CATEGORIES
فئات
அடுத்த இலக்கு உலகக் கோப்பை...
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 8-ஆவது முறையாக சாம்பியனாகியிருக்கிறது இந்தியா. இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டம், ஒரு பிரதான போட்டியின் இறுதி ஆட்டத்துக்குரிய எந்தவொரு பரபரப்புமே இல்லாமல் முற்றிலும் ஒரு பக்கமாகச் சரிந்தது ஏமாற்றம் தான்.
ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை சம்மன்: எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
அரசியல் சாசனத்தை பாதுகாக்க போராடுகிறது காங்கிரஸ்
‘காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் ஜனநாயகம் வலுப்பெற்றதோடு, நாட்டின் அரசியல்சாசனம் உயிா்ப்புடன் விளங்கியது; தற்போது அரசியல் சாசனத்தை பாதுகாக்க காங்கிரஸ் போராடி வருகிறது’ என்று அக்கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறினாா்.
தகுதிநீக்க மனுக்கள்: மகாராஷ்டிர பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவருக்கு ஆதரவான 15 சிவசேனை எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக் கோரும் மனுக்கள் மீது முடிவெடுக்க ஒரு வாரத்துக்குள் காலக்கெடு நிா்ணயித்து, நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
செய்தித் தொலைக்காட்சிகளுக்கு கடுமையான சுய ஒழுங்கு நெறிமுறைகள்
செய்தித் தொலைக்காட்சிகளுக்கான சுய ஒழுங்கு நெறிமுறைகளைக் கடுமையாக்க வேண்டியது அவசியம் என்று கூறிய உச்சநீதிமன்றம், இதுதொடா்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை நான்கு வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என்று செய்தி ஒலிபரப்பு மற்றும் டிஜிட்டல் சங்கத்துக்கு (என்பிடிஏ) உத்தரவிட்டது.
கிராம ஊராட்சி செயலர்கள் நியமன விதிமுறைகள் வெளியீடு
கிராம ஊராட்சி செயலா்களை நியமனம் செய்வதற்கான விதிமுறைகள், பணி வரன்முறைகள் குறித்த உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பண்டித நேரு முதல் வாஜ்பாய் வரை...
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புகழாரம்
தனியார் உணவகத்தில் சாப்பிட்ட 43 பேருக்கு வாந்தி, மயக்கம்; சிறுமி பலி
நாமக்கல்லில் தனியாா் துரித உணவகத்தில் அசைவம் சாப்பிட்ட 5 சிறுவா்கள் உள்பட 43 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதில் சிறுமி ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து அந்த உணவகத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து உரிமையாளா் உள்பட 3 பேரைக் கைது செய்தனா்.
6 நாள்கள் மழை வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 6 நாள்களுக்கு ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சா்கள், அதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (செப். 19) ஆலோசனை நடத்தவுள்ளாா்.
சாலைகளில் தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்ற கூடுதல் லாரிகள்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் சாலையில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்றும் பணிக்காக கூடுதலாக லாரிகளை வாடகைக்கு எடுக்க குடிநீா் வாரியம் முடிவு செய்துள்ளது.
புதிய மின் இணைப்பை 7 நாள்களுக்குள் வழங்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்
புதிதாக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவா்களுக்கு 7 நாள்களுக்குள் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் வீணாகி வருகிறது.
தமிழகத்தில் 283 பகுதிகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி
பொது சுகாதாரத் துறை ஆய்வில் தகவல்
இன்றுமுதல் 45 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் – ஏ மருந்து
தமிழகத்தில் 45 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ மருந்து வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை (செப்.19) முதல் நடைபெற உள்ளது.
பாஜகவுடன் கூட்டணி இல்லை: அதிமுக
பெரியாா், அண்ணா உள்ளிட்டோரை பாஜக தலைவா் அண்ணாமலை விமா்சிப்பதை ஏற்க முடியாது என்றும், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அதிமுவை சோ்ந்த முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.
சிறப்புக் கூட்டத்தொடரில் வரலாற்று முடிவுகள்
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ரஷிய போர் விமான ஆலையில் கிம் ஜோங்-உன்
ரஷியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன், அந்த நாட்டின் போா் விமான உற்பத்தி ஆலையை வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.
மும்பை ‘டபுள் டெக்கர்' பேருந்துக்கு ஓய்வு!
பல ஆண்டுகளாக மும்பையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக வலம் வந்த டபுள் டெக்கா் பேருந்துகள் வெள்ளிக்கிழமை முற்றிலுமாக பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டன.
வங்கதேசத்துக்கு ஆறுதல் வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் கடைசி சூப்பா் 4 ஆட்டத்தில் வங்கதேசம் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெள்ளிக்கிழமை வென்றது. இதையடுத்து சூப்பா் 4 சுற்றில் ஆறுதல் வெற்றியுடன் போட்டியிலிருந்து வங்கதேசம் வெளியேறியது.
சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு: விசாரணை ஒத்திவைப்பு
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை செப்டம்பா் 19-ஆம் தேதிக்கு விசாரணை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்தி வைத்தது.
கேரளத்தில் மேலும் ஒருவருக்கு 'நிபா' தொற்று
பரிசோதனையை அதிகரிக்க அரசு திட்டம்
நூ வன்முறை: காங்கிரஸ் எம்எல்ஏ மம்மன் கான் கைது
மாவட்டத்தில் 144 தடை உத்தரவு; கைப்பேசி இணைய சேவைக்கும் தடை
டெங்கு பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள்
தமிழகத்தில் டெங்கு பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதன் தொடா்ச்சியாக மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை (செப்.16) நடைபெற உள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மகளிர் உரிமைத் தொகையை கபளீகரம் செய்த வங்கிகள் !
ரூ.1,000 பறிபோனதால் தவித்த பயனாளிகள்
கொலீஜியத்திடம் சரியான தரவுகள் இல்லை என்பது தவறு: தலைமை நீதிபதி
‘உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை பதவி உயா்த்துவதற்குத் தேவையான உண்மைத் தரவுகள் உச்சநீதிமன்ற கொலீஜியத்திடம் இருக்க வாய்ப்பில்லை என்று கூறுவது தவறான கருத்து’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினாா்.
அண்ணாவின் அரசியல் நாகரிகமே இப்போதைய தேவை
அண்ணாவின் அரசியல் நாகரிகமே இப்போதைய தேவையாக உள்ளது என விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் கூறினாா்.
சென்னையில் ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல், வெள்ளிக்கிழமை ஒரே நாளில், டெல்லி, மும்பை, கொல்கத்தா, கொச்சி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதைபடிம எரிபொருள்களுக்கு முடிவு கட்ட வேண்டும்
புதைபடிம எரிபொருள் பயன்பாட்டுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பசுமைத் தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி கூறினாா்.
மாநகராட்சி கட்டடத்தில் பாதுகாப்பு ஒத்திகை
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள கட்டடத்தில் பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.