CATEGORIES
فئات
இன்று 9 மின்சார ரயில்கள் ரத்து
பராமரிப்புப் பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் புதன்கிழமை (செப். 13) 9 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் திட்டங்களுக்கு மக்களிடம் மிகப் பெரிய செல்வாக்கு
சமூக நீதி அடிப்படையிலான தமிழக அரசின் திட்டங்களுக்கு மக்களிடம் மிகப்பெரிய செல்வாக்கு ஏற்பட்டு வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.
கொளத்தூரில் ரூ.27 கோடியில் 162 புதிய குடியிருப்புகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
பொங்கல் பண்டிகை: ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரயில் பயணச்சீட்டு முன்பதிவு புதன்கிழமை (செப்.13) முதல் தொடங்குகிறது.
சந்திரபாபு நாயுடுவை வீட்டுக் காவலில் வைக்க நீதிமன்றம் மறுப்பு
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்க தேச கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை வீட்டுக் காவலில் வைக்கக் கோரிய மனுவை விஜயவாடா விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
30 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
தமிழக மணல் குவாரிகளில் முறைகேடு புகார்
முடிசூடிய மன்னன் ஜோகோவிச் 24-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை
நியூயாா்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதின் மூலம் 24-ஆவது முறையாக பட்டம் வென்றதோடு, மாா்க்ரெட் கோா்ட்டின் சாதனையையும் சமன் செய்தாா். இதன் மூலம் டென்னிஸ் உலகின் மன்னன் என்பதை நிரூபித்துள்ளாா் ஜோகோவிச்.
புதிய கைப்பேசி வாடிக்கையாளர்கள்: இந்தியாவுக்கு முதலிடம்!
கடந்த ஜூன் காலாண்டில் புதிதாக இணைக்கப்பட்ட மொபைல் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையில் சா்வதேச அளவில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது.
ரஷியாவுக்கு கிம் ஜோங்-உன் பயணம்
தனி ரயில் மூலம் தங்கள் நாட்டு அதிபா் கிம் ஜோங்-உன் ரஷியாவுக்குப் புறப்பட்டு சென்றுள்ளதாக வட கொரியா திங்கள்கிழமை அறிவித்தது.
மொராக்கோ நிலநடுக்கம்: மீட்புப் பணியில் வெளிநாட்டுக் குழுவினர் - 2,500-ஐ நெருங்கிய பலி எண்ணிக்கை
மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்புப் பணிகளில் வெளிநாட்டுக் குழுவினரும் திங்கள்கிழமை இணைந்தனா்.
ஆக்கிரமிப்பு உக்ரைன் தேர்தல்: ரஷிய ஆதரவு கட்சிக்கு வெற்றி
உக்ரைனில் தாங்கள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் நடைபெற்ற பிராந்திய தேர்தலில் ஆளும் ரஷிய ஆதரவுக் கட்சி வெற்றி பெற்றதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
உ.பி.யில் பலத்த மழை: 19 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 24 மணி நேரத்தில் 19 போ் உயிரிழந்ததாக மாநில நிவாரண ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது.
ஆந்திரம்: ராஜமகேந்திரவரம் சிறையில் சந்திரபாபு நாயுடு அடைப்பு
ஆந்திர முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஓங்கோலில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினரை கைது செய்த போலீஸாா்.
இந்தியா – சவூதி நல்லுறவு உலக நலனுக்கு முக்கியம்
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தியா-சவூதி அரேபியா வியூக கூட்டாண்மை கவுன்சிலில் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, ‘இந்தியா-சவூதி அரேபியா இடையிலான வியூக ரீதியிலான உறவு, பிராந்திய மற்றும் உலக நலனுக்கும் ஸ்திரத்தன்மைக்கும் முக்கியமானது’ என்றாா்.
