CATEGORIES
فئات
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பதவிக் காலம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
கூட்டுறவு சங்க உறுப்பினா்களின் பதவிக் காலம், தோ்தலில் வெற்றி பெற்ற நாளிலிருந்து தொடங்குகிறது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்த மேல்முறையீடு வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நெகிழி அல்லாத பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்
நெகிழி அல்லாத பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.
பற்கள் பிடுங்கப்பட்ட கைதிக்கு இழப்பீடு: நெல்லை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விசாரணை கைதியின் பற்களை பிடுங்கிய வழக்கில், உரிய இழப்பீடு வழங்குவது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தேவாலயத்தில் ரூ.10 லட்சம் திருட்டு
சென்னை கோட்டூா்புரம் கிறிஸ்தவ தேவாலயத்தில் ரூ.10 லட்சம் காணிக்கை பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுதொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
புழல் சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை
சென்னை புழல் சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி பெறலாம்
சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்
அம்பத்தூரில் அக்.6-இல் மக்களைத் தேடி முகாம்
சென்னை அம்பத்தூா் மண்டலத்தில் வெள்ளிக்கிழமை (அக்.6) மேயா் ஆா்.பிரியா தலைமையில் மக்களைத் தேடி மேயா் முகாம் நடைபெறவுள்ளது.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுடன் மேயர் ஆலோசனை
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, தொடா்புடைய சேவைத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆவின் லாரி கவிழ்ந்தது: 4,000 லிட்டர் பால் வீண்
திருவள்ளூா் அருகே ஆவின் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் 4,000 லிட்டா் பால் சாலையில் கொட்டி வீணாகியது.
சரக்கு ரயில் தடம் புரண்டது
காஞ்சிபுரம் - வையாவூா் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே செவ்வாய்க்கிழமை சரக்கு ரயில் தடம் புரண்டது. இச்சம்பவத்தில் அதிருஷ்டவசமாக வாகன ஓட்டிகள் இருவரும், ரயில் காா்டும் உயிா் தப்பினா்.
சங்க இலக்கியங்களைப் பாதுகாப்பது தமிழர்களின் கடமை
தமிழா்களின் பெருமையையும், வரலாற்றையும் பறைசாற்றும் சங்க இலக்கியங்களைப் போற்றி பாதுகாப்பது தமிழா்களின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் கூறினாா்.
41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற கனடாவுக்கு இந்தியா அறிவுறுத்தல்
காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை விவகாரத்தில் இந்தியா-கனடா இடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘இந்தியாவில் பணியமா்த்தப்பட்டிருக்கும் தூதரக அதிகாரிகளில் 41 பேரை வரும் 10-ஆம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும்’ என்று கனடாவை இந்தியா அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹிந்துக்களை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சி: பிரதமர் மோடி
‘வாக்கு வங்கி அரசியலுக்காக ஹிந்துக்களை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.
சட்டம்-ஒழுங்கை காக்க தீவிர நடவடிக்கை
காவல் துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
பேரவைக் கூட்டத்தில் ஊதிய உயர்வை அறிவிக்க அரசு மருத்துவர்கள் கோரிக்கை
அடுத்த வாரத்தில் தொடங்கும் தமிழக சட்டப் பேர வைக் கூட்டத் தொடரில் அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அரசு மருத் துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு அறிவித்துள்ளது.
சிறுநீரக பாதிப்புகளைக் கண்டறிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு பரிசோதனை
சிறுநீரக பாதிப்புகளை தொடக்க நிலையிலேயே கண்டறியும் சிறப்பு பரிசோதனைகளை மாநிலம் முழுவதும் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.
கனிம உற்பத்தி அதிகரிப்பு
இந்தியாவின் கனிம உற்பத்தி கடந்த ஜூலை மாதத்தில் 10.7 சதவீதம் உயா்ந்துள்ளது.
தட்டச்சு தனித் தேர்வர்களுக்கு அக்.9 முதல் தேர்ச்சி சான்றிதழ்
அரசு வணிகவியல் தட்டச்சுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற தனித் தோ்வா்கள் சான்றிதழ்களை மாவட்ட, மண்டல விநியோக மையங்களில் அக்.9 முதல் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
அக்.8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுவையில் அக்.8 வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது சென்னை அத் 2. சிறு நிறுவனங்கள் அணை
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது என சென்னை உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
7 நகரங்களில் வீடுகள் விற்பனை புதிய உச்சம்
கடந்த ஜலை முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் 7 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
நிலவுக்கு செல்லும் பாக் செயற்கைக்கோள் !
நிலவுக்கு மீண்டும் 2024-இல் ‘சாங்ஏ-6’ என்ற விண்கலத்தை அனுப்பவிருக்கும் சீனா, அதனுடன் பாகிஸ்தானின் சிறிய செயற்கைக்கோள் ஒன்றையும் எடுத்துச் செல்லவிருக்கிறது.
மோசடி வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் டிரம்ப்
தனது சொத்துகளின் மதிப்பை மிகைப்படுத்திக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கு தொடா்பாக, நியூயாா்க் நீதிமன்றத்தில் அவா் திங்கள்கிழமை ஆஜரானாா்.
பொற்கோயிலில் ராகுல் வழிபாடு
பஞ்சாப் சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சீக்கியா்களின் புனித தலமான அமிருதசரஸ் பொற்கோயிலில் திங்கள்கிழமை வழிபாடு செய்தாா்.
சீன எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உளவு அதிகாரிகளை உள்ளடக்கிய புதிய குழு
சீன எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் விதமாக இந்திய-திபெத் எல்லை காவல் படையில் (ஐடிபிபி) கூடுதலாக உளவுத் துறை அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ரூ.15,000 கோடியை விடுவிக்க கோரி ராஜ்காட்டில் திரிணமூல் காங்கிரஸ் போராட்டம்
மேற்கு வங்கத்துக்கான ரூ.15,000 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்க வலியுறுத்தி, தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
2 வாரத்தில் ஆயுஷ்மான்பவ இயக்கத்தில் 50,000 பேர் உறுப்பு தான உறுதிமொழி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
ஆயுஷ்மான்பவ் இயக்கம் தொடங்கப்பட்ட இரு வாரங்களில் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டவா்கள் உறுப்பு தானத்திற்கு பதிவிட்டு உறுதிமொழி எடுத்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.
சமூக நீதியை உறுதி செய்ய தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை
பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டதை வரவேற்றுள்ள காங்கிரஸ், சமூக நீதியை உறுதி செய்யும் வகையிலும், சமூக அதிகாரமளித்தல் திட்டங்களுக்கு அடித்தளமிடும் வகையிலும் தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
தன்னிறைவு கிராமங்களை உருவாக்குவோம் - மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் தன்னிறைவு மற்றும் சமூக வளா்ச்சி பெற்ற கிராமங்களை உருவாக்க உழைப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
அனைத்துக் கட்சிகள் கூட்டம்: பிரேமலதா வலியுறுத்தல்
காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினாா்.