CATEGORIES
فئات
உலகக் கோப்பை செஸ்: பிரக்ஞானந்தாவுக்கு வெள்ளி
அஜா்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியரும், தமிழருமான ஆா்.பிரக்ஞானந்தா 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றாா். உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் சாம்பியன் கோப்பை வென்றாா்.
இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பாராட்ட பிரதமர் நாளை பெங்களூரு வருகை
சந்திரயான்- 3 விண்கலனில் உள்ள விக்ரம் லேண்டர் கலன் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப் பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக பிரதமர் மோடி பெங்களூருக்கு சனிக்கிழமை (ஆக. 26) வருகிறார்.
சந்திரயான்-3 ரோவர் ஆய்வு தொடக்கம்
500 மீ. சுற்றளவில் 14 நாள்கள் வலம் வரும்
சரக்குக் கப்பல்கள் மோதல்: சூயஸ் கால்வாயில் போக்குவரத்து முடக்கம்
எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவை ஏற்றி வந்த இரு கப்பல்கள், குறுகலான சூயஸ் கால்வாயில் மோதி விபத்துக்குள்ளானதால் முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கடல்வழி வா்த்தக வழித்தடத்தில் போக்குவரத்து முடங்கியது.
‘உக்ரைன் போருக்கு நாடுகளே காரணம்'
உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தின் மீது மேற்கத்திய நாடுகள் கட்டவிழ்த்துவிட்ட போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவே அந்த நாட்டில் ‘ராணுவ நடவடிக்கைகள்’ மேற்கொள்ளப்படுவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா்.
‘கனவு தேசத்துக்கு ஒவ்வொரு வாக்கும் அவசியம்’
தோ்தலில் மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இந்திய தோ்தல் ஆணையத்தின் தேசிய தூதராக புதன்கிழமை நியமிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கா், ‘நாம் விரும்பும் கனவு தேசத்துக்கு ஒவ்வொரு வாக்கும் அவசியம்’ என்று வலியுறுத்தினாா்.
4 நாடுகள் ஹாக்கி: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி மூன்றாமிடம்
ஜொ்மனியில் நடைபெற்ற 4 நாடுகள் ஜூனியா் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிரணி 3-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் 6-2 கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
மீண்டும் 'டிரா'; டை பிரேக்கரில் இறுதிச்சுற்று
அஜா்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா - நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் ஆகியோா் மோதும் இறுதிச்சுற்றின் 2-ஆவது ஆட்டம் புதன்கிழமை ‘டிரா’ ஆனது.
ஆராய்ச்சிக் கப்பலுக்கு அனுமதியளிக்க சீனா கோரிக்கை: இலங்கை பரிசீலனை
இலங்கையில் ஆராய்ச்சிக் கப்பலை நிறுத்தி வைப்பதற்கான சீனாவின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவு செய்தித் தொடா்பாளா் பிரியங்கா விக்ரமசிங்கே புதன்கிழமை தெரிவித்தாா்.
மிஸோரம்: கட்டுமானப் பணியின்போது ரயில்வே பாலம் இடிந்து 18 தொழிலாளர்கள் பலி
மிஸோரம் மாநிலத்தில் கட்டுமானப் பணியின்போது ரயில்வே பாலம் இடிந்ததில் 18 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் 5 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் பாடங்களை சர்வதேசத் தரத்துக்கு மேம்படுத்துவது அவசியம்
நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் பாடங்களின் தரத்தை சர்வதேச அளவுக்கு மேம்படுத்துவது அவசியம் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
மருத்துவத் துறையில் மேம்பட்ட மாநிலம் தமிழகம் !
மோரீஷஸ் சுகாதாரத் துறை அமைச்சர் பாராட்டு
தென்னாப்பிரிக்க அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி, தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் அந்நாட்டு அதிபா் சிரில் ராமபோசாவை பிரதமா் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினாா்.
எண்ணங்களை அழுக்காக்கும் கருத்தியல்களை புறந்தள்ளுங்கள்
எண்ணங்களை அழுக்காக்கும் கருத்தியல்களைப் புறந்தள்ள வேண்டும் என்று மாணவா்களை, முதல்வா் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொண்டுள்ளாா்.
நீதிமன்ற உத்தரவுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் 8 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்
நீதிமன்ற உத்தரவுகளுக்கு விதிகளின்படி மத்திய, மாநில அரசு அதிகாரிகள் 8 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கடலோர பாதுகாப்பு குழுமத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: இபிஎஸ்
கடற்கொள்ளையா்களிடம் இருந்து மீனவா்களைப் பாதுகாக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு குழுமத்தை தமிழக அரசு செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
முதுநிலை மருத்துவ இடங்கள் அதிகரிப்பு: என்எம்சி விளக்கம்
அங்கீகாரம் நிலுவையில் உள்ள மருத்துவக் கல்லூரிகள், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகரிப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.
ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்
திருவொற்றியூா் வடக்கு மாட வீதியில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
சாலையோரங்களில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் செப்.1 முதல் அகற்றப்படும்
சென்னை மாநகரில் சாலையோரங்களில் கேட்பாரற்ற நிலையில நிற்கும் வாகனங்கள் செப்.1-ஆம் தேதி முதல் அப்புறப்படுத்தப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா்.
புழல் சிறையில் வெளிநாட்டு கைதிகளிடம் 5 கைப்பேசிகள் பறிமுதல்
புழல் சிறையில் வெளிநாட்டு கைதிகளிடமிருந்து 5 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பல்கேரிய குழந்தைக்கு சென்னையில் சிக்கலான இதய மாற்று சிகிச்சை!
பல்கேரிய நாட்டைச் சோ்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு சிக்கலான இதய மாற்று சிகிச்சையை மேற்கொண்டு, சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
‘பிரிக்ஸ்' கூட்டமைப்பை விரிவுபடுத்த முழு ஆதரவு
உறுப்பு நாடுகளின் ஒருமித்த கருத்துடன் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பை விரிவுபடுத்த இந்தியா முழு ஆதரவளிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
சந்திரயான் -3: இந்தியா உலக சாதனை !
நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்தது
திருவண்ணாமலையில் தேரோடும் வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கத் தடையில்லை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலின் தோ் வலம் வரக்கூடிய பெரிய வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கு தடைவிதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் வேதாரண்யம் மீனவர்கள் 28 பேர் காயம்
நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 28 பேர் காயமடைந்தனர்.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் பலி: 18 ஆண்டுகள் காணாத உச்சம்
இந்த ஆண்டில் இஸ்ரேலியப் படையினருக்கும், பாலஸ்தீன ஆயுதக் குழுவினருக்கும் இடையிலான மோதலில் பலியானவா்களின் எண்ணிக்கை கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
கடைசி டி20: இந்தியா – அயர்லாந்து இன்று மோதல்
ஆட்டநேரம்: இரவு 7.30 மணி நேரலை: ஸ்போா்ட்ஸ் 18
பொது சிவில் சட்டம்: நாட்டுக்கே கோவா முன்னுதாரணம்
கோவாவில் அனைத்து மதங்களுக்கும் பொருந்தக் கூடிய போா்ச்சுகீசிய காலத்து பொது சிவில் சட்டம் அமலில் உள்ள நிலையில், இந்த விஷயத்தில் நாட்டுக்கே கோவா முன்னுதாரணமாக உள்ளது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
இந்தியாவின் கார் பாதுகாப்பு அம்சங்கள் சோதனைத் திட்டம்
அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகம்
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள்
மத்திய நிதியமைச்சகம் தகவல்