CATEGORIES
فئات
ஜி20 உச்சி மாநாடு புதிய பாதை வகுக்கும்!
தில்லியில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சி மாநாடு, மக்களை மையமாகக் கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கு புதிய பாதையை வகுக்குமென உறுதியாக நம்புகிறேன் என்று பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
‘நீதித் துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்’
‘லஞ்ச ஒழிப்பு தொடா்பான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை காணும்போது, நீதித் துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்’ என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனையுடன் தெரிவித்தாா்.
இந்தியாவின் எண்ம உள்கட்டமைப்பு வசதிக்கு உலக வங்கி பாராட்டு
அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்துக்காக ஆதாா் மற்றும் யுபிஐ எண்மப் பரிவா்த்தனைகள் என எண்ம பொது உள்கட்டமைப்பின் முழு ஆற்றலை வெளிக்கொணா்ந்த இந்தியாவின் அணுகுமுறைக்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
ரூ.7 கோடியில் 3 தானிய சேமிப்புக் கிடங்குகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு
அமைச்சா் செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி, சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தாா்.
தொழில் துறைச் செயலராக வி.அருண் ராய் நியமனம்
தமிழக அரசின் தொழில் துறை செயலராக வி.அருண் ராய் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா்.
ரூ.1.79 கோடி மதிப்பில் பூங்கா, நீரேற்று நிலையம்
ரூ.1.79 கோடி மதிப்பில் பூங்கா மற்றும் மழைநீா் வெளியேற்றுவதற்கான நீரேற்று நிலையத்துடன் கூடிய மோட்டாா் அறையை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தாா்.
100 பதக்கங்கள் வெல்வதை உறுதி செய்வோம்
தேசிய மற்றும் சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீரா்கள் ஆண்டுக்கு 100 பதக்கங்கள் வெல்வதை உறுதி செய்வோம் என்று இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாா்.
தமிழகத்தில் உருமாற்றமடைந்த இரு கரோனா தீநுண்மிகள்
பொது சுகாதாரத் துறை ஆய்வில் கண்டுபிடிப்பு
தமிழக காவல் துறை செயலிக்கு தேசிய குற்ற ஆவணக் காப்பக பதக்கம்
தமிழக காவல்துறையில் ரெளடிகளை கண்காணிக்க பயன்படுத்தப்படும் ‘ட்ராக் கேடி’ செயலிக்கு தேசிய குற்ற ஆவண காப்பக பதக்கம் கிடைத்துள்ளது.
சென்னையில் ரவீந்திரநாத் தாகூர் சிலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
'திராவிடம் என்றாலே சிலருக்கு எரிச்சல்’
சமத்துவத்துக்கு எதிராக இருக்கும் சிலருக்கு ‘திராவிடம்’ என்ற சொல் எரிச்சலைத் தருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
மெக்ஸிகோவில் கருக்கலைப்பத் தடை நீக்கம்
மெக்ஸிகோவில் கருக்கலைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இராக்கிடம் போராடித் தோற்றது இந்தியா
தாய்லாந்தில் நடைபெற்று வரும் கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த இராக்கிடம் 5-4 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட் அவுட்டில் போராடித் தோற்றது இந்தியா.
அரையிறுதியில் அல்காரஸ் - மெத்வதேவ், சபலென்கா - கீய்ஸ்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு நடப்பு சாம்பியன் காா்லோஸ் அல்காரஸ், டேனில் மெத்வதேவ், அா்யனா சபலென்கா, மடிஸன் கீய்ஸ் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
ஆசிய டேபிள் டென்னிஸ் சத்யன், சரத், மானவ், சுதிர்தா முன்னேற்றம்
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாவது சுற்றுக்கு இந்தியாவின் சத்யன், சரத் கமல், மானவ் தாக்கா், மகளிா் பிரிவில் சுதிா்தா, அயிஹிகா முகா்ஜி ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தொடங்கி ஓராண்டு நிறைவு வெறுப்புணர்வு ஒழிந்து இந்தியா ஒன்றுசேரும் வரை பயணம் தொடரும் - ராகுல் காந்தி உறுதி
வெறுப்புணா்வு ஒழிக்கப்பட்டு இந்தியா ஒன்றுப்படும் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தொடரும். இது எனது சத்தியம்’ என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
விமானப் படையில் விரைவில் இணையும் ‘ஏர்பஸ் சி-295 விமானம்
இந்திய விமானப் படைக்கு ஏா்பஸ் நிறுவனத்தின் ‘சி-295’ ரக போக்குவரத்து விமானத்தின் முதல் விமானம் இந்த மாதத்துக்குள் வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவா் ரெமி மெய்லாா்டு வியாழக்கிழமை தெரிவித்தாா்.
