CATEGORIES
Kategorier
108 அவசர சிகிச்சை ஊர்தி சேவை துவக்கம்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூரில் புதிய 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவையினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
மோடி பிறந்தநாள் விழாவில் சிறப்பு பூஜை
தேனியில் பிரதமர் நரேந்திர மோடி 70வது பிறந்த நாள் விழாவின் இரண்டாவது நாள் விழாவான நேற்று மாவட்ட நிர்வாகிகள் சார்பாக வீரபாண்டி கெளமாரியம்மன் கோவிலிலும், சின்னமனூர் பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. பின்னர் 500 பக்தர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
தோவாளை சானல் அருகே மலைப்பாம்பு: பொதுமக்கள் அச்சம்
தோவாளை சானல் அருகே மலைப்பாம்பு வனத்துறையினர் பிடிக்க முற்பட்ட போது சானலில் தப்பி சென்றது.
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது: 5 வாகனங்கள் பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி வீடிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக பாதிக்கப் பட்டவர் கள் காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்து போலீசார் மர்மநபர்களை தேடி வந்தனர்.
செண்பகராமன்புதூர் பகுதியில் அட்டகாசம் செய்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறை
செண்பகராமன்புதூர் பகுதியில் குரங்குகளின் அட்டகாசம், வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டு பகுதியில் விட்டனர்.
காணாமல்போன 130 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் செல்போன்கள் காணாமல்போனதாக அளிக்கப்பட்ட 130 புகார்களின் அடிப்படையில் திருச்சி மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்பேரில் 130 செல்போன்களும் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நகைக்கடை அதிபரை தாக்கி 8 பவுன் தங்க நகை பறிப்பு
திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). இவர் திருச்சி, பாலிக்கரை, எடத்தெரு பகுதியில் “ராஜன் ஜூவல்லரி” என்ற பெயரில் நகை கடை வைத்துள்ளார்.
முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீநித்திய கல்யாணப்பெருமாள்
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, முத்தங்கி அலங்காரத்தில் காரைக்கால் ஸ்ரீ நித்தியக் கல்யாணப்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
புதுச்சேரியில் மேலும் 543 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 543 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,227 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர் எஸ்பி அலுவலகத்தில் சூர்யா நற்பணி இயக்கம் மனு
கடலூர் சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் சார்பாக கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப் பாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் பிரபாத், செயலாளர் சுரேஷ் பொருளாளர் சதீஷ், இளைஞரணி செயலாளர் ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
அனைத்து சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலின்படி புதுச்சேரியில் ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி, ஏஐசிசிடியூ எல்எல்எப், ஏஐயூடியூசி, எம்எல்எப் அரசு ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங் களின் சார்பில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி ஸ்ரீமுஷ்ணம் அதிமுக கிழக்கு ஒன்றியம் சோழதரம் ஊராட்சியில் கழக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைக்கும் பணி சோழதரம் தண்டபாணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பு.முட்லூர் ஊராட்சியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
சிதம்பரம் சட்டமன்ற தொகுதியின் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட பு.முட்லூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் குடி நீர் குழாய் அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.
பலத்த காற்றில் ஆலமரம் முறிந்து மினி லாரியில் விழுந்தது
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்
தமிழகத்தில் பள்ளிகள் 5ம் தேதி திறக்க வாய்ப்பு
தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை பள்ளிக் கூடங்களை அக்டோபர் 5ந்தேதி திறக்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுவதால்: பீ.ஆர்.டி.சி. பஸ்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்: கொரோனா தொற்று பரவும் அபாயம்
குறைந்த எண்ணிக்கையில் பி.ஆர்.டி.சி.பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்திய, சீன லடாக் எல்லையில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனி மனைவி தேவிக்கு இளநிலை உதவியாளர் பணி ஆணை வழங்கினார் முதல்வர் பழனிசாமி
ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணி ஆய்வு கூட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் 3,501 நகரும் நியாயவிலை கடைகள் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு நிதி வழங்கல்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் தெற்கு மயிலோடை ஊராட்சி தலையால் நடந்தான்குளத்தில் மின்சாரம் தாக்கி பலியான பாலமுருகன் மனைவி அபிராமி மற்றும் குடும்பத்தாரிடம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து சொந்த நிதி ரூ.50,000 வழங்கினார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி எப்போது?
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) புரட்டாசி மாத பூஜை நிறைவடைகிறது. மேலும் கோவிலில் பக்தர்களை எப்போது அனுமதிக்கலாம் என்பது தொடர்பாக கேரள அரசு வருகிற 28 ந் தேதி ஆலோசனை நடத்துகிறது.
கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்தது
கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் நேற்று இரவு தமிழக எல்லையை வந்தடைந்தது. பூண்டி ஏரிக்கு இன்று வந்து சேரலாம் என கருதப்படுகிறது.
அதிமுக இளைஞர் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்
கடலூர் கிழக்கு மாவட்டம் குமராட்சி ஒன்றிய கழகத்தின் சார்பில் கழக இை ளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. பாண்டியன் துவக்கி வைத்தார்.
8 புதிய சாலை பணிகளுக்கு அமைச்சர் பூமிபூஜை
ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 8 புதிய சாலை பணிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
வேளாண் மசோதா விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சி: பிரதமர் மோடி
வேளாண் மசோதா விவகாரத்தில் விவசாயிகளை தவறாக வழிநடத்த சிலர் முயற்சிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மோடி பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் இலவச மருத்துவ முகாம்: எஸ்.தணிகைவேல் துவக்கி வைத்தார்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜகவின் சார்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு மருத்துவ பிரிவு மாநில தலைவர் விஜய பாண்டியன் வேண்டுகோளுக்கு ணங்க திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி எதிரில் உள்ள தீபமலை மெடிக்கல் இன்ஸ்டியூட் ஆப் எலக்டோபதி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்றது.
மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வி கற்க சிறப்பாக சேவை புரிந்த ஆசிரியைக்கு விருது
சிவகங்கையை தலைமையிடமாகக் கொண்டு 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கிளையை நிறுவி பல்வேறு சாதனைகள் புரிவோரை கண்டறிந்து சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
புதுச்சேரியில் புதியதாக 490 பேருக்கு கொரோனா பாதிப்பு
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 15 நாட்கள் பறக்க தடை
இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்விமானங்கள் 15 நாட்கள் பறக்க துபாய் அரசு தடை விதித்துள்ளது.
ஆரல்வாய்மொழியில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ஆரல்வாய்மொழியில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.