CATEGORIES
Kategorier
ஏனாமில் பலத்த மழை
புதுவை மாநிலம், ஏனாமில் திங்கள்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
வடகிழக்கு பருவ மழையின்போது எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வுக்கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் வடகிழக்கு பருவ மழையின் போது எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் டி வி எஸ் ஜவஹர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது.
முதல்வர் பழனிசாமியின் தாயார் காலமானதையடுத்து அவர் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணங்கள் அனைத்தும் ரத்து
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானதையடுத்து முதல்வர் இன்று மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் தாயார் மறைவு அரசியல் தலைவர்கள் இரங்கல்
முதலமைச்சர் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மாநில எல்லையில் பஸ்கள் நிறுத்தம் மூட்டை முடிச்சுகளுடன் பொதுமக்கள் அவதி
புதுவை மாநில எல்லையில் தமிழக பஸ்கள் நிறுத்தப்படுவதால் மூட்டை முடிச்சுகளை சுமந்து வரும் பயணிகளிடம் ஆட்டோ கட்டணம் அதிகமாக வசூலிப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் தர்ணா நாராயணசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு
புதுச்சேரியில் முதல் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், கட்டிட பணிகளை மேலாண்மை இயக்குநர் ஆய்வு
தாட்கோ, மேலாண்மை இயக்குநர் விஜயராணி பழங்குடியினர் மக்களுக்காக தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், கட்டிட பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடியாக தள ஆய்வு மேற்கொண்டார்கள்.
தாயார் உடலுக்கு முதல்வர் பழனிசாமி கண்ணீர் அஞ்சலி
சிலுவம்பாளையத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'எப்படியாவது படிக்க வேண்டும்' - புதுச்சேரி, காரைக்காலில் ஆர்வத்துடன் பள்ளி வரும் 9,11ம் வகுப்பு மாணவர்கள்
புதுச்சேரி, காரைக்காலில் 9, 11ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் அதிக அளவில் வந்திருந்தனர். தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் வருகை சதவீதம் அதிக அளவில் இருந்தது.
விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்டம் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பேரூராட்சி அலுவலங்களில் நகர்ப்புற வேலை திட்டத்தை துவங்கி பணி வழங்க கோரி கம்பை நல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு மனு அளித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருது வழங்கும் விழா
சேலம் ஏ.வி.ஆர். திருமண மண்டபத்தில் இந்து மக்கள் கட்சியின் சார்பாக விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு சமூக சேவகர் தேவராஜ் சேவையை பாராட்டி சேவா ரத்னா விருது வழங்கினார்.
தோவாளையில் அம்மா நகரும் நியாயவிலை கடை தொடக்க விழா
தோவாளையில் அம்மா நகரும் நியாய விலை கடைதொடக்க விழா நடைபெற்றது. தமிழக அரசின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட அம்மா நகரும் நியாய விலை கடை ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்கள் இருப்பிடத்திற்கே சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்
முதலமைச்சர் எடிப்பாடி பேச்சு
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்பு நீக்கம்
நடிகை குஷ்பு, பா.ஜனதாவில் இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுக்கு பிரதமர் மோடி இறுதி மரியாதை
பிரதமர் மோடி மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு அவரது இல்லத்தில் இன்று இறுதி மரியாதை செலுத்தினார்.
விவசாயிகளுக்கு நீர்ப்பாசனக் கடன் வழங்குவது குறித்து கூர்ந்தாய்வுக் குழு கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் சிறுகுறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசனக் கடன் வழங்குவது குறித்து கூர்ந்தாய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் குழு கூட்டத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்தல், கிணறு அமைத்தல், சொட்டு நீர்ப்பாசனம் போன்ற நீர்ப்பாசனம் வசதி ஏற்படுத்துதல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
தொல்லியல் படிப்பில் தமிழ் மொழி சேர்ப்பு
மத்திய அரசு அறிவிப்பு
புறவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு வயலுக்குள் இறங்கி விவசாயிகள் கையில் மண்சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டம்
புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி வயலுக்குள் இறங்கி கையில் மண்சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தை திருவையாறில், விவசாயிகள் நடத்தினர்.
சிறப்பு பாடல் குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வனத்துறை தூத்துக்குடி மண்டலம் சார்பில் வன உயிரின வார விழாவையொட்டி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை மூலம் தயார் செய்யப்பட்ட “மன்னார் வளைகுடாவின் சதுப்பு காடுகளும் இயற்கை வளங்களும்” சிறப்பு பாடல் குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு, சிறப்பு பாடல் தொகுப்பு குறுந்தகட்டினை வெளியிட்டார்.
எம்எல்ஏ பிரபு மனைவி சவுந்தர்யா கணவருடன் செல்ல அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு திருமண விவகாரத்தில் மனைவி சவுந்தர்யா கணவருடன் செல்ல அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு
மாலை நேரங்களில் வகுப்பு கிடையாது
அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி மூப்பனார் பேரவை பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
முதல்வரும் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையொட்டி வாழ்த்து தெரிவித்து சிதம்பரத்தில் மூப்பனார் பேரவை த.மா.கா சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பட்டுக்கோட்டையில் அதிமுக கொண்டாட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் அதிமுக நகர ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கூடி இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி அறிவிப்பு சிதம்பரத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
2021ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு விமான படை போர் வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
10 ஆயிரம் மீட்டர் பிரிவில் உலக சாதனை படைத்த உகாண்டா வீரர்
ஸ்பெயினில் நடந்த தடகள போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் பிரிவில் உகாண்டா வீரர் உலக சாதனை படைத்துள்ளார்.
சீர்காழி அருகே கார் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து காரில் இருந்த 8 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
நாகை மாவட்டம் சீர்கா அருகே மேலச்சாலை கிராமத்தில் சாலை ஓரம் அமைந்துள்ள வாய்க்காலில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தில் காரில் பயணித்த 4 சிறுவர்கள் உள்பட 8 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிரி தப்பினர்.
மரக்கன்றுகள் நடும் விழா
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாடசாமி சுந்தர்ராஜ் அறிவுரைகளின்படி மண்டபம் பேரூராட்சியில் காந்தி ஜயந்தியை முன்னிட்டு பல்வேறு டெங்களில் மரக்கன்றுகள் நடும் விழா பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி தலைமையில் நடைபெற்றது.
புரட்டாசி மாத அசுபதி ஆராதனை பெருவிழா
மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திரு மன்றம் மற்றும் திருவாவடு துறை திருமூலர் வழிபாட்டு மன்றம் நடத்தும் சித்தர்கள்
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் தாழில் துறை அமைச்சர் சம்பத் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி முன்னிலையில் நடைபெற்றது.