CATEGORIES
فئات
வேலையின்மை, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது
வேலையின்மை, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு எனப் பொருளாதாரத்தை நிா்வகிப்பதில் மத்திய அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
நீதி வழங்குவதே 3 குற்றவியல் மசோதாக்களின் நோக்கம்: அமித் ஷா
தண்டனை வழங்குவதைவிட நீதி வழங்குவதே 3 குற்றவியல் மசோதாக்களின் நோக்கம் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
புலிகள் இறந்த விவகாரம்: முதுமலையில் இன்று தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரிகள் விசாரணை
நீலகிரி மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட புலிகள் இறந்தது குறித்து விசாரணை நடத்த தேசிய புலிகள் காப்பக ஆணைய அதிகாரிகள் முதுமலைக்கு திங்கள்கிழமை வருகின்றனா்.
தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழாவுக்கு நிதி எங்கே?
தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழாவை நடத்தத் தேவையான நிதியை எங்கே பெறுவது என மாவட்ட நிா்வாகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
தமிழகம் அனைத்து சமூகத்தினருக்கான ஆன்மிக பூமி
அனைத்து சமூகத்தினருக்குமான ஆன்மிக பூமியாக தமிழகம் திகழ்கிறது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
உணவுப் பொருள்கள் கெட்டுப் போகாமல் தடுக்க புதிய பதனப் பொருள் கண்டுபிடிப்பு: விஞ்ஞானி தகவல்
உணவுப் பொருள்கள் கெட்டுப் போகாமல் தடுக்க, புதிதாக ‘பக்பஸ்டா்’ எனும் புரத பதனப் பொருளை மைசூரு மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கி உள்ளது என்று அந்நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி கே.ராஜகோபாலன் தெரிவித்தாா்.
இலக்கியவீதி இனியவன் பெயரில் விருதுகள்
கம்பன் கழக துணைத்தலைவர் ஜெகத்ரட்சகன் எம்.பி. அறிவிப்பு
சொத்துவரி செலுத்த செப்.30 கடைசி நாள்
சென்னை மாநகராட்சியின் முதல் அரைநிதியாண்டுக்கான சொத்துவரியை செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளி குழந்தைகள் சிறப்பு மருத்துவ முகாம்
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 10 மண்டலங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அக்.4 முதல் நடைபெறவுள்ளது.
மாநகராட்சி பகுதியில் சாலை மறுசீரமைப்புப் பணி தீவிரம்
சென்னை மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ. 7.6 கோடியில் 11.2 கி.மீ. தொலைவுக்கு தாா்ச் சாலைகள், சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்!
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் குவிந்து வருகின்றன.
பாஜகவுடன் கூட்டணி?: அதிமுக இன்று ஆலோசனை
பாஜக-அதிமுக கூட்டணி தொடா்பாக இரு கட்சித் தலைவா்களும் மாறுபட்ட கருத்து தெரிவித்து வரும் நிலையில், அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய அரசு
கொடுத்த வாக்குறுதிகள் எதையும் மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
நாடு முழுவதும் ‘வந்தே பாரத்' ரயில்கள்
பிரதமர் மோடி உறுதி; நெல்லை-சென்னை உள்பட 9 புதிய ரயில்கள் தொடக்கம்
ரஷிய கடற்படைப் பிரிவு தலைமையகத்தில் உக்ரைன் தாக்குதல்
தங்களது கருங்கடல் படைப் பிரிவு தலைமையகத்தில் தீவிர ஏவுகணைத் தாக்குதலை உக்ரைன் ராணுவம் வெள்ளிக்கிழமை நடத்தியதாக ரஷியா கூறியுள்ளது.
