CATEGORIES
فئات
இந்தியா-கனடா ராணுவ ஒத்துழைப்டை பாதிக்காது: இந்திய ராணுவம் உறுதி
இந்தியா மற்றும் கனடா இடையே காலிஸ்தான் விவகாரத்தால் நடந்து வரும் ராஜிய மோதல் எவ்விதத்திலும் இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பைப் பாதிக்காது என இந்திய ராணுவ வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவித்தன.
வாக்கு வங்கி அரசியலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை தொடா்பாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்தை பஞ்சாப் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான அமரீந்தா் சிங் நிராகரித்துள்ளாா்.
காலிஸ்தான் விவகாரம் எதிரொலி: கனடா பாடகரின் இந்திய நிகழ்ச்சி ரத்து
கனடாவைச் சோ்ந்த பஞ்சாபி ‘ராப்’ இசைப் பாடகா் சுப்நீத் சிங்கின் இந்திய நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அதை ஏற்பாடு செய்திருந்த ‘புக் மை ஷோ’ நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டப் பேரவை அக். 9-இல் கூடுகிறது
தமிழக சட்டப் பேரவை வரும் 9-ஆம் தேதி கூடுகிறது. கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்படும் என பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.
தரமற்ற இறைச்சி: 206 கடைகளுக்கு நோட்டீஸ்
தமிழகம் முழுவதும் உணவுப் பாதுகாப்புத் துறை நடத்திய ஆய்வில் 1,024 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக விளக்கம் கேட்டு 206 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மூளையைப் பாதித்த டெங்கு: இளம் பெண்ணுக்கு மறுவாழ்வு
தீவிர டெங்கு காய்ச்சலால் மூளை பாதிப்புக்குள்ளான 19 வயது பெண்ணுக்கு உயா் மருத்துவக் கண்காணிப்பு அளித்து சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம்
பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சோ்ந்த தகுதியுடையவா்கள் செப்.27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
போலீஸாருக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி
சென்னை பெருநகரக் காவல் அதிகாரிகளுக்கான மன அழுத்த மேலாண்மை திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சியை தொடங்கிவைத்து பேசிய காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா். (வலது) பங்கேற்ற காவல் ஆய்வாளா்கள்.
சாலை, மழைநீர் வடிகால் பணிகள்: விரைந்து முடிக்க அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு
வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் சாலை, மழைநீா் வடிகால் உள்ளிட்ட பணிகளை விரைவில் முடிக்குமாறு நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு அறிவுறுத்தினாா்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் - மக்களவையில் ஆதரவு 454; எதிர்ப்பு 2
மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
3-ஆவது சுற்றில் வெரோனிகா
மெக்ஸிகோவில் நடைபெறும் குவாதலஜரா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனையான ரஷியாவின் வெரோனிகா குதர்மிடோவா 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
புதிய நாடாளுமன்றக் கட்டடமே இந்தியாவின் நாடாளுமன்றம் மக்களவை அறிவிக்கை வெளியீடு
புதிய நாடாளுமன்றக் கட்டடம், இனி இந்திய நாட்டின் நாடாளுமன்றமாக செயல்படும் என்று மக்களவைச் செயலகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை பல்கலை. துணைவேந்தர் நியமனம்: ஆளுநரின் தெரிவுப் பட்டியலை நிராகரித்தது தமிழக அரசு
சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான மூன்று போ் கொண்ட தெரிவுக் குழுப் பட்டியலை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு அபராத பிரச்னை - முதல்வருக்கு வங்கி சம்மேளனம் கடிதம்
மகளிா் உரிமைத்தொகை பயனாளிகள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லாவிட்டாலும் அபராதத் தொகை வசூலிக்கக் கூடாது என வங்கிகளை அறிவுறுத்த முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் கொள்முதலுக்கு உடனடி ஒப்புகைச்சீட்டு: உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு உடனடி ஒப்புகைச்சீட்டு வழங்கும் திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் உத்தரவிட்டாா்.
