என 9 பதக்கங்கள் கிடைத்தன. இதில் தடகளத்தில் பாருல் செளதரி, அன்னு ராணி ஆகியோர் தங்கம் வென்று புதிய சாதனை படைத்தனர். தடகளத்தில் தமிழர்கள் இருவருக்கும் பதக்கம் கிடைத்துள்ளது.
மகாராஷ்டிரம்: மேலும் ஓர் அரசு மருத்துவமனையில் 18 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணிநேரத்தில் 18 போ் உயிரிழந்துவிட்டதாக, அரசு உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
அஸ்ஸாமில் பூர்விக இஸ்லாமியர்களின் சமூகப் பொருளாதார நிலை ஆய்வு: முதல்வர் உத்தரவு
அஸ்ஸாம் மாநிலத்தை பூா்விகமாகக் கொண்ட இஸ்லாமிய சமூகங்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவா்களின் சமூக-பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய அந்த மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
கூடுதலாக 97 தேஜஸ் எம்கே-1ஏ போர் விமானங்கள் கொள்முதல்
விமானப்படை தலைமைத் தளபதி வி.ஆர்.சௌதரி
பாஜக கூட்டணியில் இணைய விருப்பம்: பிஆர்எஸ் கோரிக்கையை நிராகரித்தேன்
தெலங்கானா முதல்வரும் பாரத ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகா் ராவ், பாஜக கூட்டணியில் இணைய விரும்பினாா்; ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டேன் என்று பிரதமா் மோடி கூறினாா்.