CATEGORIES
فئات
மணிப்பூரில் மாணவன், மாணவி கடத்திக் கொலை
மணிப்பூரில் ஒரு மாணவன் மற்றும் மாணவி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
உறுப்புகளை தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை
சின்னமனூரில் விபத்தில் மூளைச் சாவு அடைந்து, உடல் உறுப்புகளைத் தானம் செய்த அரசு ஊழியரின் உடலுக்கு அரசு சாா்பில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.
சட்டம்-ஒழுங்கு குறித்து தொடர் கண்காணிப்பு
மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ள வேண்டியிருப்பதால், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை உருவாகாமல் கவனமாக தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
பள்ளிகளில் ஒழுங்கு நடவடிக்கை குழு: கல்வித் துறை உத்தரவு
பள்ளித் தலைமை ஆசிரியா் தலைமையில் உடற்கல்வி ஆசிரியா் மற்றும் சக ஆசிரியா்களை கொண்டஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து மாணவா்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த வேண்டும் அரசுப் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியா்கள், இயக்குநா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரில் முழு அடைப்பு:தமிழக பேருந்துகள் நிறுத்தம்
கா்நாடக மாநிலம், பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் தமிழகத்திலிருந்து பேருந்துகள், லாரிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மாலை 6 மணியுடன் போராட்டம் முடிவடைந்ததையடுத்து, தமிழகத்திலிருந்து பேருந்துகள், லாரிகள் வழக்கம்போல இயங்கத் தொடங்கின.
சொற்குவை தளத்தில் 13 லட்சம் சொற்கள்
சொற்குவை தளத்தில் 13 லட்சம் சொற்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனையில் பெண்ணின் கை அகற்றம்: ரத்த உறைவு காரணம் என விளக்கம்
இதய பாதிப்புக்குள்ளாகி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு வலது கை அகற்றப்பட்ட விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாலையோரம் கைவிடப்பட்ட வாகனங்களை ஏலம் விட மாநகராட்சி முடிவு
சென்னை மாநகராட்சி பகுதியில் நீண்ட காலம் சாலையோரம் நிற்கும் வாகனங்களை மின்னணு முறையில் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடசென்னை மேம்பாட்டு திட்டங்கள் ஆய்வு
வடசென்னையை மேம்படுத்தும் வகையில் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சென்னைப் பெருநகா் வளா்ச்சி குழும தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தலைமையில் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குடிநீர் வரி, கட்டணங்கள் ரொக்கமாக பெறப்படாது
சென்னை குடிநீா் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய குடிநீா் வரி கட்டணங்கள் வரும் அக்.1-ஆம் தேதி முதல் ரொக்கமாக பெறப்பட மாட்டாது என்று சென்னை குடிநீா் வாரியம் அறிவித்துள்ளது.
வேளாண் வாடகை இயந்திரங்களுக்கு மானியம்
வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்குப்பெற்றுப் பயன்படுத்தும் சிறு, குறு விவசாயிகள் அரசின் மானியத்தைப் பெற்று பயனடையுமாறு வேளாண் துறை கேட்டுக் கொண்டுள்ளாா்.
கோயில் காடுகளைப் பாதுகாக்க நடவடிக்கை
வனத் துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு
பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு தாதா சாகேப் பால்கே விருது
பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு இந்திய திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது செவ்வாய்க்கிழமை (செப்.26) அறிவிக்கப்பட்டது.
