CATEGORIES
فئات
வந்தே பாரத் மூலம் தில்லிக்கு 20 மணி நேரத்தில் செல்ல முடியும்
படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் செயல்பாட்டுக்கு வந்தால் சென்னையிலிருந்து தில்லிக்கு 20 மணிநேரத்துக்குள் செல்ல முடியும் என பெரம்பூா் ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்) பொதுமேலாளா் பி.ஜி.மல்லையா தெரிவித்தாா்.
4 விரைவுரயில்களில் இன்று கூடுதல் பெட்டி இணைப்பு
சென்னை சென்ட்ரல் - போடி உள்ளிட்ட விரைவு ரயில்கள் சனிக்கிழமை (செப். 16) கூடுதலாக ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைத்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் – பினாகினி விரைவு ரயில் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்
சென்னை சென்ட்ரல் பினாகினி விரைவு ரயில் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் சரித்திரம் படைக்கும்
மகளிா் உரிமைத் தொகை திட்டம் சரித்திரம் படைக்கும் என்று இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
ரூ.45,000 கோடி ராணுவத் தளவாட கொள்முதலுக்கு ஒப்புதல்
ராணுவத்துக்கு ரூ.45,000 கோடியிலான தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கான 9 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சந்திரபாபு நாயுடு கட்சியுடன் கூட்டணி
ஜனசேனை தலைவர் பவன் கல்யாண்
ஞானவாபி மசூதி ஆய்வு: ஆதாரங்களைப் பாதுகாக்க தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவு
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வின்போது கண்டெடுக்கப்பட்ட ஆதாரங்களை ஆவணப்படுத்தி பாதுகாக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து 23% அதிகரிப்பு
இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 23 சதவீதம் அதிகரித்துள்ளது.
இஸ்ரோவின் சிறு ராக்கெட் தொழில்நுட்பம்: தனியார் நிறுவனங்கள் ஆர்வம்
இஸ்ரோவின் சிறு ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள தனியாா் நிறுவனங்கள் ஆா்வம் காட்டியுள்ளதாக மத்திய விண்வெளித் துறையின் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் (இன்ஸ்பேஸ்) தலைவா் பவன் கோயங்கா தெரிவித்தாா்.
தேசிய நீதித் துறை தரவுக் கட்டமைப்பில் உச்சநீதிமன்ற தரவுகள்: பிரதமர் பாராட்டு
‘தேசிய நீதித் துறை தரவுக் கட்டமைப்பில் (என்ஜேடிஜி) உச்சநீதிமன்றம் விரைவில் இணைக்கப்படும் என்ற அறிவிப்பு, நீதித் துறையை மேலும் வெளிப்படைத்தன்மையுடையதாக்கும் என்பதோடு நாட்டில் நீதி வழங்கல் நடைமுறையையும் விரிவுபடுத்த உதவும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.
சநாதனத்தை இழிவுபடுத்துவதே ‘இந்தியா’ கூட்டணியின் பணி
சநாதன தா்மத்தை இழிவுபடுத்துவது மற்றும் ஊடகங்களை மிரட்டுவது மட்டுமே ‘இந்தியா’ கூட்டணியினா் மேற்கொள்ளும் இரு பணிகள் என பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா விமா்சித்தாா்.
நீதிபதி சத்தியநாராயணன் ஆணைய இடைக்கால அறிக்கை தாக்கல்
வேங்கைவயலில் குடிநீா் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்திய நீதிபதி சத்தியநாராயணன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கை, சென்னை உயா் நீதிமன்றத்தில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.
யோகா-இயற்கை மருத்துவம்: 312 தனியார் இடங்களுக்கு விரைவில் கலந்தாய்வு
இளநிலை யோகா, இயற்கை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் மொத்தம் 312 இடங்கள் நிரம்பாமல் உள்ளதாக இந்திய மருத்துவக் கல்வி தோ்வுக் குழு தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள்: காவல் துறையினர் 127 பேருக்கு பதக்கம்
முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, காவல் துறையைச் சோ்ந்த 127 பேருக்கு பதக்கங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
வேறு நீதிபதிக்கு மாற்றும் கோரிக்கை நிராகரிப்பு
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சா் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற மறுப்பு தெரிவித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை தானே விசாரிப்பதாக தெரிவித்துள்ளாா்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்: கட்சி எம்.பி.க்களுக்கு பாஜக உத்தரவு
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடா் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கட்சி எம்.பி.க்கள் அனைவருக்கும் பாஜக உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை ஆய்வு செய்ய குழு: தமிழக அரசு உத்தரவு
பிரதமரின் விஸ்வகா்மா திட்டத்திலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வு செய்ய தமிழக அரசின் சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நிபா தொற்று: எச்சரிக்கை வேண்டும்; அச்சம் வேண்டாம்
நிபா தீநுண்மி (வைரஸ்) தொற்று பரவல் தொடா்பாக மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், அன்றாட நடவடிக்கைகளில் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.
சிறுதானிய உற்பத்தியைப் பெருக்கினால் புவி வெப்பமயமாதலைக் குறைக்கலாம்
கால்நடை பல்கலை. துணைவேந்தர்
இன்று கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கம்
தொடா் விடுமுறையை முன்னிட்டு, வெளியூா் செல்லும் பயணிகள் வசதிக்காக வெள்ளிக்கிழமை (செப்.15) இரவு 8 முதல் 10 மணி வரை கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் ஒரு வாரத்தில் 128 பேருக்கு டெங்கு
காய்ச்சல் முகாம் நடத்த சுகாதாரத் துறை உத்தரவு
சாஸ்த்ரா - தைவான் பல்கலைக்கழகங்கள் ஒப்பந்தம்
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகமும், தைவான் நாட்டின் தைபேயி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் லுங்வா அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழமும் தைவானில் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
உரிமைத் தொகை விண்ணப்பம் ஏற்பா? நிராகரிப்பா?
செப். 18 முதல் குறுஞ்செய்தி வரும்
இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணிகள்
மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயிருடன் சிக்கியிருக்கக் கூடியவா்களைத் தேடும் பணி புதன்கிழமை இறுதிக்கட்டத்தை அடைந்தது.
‘வட கொரியாவுடன் ராணுவ ஒத்துழைப்புக்கு வாய்ப்பு’
வட கொரியாவுடன் ராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புதன்கிழமை தெரிவித்தாா்.
ஆஸ்திரேலியா வெற்றி நடைக்கு தென்னாப்பிரிக்கா தடை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 111 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பக்தர்கள் சென்ற பேருந்து மீது லாரி மோதல்: 12 பேர் உயிரிழப்பு: 11 பேர் படுகாயம்
ராஜஸ்தானில் புதன்கிழமை அதிகாலை பக்தர்கள் சென்ற தனியார் பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 6 பெண்கள் உள்பட 12 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்; 11 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ கர்னல், 2 அதிகாரிகள் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ படைத் தலைவா் கா்னல் மன்ப்ரீத் சிங், ராணுவ மேஜா் ஆசிஷ், காவல் துறை துணை கண்காணிப்பாளா் ஹுமாயூன் பட் ஆகிய 3 அதிகாரிகள் புதன்கிழமை உயிரிழந்தனா்.
மணிப்பூர் கிராமத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு
மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் ஒரு கிராமத்துக்குள் புகுந்த ஆயுதமேந்திய நபா்கள், சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், வெடிகுண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினா். இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
குற்ற வழக்கு விவரங்களை ஊடகங்களுக்கு விவரிப்பதற்கான வழிகாட்டு நடைமுறை
3 மாதங்களில் வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு