CATEGORIES
Kategorier
நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி காரைக்காலில் அங்கன்வாடி ஊழியர்கள் 4வது நாளாக தர்ணா போராட்டம்
நிலுவை ஊதியத்தை உடனே வழங்கவலியுறுத்தி, காரைக்காலில் நேற்று அங்கன்வாடி ஊழியர்கள் 4வது நாளாக தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக 49ஆம் ஆண்டு தொடக்க விழா
புதுச்சேரி சட்டமன்ற அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் அலு வலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆற்றங்கரையோரம் துண்டிக்கப்பட்ட கால் வீச்சு கடலூர் வள்ளி விலாஸ் மருத்துவமனை மீது வழக்கு
கடலூர் கெடிலம் ஆற்றங்கரையோரம் கிடந்த துண்டிக்கப்பட்ட கால் தொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் மேற்கொண்ட விசாரணை தொடர்பாக வள்ளி விலாஸ் மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஐஎப்எஸ் அதிகாரி பாலியல் தொல்லை தந்ததாகப் புகார்
புதுச்சேரி வனத்துறை ஐஎப்எஸ் உயர் அதிகாரி தினேஷ் கண்ணன், பாலியல் தொல்லை தந்ததாக அத்துறையிலுள்ள பெண் அதிகாரி காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார். இதையடுத்து, தினேஷ் கண்ணன் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அசோக் நகர் பகுதியில் உள்ள பூங்காவில் சபாநாயகர் ஆய்வு
இலாசுப்பேட்டை சட்டமன்ற தொகுதி அசோக் நகர் பகுதியில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் வனத்துறை கட்டுப் பாட்டில் உள்ள இடத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம் பூங்காவாக மாற்ற வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் 30 வருட கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தொகுதியின் சட்டமன்ற உறுப் பினரும் சபாநாயகருமான சிவக்கொழுந்து கடும் முயற்சியினால், அவ்விடம் பூங்காவாக மாற்றி அமைப்பதற்கு வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து உழவர்கரை நகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது எப்படி? முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
சேலம் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக கொண்டலாம்பட்டி காந்தி சிலை அருகில் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட நெசவாளர் அணி நேதாஜி முன்னிலையில், மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மாநில இளைஞரணி நிர்வாக செயலாளர் பாபு தலைமையில் அப்துல்கலாம் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நாளை (சனிக்கிழமை) காடியேற்றத்துடன் தொடங்குகிறது. 26ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க விழிப்புணர்வு: கண்களைக் கட்டி மிதிவண்டி ஓட்டிய சிறுவன்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆறு வயதுச் சிறுவன் கண்களைக் கட்டிக்கொண்டு புதுச்சேரியில் மிதிவண்டியை ஓட்டினார்.
தொற்றுநோய் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான தொற்று நோய் தடுப்பு குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திர சேகர் சாகமூரி தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்ததாவது,
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை பேரணி
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில செயலாளர் கௌரி ஒருங்கிணைத்தார்.
புதிய நான்கு வழிச்சாலை ஓரத்தில் உள்ள மண் சரிந்து தண்ணீர் வரும் கால்வாய் மூடியது
விவசாயம் பாதிக்கும் அபாயம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
லஞ்சம் வாங்கியதாக புதுவை நகராட்சி என்ஜினீயர் கைது: சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை
லஞ்சம் வாங்கியதாக புதுவை நகராட்சி என்ஜினீயரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். புதுவை கம்பன் கலையரங்கில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நகராட்சி சார்பில் துப்புரவுப் பணிகள், வீட்டு வரி, சொத்து வரி, குப்பை வரிவசூல், கடைகளுக்கு உரிமம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தலைமை செயலகத்தில் மீண்டும் கொரோனா பரவல்
3 நாட்களில் 56 ஊழியர்களுக்கு தொற்று உறுதி
தோஷத்தை நீக்குவதாக வீடு புகுந்து மாணவியை மிரட்டிய நெல்லை நபருக்கு தர்ம அடி
அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவரது வீட்டுக்கு மாலையில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். வீட்டில் தொழிலாளியின் 15 வயது மகள் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
உலக கை கழுவும் தினம் - கடலூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உலககை கழுவும் தினம் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தொடங்கி வைத்தார்.