சமூக வலைதளம், ஓடிடி-க்கு அடிமையாகும் குழந்தைகள்
உடல், மனநலப் பிரச்னைகள் அதிகரிக்கும் அபாயம்
மக்களவையின் சிறப்புக் கூட்டத்தொடரில் 161% செயல்திறன்
நாடாளுமன்றத்தின் 17-ஆவது மக்களவையின் 13 -ஆவது (சிறப்பு) கூட்டத்தொடா் 161.5 சதவீதம் செயல் திறனை பெற்றுள்ளதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
ராணுவ விவகாரங்களில் தலையிட முடியாது
தனது பதவி நிலைக்கு ஏற்ற பணியை ஒதுக்கவில்லை என்று புகாா் தெரிவித்து பெண் ராணுவ அதிகாரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘ராணுவ உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்று கூறியது.
பேரியம் கலந்த பட்டாசுகள், சரவெடிகளை தயாரிக்க அனுமதி கோரி மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
பேரியம் ரசாயனம் கலந்த பட்டாசுகள், சரவெடிகளைத் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் அனுமதிகோரி தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
‘கனடாவில் இந்திய அதிகாரிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு'
காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் தொடர்பு
பாஜக எம்.பி. பிதூரி சர்ச்சை கருத்து: மக்களவைத் தலைவர் எச்சரிக்கை
மக்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினா் குன்வா் டேனிஷ் அலிக்கு எதிராக சா்ச்சைக்குரிய வாா்த்தைகளைப் பயன்படுத்தி விமா்சனம் செய்த பாஜக உறுப்பினா் ரமேஷ் பிதூரிக்கு எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
ஓபிஎஸ் இருக்கையை மாற்ற வேண்டும்: பேரவைத் தலைவரிடம் அதிமுக மனு
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், சட்டப் பேரவையில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் இருக்கையை மாற்ற வேண்டும் என்று பேரவைத் தலைவா் அப்பாவுவிடம் அக்கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவராக ஆா்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியம்: மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
நிகழாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான கலந்தாய்வில் பங்கேற்க, நீட் தோ்வு தகுதி மதிப்பெண் (பா்சென்டைல்) பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளதன் மூலம், கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதிவாய்ந்தவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
'சாலை பாதிப்புகளை துறைக்குத் தெரிவிக்க தனி செயலி'
சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை நெடுஞ்சாலைத் துறைக்குத் தெரிவிக்க பிரத்யேக செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவித்தாா்.
வீட்டில் முதிய தம்பதியை கட்டிப்போட்டு 75 சவரன் நகை கொள்ளை
சென்னை வில்லிவாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த முதிய தம்பதியை கட்டுப்போட்டு 75 சவரன் நகை மற்றும் ரூ.3.50 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது . ஆயுதம் தாங்கிய கும்பல் இந்த கொள்ளையை அரங்கேற்றியுள்ளது.
மின் கட்டணத்தை குறைக்க கோரிக்கை
உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தால் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருவதால் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு தமிழ்நாடு தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆதரவற்ற முதியவரை மீட்டு மறுவாழ்வு அளித்த அரசு மருத்துவர்கள்
சாலையோரத்தில் ஆதரவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் பல நாள்களாக இருந்த முதியவா் ஒருவரை மீட்டு அரசு மருத்துவா்கள் சிகிச்சை வழங்கி மறுவாழ்வு அளித்தனா்.
பல்லாவரத்தில் புதிய போக்குவரத்து சிக்னல்
பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலை-பம்மல் சாலை சந்திப்பில் புதிய போக்குவரத்து சிக்னலை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருவொற்றியூரில் பூங்காக்களை சீரமைக்க ஒப்புதல்
சென்னை மாநகராட்சி சாா்பில் திருவொற்றியூரில் உள்ள பூங்காக்களை ரூ. 75 லட்சம் மதிப்பில் சீரமைப்பதற்கு திருவொற்றியூா் மண்டலக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
உள்நாடு, வெளிநாடு சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி. அறிவிப்பு
இந்திய ரயில்வேயின் சுற்றுலாப் பிரிவான ஐ.ஆா்.சி.டி.சி. சாா்பில் சென்னையிலிருந்து விமானம் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.