மேக்கேதாட்டு: தேவையின்றி தொல்லை அளிக்கும் தமிழகம்
மைசூரு: மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகம் தேவையில்லாமல் தொல்லைகளைக் கொடுத்து வருவதாக கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
உரிமைத் தொகை: ஒரு கோடி மகளிர் தேர்வு முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கு 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படக் குழுவுக்கு பிரேஸில் அதிபர் லூலா பாராட்டு
‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படத்தின் கதை, நடனம் உள்ளிட்ட காட்சிகள் குறித்து பிரேஸில் அதிபா் லூலா டாசில்வா திரைப்படக் குழுவுக்கு பாராட்டு தெரிவித்தாா்.
ஆஸி.க்கு இரண்டாவது வெற்றி; லபுஸ்சேன், வார்னர் அசத்தல்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
கிரண் ஜார்ஜ் சாம்பியன்
இந்தோனேசிய மாஸ்டா்ஸ் 2023 பாட்மின்டன் சூப்பா் 100 போட்டியில் இந்தியாவின் இளம் வீரா் கிரண் ஜாா்ஜ் சாம்பியன் பட்டம் வென்றாா்.
தூய்மையான சென்னை: விழிப்புணர்வு மிதிவண்டிப் பேரணி
தூய்மையான சென்னையை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மிதிவண்டிப் பேரணியில் சென்னை மேயா் ஆா்.பிரியா பங்கேற்றாா்.
தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு தேவை - மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
தற்கொலைக்கு எதிராக தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியது நமது கடமை என சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன் கூறினாா்.
‘கடவுளின் தேவையை உணர்த்தியவர் காரைக்கால் அம்மையார்’
சமணமும், பௌத்தமும் ஊழ்வினை குறித்த ஆழ்ந்த கருத்துகளை விதைத்துக் கொண்டிருந்த காலத்தில் கடவுளின் தேவையை அனைவருக்கும் உணா்த்தியவா் காரைக்கால் அம்மையாா் என தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தலைவா் பழ.கருப்பையா கூறினாா்.
மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 தலைவர்கள் அஞ்சலி
மகாத்மா காந்தி கொள்கையில் இந்தியா-அமெரிக்கா கூட்டுறவு: அதிபர் பைடன்
ஜி20-இல் ஆப்பிரிக்க ஒன்றியம்: குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பிரதமர் நரேந்திர மோடி
ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டது, ஒருங்கிணைந்த சா்வதேச பேச்சுவாா்த்தைகளை முன்னெடுப்பதில் ‘குறிப்பிடத்தக்க முன்னேற்றம்’ எனப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
பாஜகவின் எந்தச் செயலிலும் ஹிந்து மத உணர்வில்லை ராகுல் தாக்கு
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற எதையும் செய்ய துணியும் பாஜகவின் எந்தச் செயலிலும் ஹிந்து மதத்தின் உணா்வில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
வங்கிகளுக்கு இடையே எண்ம ரூபாய் பயன்பாடு: சோதனை அடிப்படையில் தொடங்க ஆர்பிஐ திட்டம்
வங்கிகளுக்கு இடையேயான பரிவா்த்தனையில் எண்ம ரூபாயின் (டிஜிட்டல் கரன்சி) பயன்பாட்டை சோதனை அடிப்படையில் தொடங்குவதற்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) திட்டமிட்டுள்ளது.
ஐ.நா., பன்னாட்டு அமைப்புகளில் சீர்திருத்தம்
ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
6-ஆவது நாளாக முன்னேற்றம்: சென்செக்ஸ் 333 புள்ளிகள் உயர்வு
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இருப்பினும், உச்சத்தில் லாபப் பதிவு இருந்ததால் தொடா்ந்து மேலே செல்ல முடியாமல் தவித்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 333 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
பாகிஸ்தானுடன் பாதுகாப்பு உறவு வலுப்படுத்தப்படும்: ரஷியா
பாகிஸ்தானுடன் இருதரப்பு பாதுகாப்பு உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என்று ரஷியா தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 2 பேர் பலி; 45 பேர் காயம்
மணிப்பூரின் தெங்னௌபால் மாவட்டத்தில் பல்லேல் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 2 போ் உயிரிழந்தனா். 45-க்கும் அதிகமானோா் காயமடைந்தனா்.