வடக்கு தாமரை குளத்தில் பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் ஆண் பிணம்
வடக்கு தாமரைகுளம் மெயின் ரோடு அருகில் உள்ள ஒரு வீட்டில் இருந்து இன்று காலை தொடர்ந்து துர் நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.
நெல் கொள்முதல் நிலையத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த எம்.எல்.ஏ.
நெல் கொள்முதல் செய்யக்கோரி கொள்முதல் நிலையத்திற்கு பெட்ரோல் கேனுடன் திமுக எம்எல்ஏ வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தற்காப்பு கலை பயிற்சியில் ஈடுபட்ட திருச்சி டி.ஐ.ஜி. ஆனி விஜயா
ஆயுதப்படை போலீசாருடன் இணைந்து தற்காப்பு கலை பயிற்சியில் திருச்சிடி.ஐ.ஜி. ஆனி விஜயா ஈடுபட்டார்.
ஆரணி அருகே குடிமராமத்து பணிகளை பொதுப்பணித்துறை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ஆரணி அடுத்த ஆகாரம், லாடப்பாடி மற்றும் மருசூர் ஆகிய கிராமங்களிலுள்ள ஏரிகளில் ரூ.1 கோடியே 45 இலட்சத்து 75 ஆயிரம் மதிப்பிட்டில் நடைபெற்று வரும் குடிமராத்து திட்டத்தின் பணிகளை தமிழக பொதுப்பணித்துறை குடிமராமத்து கண்காணிப்பு அலுவலர் மன்மதன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை
புதுச்சேரி மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ள பள்ளிகளை உடனே மூடக் கோரி, காரைக்காலில் வாட்ஸ்அப் போராளிக் குழுவினர், நேற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரிடர் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
கடலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மூலம் முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி மற்றும் கலந்தாய்வுக்கூட்டம் மற்றும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடைபெற்றது.
விண்வெளி ஆய்வு மைய போட்டி சிதம்பரம் மாணவிகள் தேர்வு
இந்திய விண்வெளி ஆய்வு மைய போட்டிகளில் பங்கேற்க சிதம்பரம் வீனஸ் குழும பள்ளி மாணவிகள் 2 பேர் தகுதி பெற்று பெங்களூரில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையம் சார்பில் "மின்வெளி போட்டி 2020” அறிவிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி நோட்டீசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு திரும்ப பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினி தரப்பு தகவல்
சென்னை மாநகராட்சி நோட்டீஸுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை திரும்ப பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினி தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நவம்பர் 3ந்தேதி அனைத்து கட்சி கூட்டம்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
சிமெண்ட் சாலை சீரமைக்கும் பணி
புதுச்சேரி முத்தியால்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் நகர் செபஸ்தியார் கோவில் வீதியில் உள்ள சிமெண்ட் கான்கிரீட் சாலை சேதமடைந்திருந்தது. இதேபோல ரங்க விலா ஸ்தோட்டம் பகுதியிலும் சாலை சேதமடைந்திருந்தது.
காரைக்காலில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி
காரைக்கால் மாவட்ட பேரிடர் மேலாண்மை மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து, காரைக்காலில் நேற்று சுனாமி ஒத்திகை நிகசியை நடத்தியது.
கனகன் ஏரியில் மீண்டும் மீன்கள் செத்து மிதந்தன கொரோனா மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதா?
புதுவை கனகன் ஏரியில் மீண்டும் மீன்கள் செத்து மிதக்கின்றன. அங்கு கொரோனா மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றனவா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கண்டன ஆர்ப்பாட்டம்
செண்பகராமன்புதூரில் இயங்கி வரும் தனியார் அரிசி ஆலையின் மூலம் சுகாதார கேடு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செண்பகராமன் பு தூர் ஊராட்சிக்குட்பட்ட ஆதிச்சன்புதூர் காலனி , சிதம்பரநகர், காந்திநகர் போன்ற குக்கிராமங்கள் உள்ளன.