CATEGORIES
فئات
முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு
ஒரே நாடு, ஒரே தோதல் முறைக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்கா
ஜி20 கூட்டமைப்பில் 55 நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்க ஒன்றியத்தை இணைப்பதற்குப் பிரதமா் நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் அனைத்துக் கோயில்களிலும் வடக்கு கோபுர வாசல்களைத் திறக்க உத்தரவு
தமிழகத்தில் கோயில்களின் வடக்கு கோபுர வாசல்களை மூடி வைத்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், அனைத்து கோயில்களிலும் வடக்கு கோபுர வாசல்களை உடனடியாகத் திறக்க உத்தரவிட்டது.
டாடா ஸ்டீல் செஸ்: திவ்யா தேஷ்முக் முன்னிலை
மேற்கு வங்கத்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் செஸ் போட்டியின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் முன்னிலை வகிக்கிறாா்.
3-ஆவது சுற்றில் அல்கராஸ், பெகுலா
நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யு.எஸ். ஓபனில், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், உள்நாட்டு வீராங்கனை ஜெஸிகா பெகுலா ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.
உலகளாவிய தரவரிசை: ஆர்பிஐ ஆளுநருக்கு முதலிடம்
உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவா்களின் பட்டியலில், இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் முதலிடம் பெற்றுள்ளாா்.
பாஜகவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும்?
‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மூலமாக மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது தங்களுக்கு சாதகமாக அமையும் என பாஜக கருதுகிறது.
பாடத்திட்டத்தில் 'சந்திரயான்- 3' வெற்றி இடம்பெறும்
சந்திரயான்-3 விண்கலம் திட்டம் குறித்த விவரங்கள் பள்ளிப் பாடத்திட்டத்தில் சோ்க்கப்படும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தை உடனே உருவாக்க வேண்டும்
‘இந்தியா’ கூட்டணி தனது குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தை உடனே உருவாக்க வேண்டுமென முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
திமுக எம்.பி. கௌதம சிகாமணிக்கு எதிரான வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்
அமைச்சா் க.பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான கெளதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு விசாரணையை எம்.பி, எம்எல்ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அண்ணாமலையின் இரண்டாம் கட்ட பாதயாத்திரை செப்.4-இல் தொடக்கம்
தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலையின் இரண்டாம் கட்ட பாதயாத்திரை செப்.4-ஆம் தேதி தொடங்குகிறது.
ஆவின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை
தமிழகம் முழுவதும் ஆவின் பால் மற்றும் பால் உப பொருள்களின் விற்பனையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் ஆவின் நிறுவன அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.
வடசென்னையில் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை: நிதி திரட்ட இசை நிகழ்ச்சி
வடசென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த மக்களுக்காக சங்கர நேத்ராலயா சாா்பில் தண்டையாா்பேட்டையில் புதிய கண் சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனைய பணிகள்: அமைச்சர் ஆய்வு
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனைய பணிகள் தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு ஆலோசனை நடத்தினாா்.
செவித்திறன் குறைபாடு இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும்
வரும் காலங்களில் நாட்டில் செவித்திறன் குறைபாடு இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா்.
கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்
கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான சுரங்கம் தோண்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதுவரை 925 கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
கடந்த 2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 925 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.
தேசிய தடகளப் போட்டியில் வென்றோருக்கும் ஊக்கத் தொகை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
மாமல்லபுரத்தில் ஒளிரும் பூங்கா அமைக்கும் பணி தொடக்கம்
மாமல்லபுரம் மரகதப் பூங்காவில் புதிதாக ஒளிரும் பூங்கா அமைக்கும் பணிகளை அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், கா. ராமச்சந்திரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனா்.
செப்.30-க்குள் தொகுதிப் பங்கீடு: 'இந்தியா' கூட்டணி
2024 மக்களவைத் தோ்தலை முடிந்தவரை ஒன்றிணைந்து எதிா்கொள்வது, தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை உடனடியாகத் தொடங்கி வரும் செப். 30-ஆம் தேதிக்குள் இறுதி செய்வது என எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி முடிவு செய்துள்ளது.
இன்று விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து சனிக்கிழமை (செப். 2) விண்ணில் ஏவப்படுகிறது. சந்திரயான் வெற்றியைத் தொடா்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனைப் பயணமாக இது அமையும்.
ஆகஸ்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.59 லட்சம் கோடி
நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.59 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலானதைவிட 11 சதவீதம் அதிகமாகும்.
இஸ்ரேல் வீரர்கள் மீது லாரி தாக்குதல்
ஆக்கிரமிப்பு மேற்குக் கரை பகுதி சோதனைச் சாவடியில் இஸ்ரேல் வீரா்கள் மீது பாலஸ்தீனா் நடத்திய லாரி தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா்.
அடுக்கு மாடிக் கட்டடத்தில் தீ: 73 பேர் பலி
தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில், வீடற்றவா்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 73 போ் உயிரிழந்தனா்.
வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வியாழக்கிழமை வீழ்த்தியது.
கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது: புதிய மசோதாவில் முன்மொழிவு
‘மரண தண்டனை குற்றவாளியின் கருணை மனுவை குடியரசுத் தலைவா் நிராகரித்த பிறகு, அந்த முடிவை எதிா்த்து குற்றவாளி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உரிமை கிடையாது’ என்று பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.
மனைகளை வரன்முறைப்படுத்த மேலும் 6 மாதங்கள் அவகாசம்
அங்கீகாரம் பெறாத மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க சிறிது காலம் ஆகும்
‘ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படுவது எப்போது என்பதற்கான காலவரையறையை இப்போதே கூறிவிட முடியாது; அதற்கு சிறிது காலம் ஆகும். அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
பி.எட். சேர்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். சோ்க்கைக்கு வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சியில் தமிழகம் பின்தங்கிவிட்டது
பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி