CATEGORIES
Kategorier
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் விளக்கம்
சென்னை, ஜூன் 1 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாடல்களை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்
தேனி, ஜூன் 1 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கண்டமனூர் விளக்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றும் மணிகண்டன் மற்றும் சார்பு ஆய்வாளர் திருமாறன் ஆகியோர் கொரோனா தடுப்பு பாடல்களை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள்.
1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ்
தமிழக தொடக்க கல்வி இயக்குநர் அறிவிப்பு
டாக்டர்கள் வார்டுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுரை கூறினார்கள் நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன்: முதலமைச்சரின் நெகிழ்ச்சி செயல்
கோவையில் உள்ள வரதராஜபுரம் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பியி.இகிட் எனப்படும் பாதுகாப்பு கவச அடை அணிந்து கொரோனா சிகிச்சை பிரிவிற்குள் சென்ற முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
மக்கள் சேவையில் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
கோவிட் 19 இன் இரண்டாவது அலையை அடுத்து, டிசிஐ குழுமம், அந்தமான் நிக்கோபார் மக்களுக்கு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் ஆதரவை வழங்கியுள்ளது.
சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறியூட்டி வழங்கல்
ரூபாய் 8 லட்சம் செலவில் 10 ஆக்சிஜன் செறியூட்டி, 50 ஆக்சிசன், முக கவசம் 10, தண்ணீர் இயந்திரம் மற்றும் 10 மின் விசிறி ஆகியவற்றை சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலனிடம் வர்த்தக சங்க தலைவர் சதீஷ் வழங்கினார்
கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு அரிசி வழங்கல்
புதுச்சேரி வெங்கடாசலம் ராஜம் என்ற பொண்ணம்மல் அறக்கட்டளை சார்பில் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு அரிசி மற்றும் காய்கறி வழங்கப்பட்டது.
ராஜா முத்தையா மருத்துவமனையில் 6000 கிலோ ஆக்சிஜன் சேமிப்பு மையம்: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்
சிதம்பரம், மே 29 கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 6000 கிலோ ஆக்சிஜன் சேமிப்பு மையத்தை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
முழு ஊரடங்கு நீட்டிப்பு: மளிகை கடைகள் எவ்வாறு பொருட்களை வினியோகம் செய்யலாம்?
சென்னை, மே 29 தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மளிகை கடைகள் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சி.டி.ஸ்கேன் எடுப்போர் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும்: ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவு
சென்னை, மே 29 சென்னை சோதனை மையங்களில் 'சி.டி.ஸ்கேன்' எடுப்போர் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என ஆணையர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
நடிகை சாந்தினியை யார் என்றே எனக்கு தெரியாது: முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
சென்னை, மே 29 தன் மீது புகார் கொடுத் துள்ள நடிகை சாந்தினியை யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பணம் பறிக்க இந்த பொய்யான புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
3 மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மீண்டும் ஆய்வு
கோவை, மே 29 சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
ரோட்டரி கிளப் மூலம் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்
திருநெல்வேலி, மே 28
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தனியார் திரையரங்கத்திற்கு சீல்
திருவண்ணாமலை, மே 28 திருவண்ணாமலை பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கொரோனா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவது குறித்த ஆய்வினை மேற்கொண்டார்.
படுகையனையை ஆய்வு செய்த எம்எல்ஏ
புதுச்சேரி, மே 28 புதுச்சேரி காட்டுக்குப்பம் ஏரிக்கரையில் அமைந்துள்ள படுகையனையை பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
DICV ஆலையில் தடுப்பூசி இயக்கம் துவங்கியது
புதுச்சேரி, மே 28 தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரகடத்தில் இருக்கும் Daimler இந்திய வணிக வாகனங்களுக்கான (DICV) உற்பத்தி ஆலையில் தடுப்பூசி மையத்தை இன்று திறந்து வைத்தார்.
ராசிமலை மலைவாழ் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய தேவதானப்பட்டி காவல் துறையினர்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி காவல் நிலையம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் மலைவாழ் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
தமிழ் உள்பட 8 மொழிகளில் பொறியியல் பாடங்கள் ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தகவல்
ஆங்கிலத்தில் உள்ள பொறியியல் பாடப் புத்தகங்களை தமிழ், இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.
கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் திறந்தார் இயக்குனர் லிங்குசாமி
இயக்குனர் லிங்குசாமி, கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் ஒன்றை திறந்துள்ளார். சென்னை மணப்பாக்கத்தில் இந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.
குமரியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆணையர் ஆய்வு
நாகர்கோவில் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் குறித்து ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கி இதுவரை 3 பேர் பலி!
கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுக்கா பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் வயது 55. இவர் கடந்த இருவாரங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த பின்பு அங்கிருந்து கடந்த 21ஆம் தேதி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு கெரோனா வைரஸ் தொற்று மற்றும் கருப்பு பூஞ்சை நோயும் இருப்பது தெரியவந்தது.
மாவு மில்லுக்கு அபராதம்
பட்டுக்கோட்டை வட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கும் விதமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது கொண்டிகுளம் அருகில் மாவு மில் இயங்கிக் கொண்டிருந்ததை சார் ஆட்சியர் பாலச்சந்தர் வைரஸ் தொற்று தீவிரத்தை எடுத்துரைத்து கடுமையாக கண்டித்தது மட்டுமல்லாமல், உடனடியாக மில்லை பூட்ட உத்தரவிட்டார்.
நாகர்கோவிலில் ஏடிஎம் மிஷின் சேதம் மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
நாகர்கோவிலில் ஏடிஎம் மிஷினை சேதப்படுத்திய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொரோனாவால் இறந்த மதிமுக துணை பொதுச்செயலாளர் உடல் அடக்கம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு (வடக்கூர்) பகுதியை சேர்ந்த ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துவிட்டார்.
உதயநிதி ஸ்டாலினிடம் கொரோனா தொற்று பேரிடர் நிதி வழங்கல்
கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர் தங்களுடைய பொருளாதாரங்களை வாரி வழங்கி வருகிறார்கள்.
உணவின்றி தவித்த நாய்களுக்கு உணவு வழங்கும் தீயணைப்புதுறை
டிஜிபி சைலேந்திரபாபுவின் நற்செயல்:
அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை
கொரோனா 2வது அலை பரவல் தமிழகத்தையே ஆட்டிவைத்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி போடும் பணிகளும், தடுப்பு நடவடிக்கைகளும் என அரசு ஒருபுறம் நடவடிக்கைகளை கையாண்டாலும், கொரோனா பரவல் தீவிரம் குறைந்தபாடில்லை. இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு , கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் கொரோனா வீரியத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையே இருக்கிறது.
ரஜினியுடன் மோத தயாராகும் அஜித்?
சென்னை, மே 24 திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு அலிவலம் கிராமத்தில் இளைஞர்கள் அசத்தல்
பட்டுக்கோட்டை, மே 24 கொரோனா வைரஸ் தொற்று பேராபத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் அரசு ஒரு பக்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.