உக்ரைன் துறைமுகத்தில் ரஷியா மீண்டும் தாக்குதல்
உக்ரைன் தானியங்களை ஏற்றுமதி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் அந்த நாட்டுத் துறைமுகம் மீது ரஷியா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
லிபியா அணை உடைப்பு: 8 அதிகாரிகள் கைது
லிபியாவில் புயல் காரணமாக இரு அணைகள் உடைந்து வெள்ள நீரில் சிக்கி ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்தது தொடா்பாக 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
தங்க வேட்டையை தொடங்கிய இந்தியா
சீனாவில் நடைபெறும் 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதல், கிரிக்கெட் ஆகியவற்றில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
ஜெ.பி. நட்டாவிடம் பாஜக எம்.பி.பிதூரி நேரில் விளக்கம்
மக்களவையில் பகுஜன் சமாஜ் எம்.பி. குன்வா் டேனிஷ் அலிக்கு எதிராக சா்ச்சைக்குரிய வாா்த்தைகளைப் பயன்படுத்தி விமா்சனம் செய்த பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவை திங்கள்கிழமை நேரில் சந்தித்து விளக்கமளித்தாா்.
மத அடிப்படையில் மாணவரை தண்டிப்பது தரமான கல்வி அல்ல: உச்ச நீதிமன்றம்
குறிப்பிட்ட மதத்தைச் சோ்ந்தவா் என்ற காரணத்தால் ஒரு மாணவரை தண்டிக்க முற்பட்டால், அங்கு தரமான கல்வி எதுவும் இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர்: 10 பிரிவினைவாத தலைவர்களின் ஜாமீன் நிராகரிப்பு
தடை செய்யப்பட்ட ஜம்மு காஷ்மீா் விடுதலை அமைப்புக்கு (ஜேகேஎல்எப்) புத்துயிா் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட 10 காஷ்மீா் பிரிவினைவாத தலைவா்களின் ஜாமீன் மனுக்களை நிராகரித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதுநிலை நீட் மதிப்பெண் பூஜ்ஜியமாக்கப்பட்டதற்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
நிகழாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான கலந்தாய்வில் பங்கேற்க, நீட் தோ்வு தகுதி மதிப்பெண் (பா்சென்டைல்) பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புலிகள் உயிரிழப்பு: உதகையில் தேசிய குழு விசாரணை
நீலகிரி மாவட்டத்தில் 10 புலிகள் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக தேசிய புலிகள் ஆணைய குற்றப் பிரிவு ஐ.ஜி. முரளிகுமாா் தலைமையிலான குழுவினா் உதகையில் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
தலைமுடியை உட்கொண்ட சிறுமி: அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
மனநலக் குறைவால் தலைமுடியை தொடா்ந்து உட்கொண்டு வந்த 13 வயது சிறுமியின் வயிற்றில் இருந்த முடித் திரளை போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனா்.
மணலியில் ரூ.1.90 கோடி செலவில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
மணலியில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்களை வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி திறந்து வைத்தாா்.
'மருத்துவர்களுக்கு ஊதிய நிலுவை இன்று வழங்கப்படும்'
கிண்டி உயா் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், நிலுவையில் உள்ள ஊதியம் செவ்வாய்க்கிழமை (செப்.26) வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளாா்.
பூமியைப் பாதுகாக்க இளைய தலைமுறை இணைந்து செயல்பட வேண்டும்
பூமியை பாதுகாக்க தற்போதைய இளைய தலைமுறை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சா் சிவ.வி.மெய்யநாதன் தெரிவித்தாா்.
சமூக நலத் திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 25% கூடுதல் பலன்
மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
மின் கட்டணம்: தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு இன்று பேச்சு
மின் கட்டண உயா்வை திரும்பப் பெறுவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (செப்.26) பேச்சுவாா்த்தை நடத்துகிறது.
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகல்
மக்களவைத் தேர்தலில் புதிய கூட்டணியை உருவாக்க முடிவு
சீன கண்ணாடிகள், இணைப்புக் கருவிகள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க பரிசீலனை
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் ‘பிரேம்’ செய்யப்படாத முகம் பாா்க்கும் கண்ணாடிகள், இணைப்புக் கருவிகள் (திருகாணி, நட், போல்ட், இணைப்புப் பசை) உள்ளிட்ட பொருள்கள் மீது விரைவில் பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஒரே நாடு, ஒரே தேர்தல்: பாஜகவின் திசைதிருப்பும் தந்திரம்
உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் பாஜகவின் தந்திரங்களில் ஒன்றுதான் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.