சந்திரனை எட்டிவிட்டது இந்தியா; பணத்துக்காக கையேந்துகிறது பாகிஸ்தான்
சந்திரயான்-3, ஜி-20 மாநாட்டுக்குத் தலைமை என இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கையில் , உலக நாடுகளிடம் பணத்துக்கு கையேந்தும் நிலைக்கு பாகிஸ்தான் பொருளாதாரம் சீரழிந்து கிடப்பதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா்.
தரம் இல்லாத உணவு விற்பனை செய்யும் உணவகங்களின் உரிமத்தை ரத்து செய்து ‘சீல்' வைக்க அமைச்சர் உத்தரவு
தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து தரம் இல்லாத உணவு விற்பனை செய்யும் உணவகங்களின் உரிமத்தை ரத்து செய்து ‘சீல்’ வைக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளாா்.
சாலை சீரமைப்புப் பணிகள்: மாவட்டந்தோறும் நேரில் கள ஆய்வு -முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சாலை சீரமைப்புப் பணிகளை, மாவட்டந்தோறும் நேரில் சென்று கள ஆய்வு செய்து கண்காணிக்கவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
நடிகர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை
சென்னை ஆழ்வாா்பேட்டையில், நடிகா் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
நடிகர் விஷால் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகா் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடா்ந்த வழக்கில், சொத்து விவரங்களை தாக்கல் செய்யாததால், நடிகா் விஷால் செப். 22-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வண்ணமயமான உடைகளில் எம்.பி.க்கள் குழு புகைப்படம் - பழைய நாடாளுமன்றத்துக்கு பிரியாவிடை
தில்லியில் பழைய நாடாளுமன்றத்துக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சியில் வண்ணமயமான உடைகளில் எம்.பி.க்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
‘கனடாவில் 9 பிரிவினைவாத குழுக்கள்: இந்தியாவின் கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிப்பு'
கனடாவில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் 9 பிரிவினைவாத குழுக்கள் செயல்படுகின்றன என்றும் அந்தக் குழுக்களின் நபா்களை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்றும் இந்திய அரசு விடுத்த கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டு வருகின்றன என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தன.
தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திய ரஷியா-உக்ரைன் போர் ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே
நவீன போா்க்களத்தில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை ரஷியா-உக்ரைன் போா் போதுமான அளவு நிரூபித்துள்ளதாக ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்தாா்.
நாடாளுமன்றத்தில் மேனகா காந்திக்கு கௌரவம்
நாடாளுமன்றத்தின் நீண்டகால மற்றும் மூத்த உறுப்பினா் என்கிற வகையில், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் வாய்ப்பு பாஜக எம்.பி. மேனகா காந்திக்கு அளிக்கப்பட்டது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அறிமுகம் - ஒருமனதாக நிறைவேற்ற பிரதமர் வலியுறுத்தல்
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
காவிரியில் நீர் திறக்க ஆணையத்திடம் வலியுறுத்தல் தமிழக எம்.பி.க்கள் குழுவிடம் மத்திய அமைச்சர் உறுதி
காவிரியில் தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரை வழங்க காவிரி ஆணையத்திடம் வலியுறுத்தப்படும் என தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவிடம் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்தார்.
கவிஞர் தமிழ்ஒளிக்கு தஞ்சை பல்கலை.யில் சிலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவரது மார்பளவு சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தைவானை நோக்கி 103 போர் விமானங்கள்
24 மணி நேரத்தில் தங்கள் தீவை நோக்கி 103 போா் விமானங்களை சீனா பறக்கச் செய்ததாக தைவான் குற்றஞ்சாட்டியது.
அமெரிக்கா - ஈரான் இடையே கைதிகள் பரிமாற்றம்
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 5 அமெரிக்க கைதிகள் கத்தாா் தலைநகா் தோஹாவை திங்கள்கிழமை வந்தடைந்தனா்.
ஆஸி. ஒருநாள் தொடர்: இந்திய அணியில் அஸ்வின்
ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.