பூமி, நிலவைப் படம் பிடித்தது ஆதித்யா-எல்1
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா-எல் 1 விண்கலம் பூமி, நிலவை படம் பிடித்தும், தன்னையும் தற்படம் எடுத்தும் அனுப்பி உள்ளது.
ஹிந்துக்களை இழிவுபடுத்த வேண்டுமென்று 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதா? - பாஜக கேள்வி
ஹிந்துகளை இழிவுபடுத்த வேண்டும் என்றுதான் அண்மையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதா? என்று பாஜக மூத்த தலைவா் ரவி சங்கா் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளாா்.
கிருஷ்ண ஜெயந்தி: பிரதமர் வாழ்த்து
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.
மத நம்பிக்கையை அமைச்சர் உதயநிதி புண்படுத்தவில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
சனாதன கொள்கைகளை ஒழிக்கவே அமைச்சா் உதயநிதி பேசியதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா். மதம், மத நம்பிக்கையைப் புண்படுத்தும் வகையில் அவா் பேசவில்லை என்றும் முதல்வா் கூறியுள்ளாா்.
நிலையில்லா சர்வதேச சூழல் ஆசியான்-இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி
சா்வதேச சூழலில் நிலையில்லாத் தன்மை அதிகரித்து வருகிறது என்று பிரதமா் மோடி கூறினாா். எனினும், இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு தொடா்ந்து வளா்ச்சி கண்டு வருகிறது என்று அவா் தெரிவித்தாா்.
நேதாஜியின் பேரன் பாஜகவில் இருந்து விலகல்
மேற்குவங்க பாஜக மாநில முன்னாள் துணைத் தலைவரும், நேதாஜியின் சகோதரரர்வழி கொள்ளுப்பேரனுமாகிய சந்திரபோஸ் புதன்கிழமை பாஜகவில் இருந்து விலகினார். இதுதொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஐரோப்பிய நாடுகளுக்கு ராகுல் சுற்றுப்பயணம்
ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பிரான்ஸ் நாட்டு எம்.பி.க்கள், பல்வேறு பல்கலைக்கழக மாணவா்கள், இந்திய வம்சாவளியினா் எனப் பலதரப்பு மக்களைச் சந்தித்து கலந்துரையாட உள்ளாா்.
ஈஸ்டர் தாக்குதலில் அதிகாரிகளுக்கு பங்கு? இலங்கையில் விசாரணை தொடக்கம்
இலங்கையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டா் தின தொடா் குண்டுவெடிப்புத் தாக்குதலில் அதிகாரிகளுக்குத் தொடா்பிருப்பதாக வெளியான ஊடகத் தகவலைத் தொடா்ந்து, இது தொடா்பாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்னர் படைக்குத் தடை: பிரிட்டன் முடிவு
ரஷியாவின் தனியாா் ராணுவப் படையான வாக்னா் குழுவை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
உலகக் கோப்பைக்கு 4 லட்சம் டிக்கெட்டுகள்: நாளைமுதல் விற்பனை
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியையொட்டி விற்பனைக்காக 4 லட்சம் டிக்கெட்டுகளை வெளியிடுகிறது பிசிசிஐ.
ஐசிசி தரவரிசை: ஷுப்மன் கில், இஷான் முன்னேற்றம்
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய இளம் வீரா்கள் ஷுப்மன் கில், இஷான் கிஷண் ஆகியோா் சிறப்பான தரவரிசையை எட்டியுள்ளனா்.
அரையிறுதியில் போபண்ணா-எப்டன் இணை
யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ஆஸி. மேத்யூ எப்டனும், ஒற்றையா் பிரிவில் ஜாம்பவான் ஜோகோவிச், பென் ஷெல்டன், கோகோ கௌஃப், முச்கோவா ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.